Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையுடன், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கின்றது... சர்வதேச நாணய நிதியம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

இலங்கையுடன், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கின்றது... சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது பேசப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சென்யோங்-ரி கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசியிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணத்துக்காக இலங்கை இன்னும் விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கோரிக்கை விடுக்கப்பட்டால், அதனை பரிசீலிக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்தவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

IMF உடனான உடன்பாட்டை எட்ட காலம் தாழ்த்தியது ஏன்?

March 18, 2022

spacer.png

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் ஏன் தாமதப்படுத்தியது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்திலேயே இந்தக் கேள்வியை எழுப்பிய அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது,

இலங்கையின் வருடாந்த கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் மற்றும் பிறவற்றை செலுத்துவதற்கான வழியை தேடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது என்று ஜனாதிபதி, புதன்கிழமை (16) இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னர், நன்மை தீமைகளை ஆராய்ந்த பின்னர் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு ஒரு நேர்மறையான நடவடிக்கையாக இருந்தால், தற்போதைய சிரமங்களைத் தணிக்க நிதியத்தின் ஆதரவை முன்னரே நாடியிருக்க வேண்டும் என்றார்.

இவ்வாறானதொரு நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் பிரபல்யத்தை பெற்றுக்கொள்வதற்காக 600 பில்லியன் ரூபாய் பெறுமதியான வரிச்சலுகைகள் வழங்கப்படுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூபாயை செயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் இதனால் நாடு 4 பில்லியன் டொலர் வருமானத்தை இழக்கும் என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

பொதுமக்கள், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது ஒருபுறமிருக்க, எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவமே தற்போதைய பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

https://globaltamilnews.net/2022/174267

எங்களது தமிழ் ஈழத்தை திருப்பி தாருங்கள். நாங்கள் உங்களுக்கு டாலர் தாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

  IMF இடம் கடனை பெற்றால் செலவுக்கான கணக்குகள் காட்டப்பட வேண்டும் . இது சிங்களத்துக்கு வேப்பங்காய்  என்பதால் IMF உடன் உடன்பாட்டுக்கு வர காலத்தை இழுக்கிறது.

2019 இல் கோட்டபாயா ஆட்சிக்கு வரும்போது இலங்கையின் டொலர் கையிருப்பு 7.5 பில்லியனாக இருந்துள்ளது. சென்ற மாதம் 2.3 பில்லியனாக கஜானா காலி செய்யப்பட்டுள்ளது. இதற்கு கொரோனாவைக் காரணம் காட்ட முடியாது. முன்னேற்றத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கியிருந்தால் நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது. இன மத வாதப் பிரச்சனைகளிலேயே இலங்கை மக்களின் கவனம் முழுவதும் இருந்துள்ளது. மதங்களை முன்னிறுத்திய சமுகங்கள் வளரும்வரை இலங்கை முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல முடியாது.  

S&P Global Ratings சென்ற ஜனவரியில் CCC- ஆகத் தரப்படுத்தப்பட்டபடியால் இலங்கை உலகச் சந்தையில் எங்கும் கடன் பெற முடியாத நிலையில் சர்வதேச நாணய நிதியத்தினை நாடியுள்ளது.

இலங்கையின் இன்றைய நிலையால் பாதிக்கப்படுவது சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழரும்தான். இனி வரும் காலங்களில் தமது வாழ்வாதாரத்தைத் தாங்களாகவே தக்கவைத்துக் கொள்ளக் கூடிய வழிகளைத் தேடுவது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிய கடனை கொள்ளையடிச்சு ஏப்பம் விட்டவர்கள் இனி விடமுடியாது, விகாரைகள் கட்ட முடியாது, சிறுபான்மையினரை அடக்கியாள முடியாது, கொடுக்கும் ஒவ்வொரு சதத்துக்கும் ஒழுங்காய் கணக்கு காட்ட வேண்டும். இது நம்ம நாட்டு அரசியல் கலாசாரத்துக்கு ஒத்துவராது! 

இன்னும் யோசிச்சுக்கொண்டிருந்தால் இந்தக்கதவும் விரைவில் மூடப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.