Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை ஆள யார்வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950

இலங்கையை ஆள யார்வேண்டும்?
அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை 
விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும்
இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா
குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும்

புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச்
சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும்.
இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா?
அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார்.

நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப்
புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர்
இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு
சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர்

வெறிபிடித்தலைந்த கூட்டம் வேற்றின மக்கள்தன்னை
நெறிபிறழ்ந்துயிர் பறித்த நீசர்கள் சுயநலத்தர்
அறிவிலாதுரக்க “அப்பே ஆண்டுவ” எனக்குரைத்த
சொறியர்கள் இனபேதத்தால் தூய்மையைக் கெடுத்தகூட்டம்

பேரினவாதரென்னும் பேயர்கள், பிடிவா தத்தால்
ஓரினம் மட்டுமாள உரிமைகள் மற்றோர்க்கில்லாக்
காரியம் பலவும் செய்து கல்வியை மறுத்துத்தீய
போரினாலடக்கிப் புத்தன் புகழினைக் கெடுத்த கூட்டம்

போனநற் பெயரையிந்தப் புவியினில் மீட்டாலன்றி
ஆனநல்லுதவி சேர்ந்தும் ஆவது ஒன்றுமில்லை.
ஈனர்;தம் குணத்தால்வேற்று இனத்தரை மதியாராகில்
ஊனமுற் றிலங்கையிந்த உலகினில் தோற்றுப்போகும்

ஆனதனாலே இந்த அவனியின் ஆசிவேண்டில் 
போனது போக இன்று பொருமிடும் மாற்றினத்தோர்
தானினியுதவி யென்று தமிழரின் உரிமைபோற்றி
மாநில ஆட்சிதன்னை வழங்கலே நன்மை சேர்க்கும்.
 

 

Edited by karu

  • karu changed the title to இலங்கையை ஆள யார்வேண்டும்?
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, karu said:

https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950

இலங்கையை ஆள யார்வேண்டும்?
அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை 
விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும்
இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா
குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும்

புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச்
சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும்.
இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா?
அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார்.

நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப்
புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர்
இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு
சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர்

வெறிபிடித்தலைந்த கூட்டம் வேற்றின மக்கள்தன்னை
நெறிபிறழ்ந்துயிர் பறித்த நீசர்கள் சுயநலத்தர்
அறிவிலாதுரக்க “அப்பே ஆண்டுவ” எனக்குரைத்த
சொறியர்கள் இனபேதத்தால் தூய்மையைக் கெடுத்தகூட்டம்

பேரினவாதரென்னும் பேயர்கள், பிடிவா தத்தால்
ஓரினம் மட்டுமாள உரிமைகள் மற்றோர்க்கில்லாக்
காரியம் பலவும் செய்து கல்வியை மறுத்துத்தீய
போரினாலடக்கிப் புத்தன் புகழினைக் கெடுத்த கூட்டம்

போனநற் பெயரையிந்தப் புவியினில் மீட்டாலன்றி
ஆனநல்லுதவி சேர்ந்தும் ஆவது ஒன்றுமில்லை.
ஈனர்;தம் குணத்தால்வேற்று இனத்தரை மதியாராகில்
ஊனமுற் றிலங்கையிந்த உலகினில் தோற்றுப்போகும்

ஆனதனாலே இந்த அவனியின் ஆசிவேண்டில் 
போனது போக இன்று பொருமிடும் மாற்றினத்தோர்
தானினியுதவி யென்று தமிழரின் உரிமைபோற்றி
மாநில ஆட்சிதன்னை வழங்கலே நன்மை சேர்க்கும்.
 

 

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👍

 

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👍

ஏற்றமைக்கு நன்றி தமிழ்த் தேசியன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, karu said:

https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950

இலங்கையை ஆள யார்வேண்டும்?
அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை 
விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும்
இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா
குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும்

புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச்
சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும்.
இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா?
அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார்.

நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப்
புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர்
இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு
சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர்

வெறிபிடித்தலைந்த கூட்டம் வேற்றின மக்கள்தன்னை
நெறிபிறழ்ந்துயிர் பறித்த நீசர்கள் சுயநலத்தர்
அறிவிலாதுரக்க “அப்பே ஆண்டுவ” எனக்குரைத்த
சொறியர்கள் இனபேதத்தால் தூய்மையைக் கெடுத்தகூட்டம்

பேரினவாதரென்னும் பேயர்கள், பிடிவா தத்தால்
ஓரினம் மட்டுமாள உரிமைகள் மற்றோர்க்கில்லாக்
காரியம் பலவும் செய்து கல்வியை மறுத்துத்தீய
போரினாலடக்கிப் புத்தன் புகழினைக் கெடுத்த கூட்டம்

போனநற் பெயரையிந்தப் புவியினில் மீட்டாலன்றி
ஆனநல்லுதவி சேர்ந்தும் ஆவது ஒன்றுமில்லை.
ஈனர்;தம் குணத்தால்வேற்று இனத்தரை மதியாராகில்
ஊனமுற் றிலங்கையிந்த உலகினில் தோற்றுப்போகும்

ஆனதனாலே இந்த அவனியின் ஆசிவேண்டில் 
போனது போக இன்று பொருமிடும் மாற்றினத்தோர்
தானினியுதவி யென்று தமிழரின் உரிமைபோற்றி
மாநில ஆட்சிதன்னை வழங்கலே நன்மை சேர்க்கும்.
 

 

உண்மையை சொன்னால் பலர் கோபிப்பினம் இந்த உலகு  காப்ரேட்  கம்பெனிகளின் அடிமையாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன இல்லை வல்லவன் பக்கம் சப்பாத்தை நக்கும் வேலை செய்யணும் வடகொரியா போல்.

  இல்லை ஏலியன்களிடம் இருந்து அடுத்த தலைமுறை ஆயுதம் வாங்கணும் இல்லை வாங்கியது போன்று நம்ப வைக்கணும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, பெருமாள் said:

இல்லை ஏலியன்களிடம் இருந்து அடுத்த தலைமுறை ஆயுதம் வாங்கணும் இல்லை வாங்கியது போன்று நம்ப வைக்கணும் .

ஏலியன்களை சந்திருப்பதாக அமெரிக்கா தானே ரீல் விடுது 😂

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் உள்ள ஏக்கம் கவிதையில் ஊறி அருவியாய் கொட்டுது.....!  😁

நன்றி karu .......!   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மனதில் உள்ள ஏக்கம் கவிதையில் ஊறி அருவியாய் கொட்டுது.....!  😁

நன்றி karu .......!   

கவிதை பற்றிய தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சுவி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.