Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா… காரணம் என்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா… காரணம் என்ன

 

 

 
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இதற்கான காரணங்கள் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thiru-moorthy.jpg
ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 3ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ்-வை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. மொத்தமுள்ள 15 நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன. 11 நாடுகள் ஆதரவு தெரிவித்தபோதிலும் நிரந்தர உறுப்பினருக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா தோல்வியுறச் செய்தது.
வாக்கெடுப்பில் பங்கேற்காதது தொடர்பாக ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி அளித்துள்ள விளக்கத்தில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மனித உயிர்களை விலையாக வைத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது. பேச்சுவார்த்தை பாதையை கைவிட்டது வருத்தம்கொள்ள செய்கிறது. நாம் அந்த பாதைக்கு மீண்டும் திரும்ப வேண்டும். இந்த அனைத்து காரணங்களுக்காகவே தீர்மானத்தை இந்திய புறக்கணித்ததாக கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/167625

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு பச்சோத்தி 🤣

சீனாவிடம் அடி வாங்கும் போது தெரியும்  😂

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2022 at 12:40, nunavilan said:

மனித உயிர்களை விலையாக வைத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது. பேச்சுவார்த்தை பாதையை கைவிட்டது வருத்தம்கொள்ள செய்கிறது.

இந்தச் சிந்தனை ஏன் அயல்நாடான தமிழீழம் அழிக்கப்படும்போதும் இணைந்து அழித்தபோதும்  வரவில்லை. எனக்கென்னவோ இந்த உலகு 2008 முதல் 2009வரை உறைந்துபோயிருந்ததோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, nochchi said:

இந்தச் சிந்தனை ஏன் அயல்நாடான தமிழீழம் அழிக்கப்படும்போதும் இணைந்து அழித்தபோதும்  வரவில்லை. எனக்கென்னவோ இந்த உலகு 2008 முதல் 2009வரை உறைந்துபோயிருந்ததோ.

இந்தியாவானாலும் சரி மேற்குலகமாய் இருந்தாலும் சரி ஏன் சீனாவாக இருந்தாலும் சரி எல்லாரும் ஈழத்தமிழர்  விடயத்தில் ஒரு குட்டையில் ஊறின மட்டைகள் தான்....

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nochchi said:

இந்தச் சிந்தனை ஏன் அயல்நாடான தமிழீழம் அழிக்கப்படும்போதும் இணைந்து அழித்தபோதும்  வரவில்லை. எனக்கென்னவோ இந்த உலகு 2008 முதல் 2009வரை உறைந்துபோயிருந்ததோ.

 

13 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவானாலும் சரி மேற்குலகமாய் இருந்தாலும் சரி ஏன் சீனாவாக இருந்தாலும் சரி எல்லாரும் ஈழத்தமிழர்  விடயத்தில் ஒரு குட்டையில் ஊறின மட்டைகள் தான்....

இந்த ஐ.நா. கூட்டத்துக்கு…. பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் சார்பில்,
ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கூட அக்கறை எடுத்து செல்லவில்லையே.
”உடையார்…. பொல்லை அனுப்பின மாதிரி”  கடிதம் அனுப்பி விட்டு.. இருந்து விட்டார்கள்.

எமது ஆட்களே… இவ்வளவு அலட்சியமாக இருந்தால், மற்றவன் ஏன்… மினக்கெட போகின்றான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

இந்தச் சிந்தனை ஏன் அயல்நாடான தமிழீழம் அழிக்கப்படும்போதும் இணைந்து அழித்தபோதும்  வரவில்லை. எனக்கென்னவோ இந்த உலகு 2008 முதல் 2009வரை உறைந்துபோயிருந்ததோ.

நீங்கள் வேறை. அமெரிக்கன் செனட்டர் இன்றைக்கு திருவாய்மலர்ந்தருளியது ; யுக்ரேனில் இனப்படுகொலை நடைபெறுகிறதாம். ஜெனிவா விதிமுறைகளை மீறி  ரஸ்யா போர் நடத்துகிறதாம். எங்கே அந்த நோர்வே கள்ளன்? தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை இல்லை என்று மனச்சாட்சி இல்லாமல் கூறியவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.