Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறையைக் கைவிட்டால் புலிகளுடன் பேச்சுகளுக்குத் தயார்: அமைச்சர் ரோகித போகல்லாகம

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையைக் கைவிட்டால் புலிகளுடன் பேச்சுகளுக்குத் தயார்: அமைச்சர் ரோகித போகல்லாகம

[வியாழக்கிழமை, 2 ஓகஸ்ட் 2007, 18:39 ஈழம்] [சி.கனகரத்தினம்]

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

மணிலாவில் ஆசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்தின் பின்னர் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் ரோகித போகல்லாகம கூறியதாவது:

இலங்கையில் அரசியல் பேச்சுக்கள் மூலம் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவில்லை. ஆனால் போராளிகள் தங்களது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகளுடன் நாளையே பேச்சுக்களை நடாத்த முடியும். அவர்கள் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் கைவிட வேண்டும்.

எமது நாட்டு கடற்பரப்பில் ஆட்கடத்தல்கள், போதைப் பொருட்கள் கடத்தல்கள், ஆயுதக் கடத்தல்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்கு இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் எமது நாட்டு காவல்துறைக்கு உதவ வேண்டும்.

சிறு படகுகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஆயுதங்களைக் கடத்திக்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அத்தகைய கடத்தல் கலங்களை சிறிலங்கா அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அழித்துக்கொண்டு வருகிறது.

வானிலும் தரையிலும் தாக்குதல் நடத்திய அவர்கள் தற்போது கடற்பரப்பில் தாக்குதல்களை நடத்துகின்றனர். கப்பல்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் என்பது அனைத்துலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றார் அவர்.

புதினம்

அதைத்தான் புலிகளும் சொல்கிறார்கள்

வானிலும் தரையிலும் தாக்குதல் நடத்திய அவர்கள் தற்போது கடற்பரப்பில் தாக்குதல்களை நடத்துகின்றனர். கப்பல்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் என்பது அனைத்துலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றார் அவர்.

கடலிலே புலிகளின் ஆதிக்கம் புதியதல்ல. இதை எதற்கு இப்போது குறிப்பிடுகிறார் ?

அமெரிக்க இந்திய கூட்டணிக்கு வக்காலத்து வாங்குகிறாரா ?

கடலிலே புலிகளின் ஆதிக்கம் புதியதல்ல. இதை எதற்கு இப்போது குறிப்பிடுகிறார் ?

அமெரிக்க இந்திய கூட்டணிக்கு வக்காலத்து வாங்குகிறாரா ?

:rolleyes::rolleyes:

போகல்லாகம பூச்சாண்டி காட்டுறார். அமெரிக்கா தனக்கு பாரிய இழப்பு வரும் என்ற இடங்களில் இனி எப்பவுமே போர் தொடங்காது. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுடைய நீண்ட மெளனம்தான் இவர்களுது பயக்கெடுதிக்கு காரணம்.. அதனால்தான் நித்திரையில் அலட்ட வெளிக்கிட்டுவிட்டார்கள்.

நாங்கள் இவர்களை கணக்கில் எடுக்க தேவையில்லை..

Edited by Kishaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes::rolleyes:

போகல்லாகம பூச்சாண்டி காட்டுறார். அமெரிக்கா தனக்கு பாரிய இழப்பு வரும் என்ற இடங்களில் இனி எப்பவுமே போர் தொடங்காது. :lol::lol:

மிகவும் தப்பான கணக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுடைய நீண்ட மெளனம்தான் இவர்களுது பயக்கெடுதிக்கு காரணம்.. அதனால்தான் நித்திரையில் அலட்ட வெளிக்கிட்டுவிட்டார்கள்.

நாங்கள் இவர்களை கணக்கில் எடுக்க தேவையில்லை..

புலிகளுடைய மெளனம் தென்னிலங்கையில் ஏற்படபோகும் அரசியல் குழப்பநிலையும் ஒரு காரணமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 03-08-2007 02:50 மணி தமிழீழம் [மயூரன்]

கடற் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கடற் பிரதேசங்களை மீட்பதற்கு சர்வதேசத்தின் உதவி

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கடற் பிரதேசங்களை மீட்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை கோரியுள்ளது.

முதல் தடவையாக ஆசியான் மகாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஸ்ரீலங்காவின் வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லாகம் அனைத்துலக நாடுகள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசியான் மகாநாட்டில் தமது முக்கிய கோரிக்கை கடல் பாதுகாப்பு பற்றியதாகவே அமைந்துள்ளதாகவும் கடலாதிக்கம் போராளிகளிடம் இருப்பது பிராந்திய நாடுகளுக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் ஆபத்தானது என்பதால் கடல் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கு அனைத்துலக சமூகம் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

pathivu

இந்து சமுத்திரம் இப்போதும் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது. அதற்கு ஏதும் நடக்கவில்லையே. இவர்கள் தங்களைப் பாதுகாக்க கோரிக்கை விடப் போகின்றார்கள்.

புலிகளுடைய நீண்ட மெளனம்தான் இவர்களுது பயக்கெடுதிக்கு காரணம்.. அதனால்தான் நித்திரையில் அலட்ட வெளிக்கிட்டுவிட்டார்கள்.

இதுதான் உண்மையான காரணம்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கடற் பிரதேசங்களை மீட்பதற்கு சர்வதேசத்தின் உதவி கோரல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கடற் பிரதேசங்களை மீட்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை கோரியுள்ளது.

முதல் தடவையாக ஆசியான் மகாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஸ்ரீலங்காவின் வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லாகம் அனைத்துலக நாடுகள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசியான் மகாநாட்டில் தமது முக்கிய கோரிக்கை கடல் பாதுகாப்பு பற்றியதாகவே அமைந்துள்ளதாகவும் கடலாதிக்கம் போராளிகளிடம் இருப்பது பிராந்திய நாடுகளுக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் ஆபத்தானது என்பதால் கடல் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கு அனைத்துலக சமூகம் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.