Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேனியர்களுக்கு உதவ.... பொதுமக்களிடம், நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனியர்களுக்கு உதவ பொதுமக்களிடம் நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள்!

உக்ரேனியர்களுக்கு உதவ... பொதுமக்களிடம், நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள்!

தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழுவால் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்பாம் மற்றும் சேவ் தி சில்ட்ரன் உள்ளிட்ட பதினைந்து பிரித்தானிய உதவி நிறுவனங்கள், பொதுமக்களிடம் நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றன.

உக்ரைனில் வீடுகள் அழிக்கப்பட்டு, தண்ணீர் விநியோகம், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்களுக்கு அவசரமாக உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி தேவை என்று தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், மொத்தம் 20 மில்லியன் பவுண்டுகள் வரை மேல்முறையீட்டுக்கான பொது நன்கொடைகள் பிரித்தானிய அரசாங்கத்தால் இரட்டிப்பாக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1270159

##############   #############   ##############

உக்ரேன்... இதுவரை, கள்ளச்  சந்தையில்... 
ஆயுதம் விற்ற காசை எடுத்து செலவழிக்க வேண்டியதுதான். 
இவங்களுக்கு... ஒரு சதமும், கொடுக்காதீர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரேன்... இதுவரை, கள்ளச்  சந்தையில்... 
ஆயுதம் விற்ற காசை எடுத்து செலவழிக்க வேண்டியதுதான். 
இவங்களுக்கு... ஒரு சதமும், கொடுக்காதீர்கள். 

போரால் பாதிக்கப்பட்ட குழந்தையள் எண்டு காசு சேர்க்கிறாங்கள்....கள்ளர் கூட்டங்கள்.
சண்டைய நிப்பாட்ட வக்கில்லாத மேற்குலகம்.😡😡😡😡😡😡

உலகின் இந்த இரட்டைப் போக்கை காண காண சகிக்குது இல்லை.

ஆபிரிக்கர்களும், அல்பேனியர்களும், அரேபியர்களும், யேமனியர்களும் வறுமையாலும், மேற்கின் அனுசரணையுடன் தம்மீது ஏவப்பட்ட யுத்தங்களாலும் இலட்சக்கணக்கில் அகதிகளாகும் போது அவர்களுக்காக தம் எல்லை கதவுகளை அடித்துச் சாத்திய இந்த ஐரோப்பா இன்று வெள்ளைத் தோல் உக்ரேனியர்களுக்காக அகலத் திறந்து கொண்டு அரவணைக்கின்றது, உதவிகளை வாரி வழங்குகின்றது.

மேற்குலகின் அப்பட்டமான அனைத்து இரட்டை வேடங்களும் இந்த போரில் அம்பலப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

போரால் பாதிக்கப்பட்ட குழந்தையள் எண்டு காசு சேர்க்கிறாங்கள்....கள்ளர் கூட்டங்கள்.
சண்டைய நிப்பாட்ட வக்கில்லாத மேற்குலகம்.😡😡😡😡😡😡

மேற்குலகம் சண்டையை நிற்பாடுவதற்கு பதில் ஆயுதங்களை அள்ளி அள்ளி வழங்குகிறார்கள்.

3 minutes ago, nunavilan said:

மேற்குலகம் சண்டையை நிற்பாடுவதற்கு பதில் ஆயுதங்களை அள்ளி அள்ளி வழங்குகிறார்கள்.

மேற்குலகு தான் சதாமை வளர்த்து விட்டது. பின் லாடனை வளர்த்து விட்டது, ஆப்கன் மக்களை காப்பாற்றுகின்றோம் என்று போய் முற்று முழுதாக கைவிட்டது.... அந்த வரிசையில் உக்ரேன் மக்களும் அவர்களின் இன்றைய சனாதிபதியும் விரைவில் இணைவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனியர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டும் திட்டம்: முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை!

உக்ரேனியர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டும் திட்டம்: முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை!

உக்ரைனில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவுமாறு பிரித்தானிய பேரிடர் அவசரக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டுவரும் நிதி திரட்டும் திட்டத்தின் முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள் திரட்டப்பட்டுள்ளது.

இந்த நன்கொடையில், ராணி, வேல்ஸ் இளவரசர் மற்றும் கேம்பிரிட்ஜ் டியூக் ஆகியோரின் நன்கொடைகளும் அடங்கும் என பிரித்தானிய பேரிடர் அவசரக் குழு தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான மக்கள் மனிதாபிமான முயற்சிக்கு நன்கொடை அளித்தனர்.

மொத்தத்தில் பிரித்தானிய அரசாங்கம் அதன் UK Aid Match திட்டத்தின் ஒரு பகுதியாக நன்கொடையாக வழங்கிய 20 மில்லியன் பவுண்டுகளும் இதில் அடங்கும்.

பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஒக்ஸ்பாம் மற்றும் சேவ் தி சில்ட்ரன் உள்ளிட்ட பதினைந்து பிரித்தானிய உதவி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பொதுமக்களிடம் நன்கொடை கேட்கின்றன.

கடந்த வியாழக்கிழமை ரஷ்யப் படைகள் படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.

https://athavannews.com/2022/1270458

##############   ################   ##############

இதில் பெரும் பகுதி நன்கொடை.... 
இங்கிலாந்தில் வாழும், சில ஈழத்தமிழர்களால் வழங்கப் பட்டது என்று...
நம்ம ஊரில், கதைக்கிறார்கள்.  😂 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.