Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிலிப்பைன்ஸின்... முன்னாள் சர்வாதிகாரியின் மகன், ஜனாதிபதியாக தேர்வு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் ஜனாதிபதியாக தேர்வு?

பிலிப்பைன்ஸின்... முன்னாள் சர்வாதிகாரியின் மகன், ஜனாதிபதியாக தேர்வு?

பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் ஃபெர்டினாண்ட் ‘போங்பாங்’ மார்கோஸ் ஜூனியர், ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெறத் தயாராகிவிட்டதாக, பகுதி மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஃபெர்டினாண்ட் ‘போங்பாங்’ மார்கோஸ் ஜூனியர், இதுவரை 55.8. சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது. போட்டியாளரான லெனி ராப்ரிடோ 28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

போங்பங்கின் வெற்றி 36 ஆண்டுகளுக்குப் பிறகு மார்கோஸ் குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் குறிக்கின்றது.

கடும் ஊழலில் இருந்த அவரது குடும்பத்தின் ஆட்சிக்காலத்தை பொற்காலம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அவரது தந்தை, முன்னாள் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ், அவரது கொடூரமான சர்வாதிகார ஆட்சிக்கு பெயர் பெற்றவர்.

மார்கோஸ் சீனியர், மனைவி இமெல்டா மற்றும் அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து, 1986இல் ஒரு மக்கள் கிளர்ச்சியால் அகற்றப்படுவதற்கு முன்பு, பொது நிதியிலிருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையடித்தனர்.

இந்த காலகட்டத்தில் பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் பெரும் கடனில் இருந்தது மற்றும் சாதாரண மக்கள் இதற்கெதிராக போராடினர்.

https://athavannews.com/2022/1281088

4 hours ago, தமிழ் சிறி said:

மார்கோஸ் சீனியர், மனைவி இமெல்டா மற்றும் அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து, 1986இல் ஒரு மக்கள் கிளர்ச்சியால் அகற்றப்படுவதற்கு முன்பு, பொது நிதியிலிருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையடித்தனர்.

இந்த காலகட்டத்தில் பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் பெரும் கடனில் இருந்தது மற்றும் சாதாரண மக்கள் இதற்கெதிராக போராடினர்.

அப்ப  இலங்கையில் 2058?

 

Edited by Hana

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர் வென்றது அமெரிக்காவுக்கு நல்ல செய்தி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முன்னாள் உட்கர்ந்திருக்கும் பிலிபினோ நண்பன் ரொனால்ட் இடம் கேட்டேன் இவன் சர்வாதிகாரி இல்லையாம் பல நல்ல திட்டங்களை நாட்டிற்கு கொண்டு வந்து முன்னேற்றியவராம். பொறாமயினால் இப்படி இவரை தூற்றுகின்றார்களாம். 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, colomban said:

எனக்கு முன்னாள் உட்கர்ந்திருக்கும் பிலிபினோ நண்பன் ரொனால்ட் இடம் கேட்டேன் இவன் சர்வாதிகாரி இல்லையாம் பல நல்ல திட்டங்களை நாட்டிற்கு கொண்டு வந்து முன்னேற்றியவராம். பொறாமயினால் இப்படி இவரை தூற்றுகின்றார்களாம். 

30 மில்லியனுக்கு அதிகமான மேலதிக வாக்குகளால் வென்றவர் மரர்கோசின் மகன். இவரின் தந்தை மார்கோஸ் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் என் கிறார்கள்.
அமெரிக்க ஆதரவு பெற்ற வேட்பாளர் படு தோல்வி அடைந்ததால் மேற்கு ஊடகங்கள் சர்வாதிகாரரின் மகன் என்ற அடை மொழியை கொடுத்து வென்றுள்ளார் என்று கூறுகிறார்கள்.
பிலிப்பைன்சில் உள்ள resources கொள்ளை அடிப்பதே அமெரிக்காவின் குறிக்கோள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிலிப்பைன்ஸ் வரை போவான்.. ஒரு காலத்தில் துரத்தி அடிக்கப்பட்ட சிறீமாவோ அம்மையாரின் வாரிசுகள் பின்னர் அரசுக் கட்டில் ஏறவில்லையா.. இதே நாளை நாமலும் மீண்டும் பதவிக்கு வரலாம். மக்களிடம் மறதி உள்ளவரை.. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.