Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு முருகு

Featured Replies

திரு முருகு

- வ.ஐ.ச.ஜெயபாலன்

தினைப் புனத்தின் மத்தியிலே

வேங்கை மர நிழலில்

தேன் தினைமா துடைத்து

வெண்தாடி பிய்த்தபடி நிற்கின்றேன்.

தேவதைபாதி சூனியக் காரிபாதியாக

காவல் பரணில்

சிரிக்கின்றாள் வள்ளி

வயல் நிறைய

பூனையாக்கப் பட்ட யானைகள்

அலைகிறது.

நிலா முகத்தி மான்விழியாள்

முல்லைச் சிரிப்பழகி

தேன் மொழியாள் என்று

சொன்ன கவிதை எல்லாம்

பாழுள் புறம்காலால் தட்டிவிட்டாள்.

வேங்கை மரத்தடியில்

உடைந்த புல்லாங்குழல்

பிய்ந்த மயிலிறகும் தலைமயிரும்

கண் சிமிட்டிக்

கண்ணனும் வந்தவர் என்கிறாள்

ஏளனப் பணிவு

இதில் வேறு எள்ளல் சிரிப்பு.

வெறிக்கும் சோம மது

புறக்கணிப்பின் ஆலகால விசம்.

எல்லார்க்கும் தேன் கமழ்ந்து

எட்டாத குறிஞ்சி மலர்.

விந்தைப் பெண் கனவுகளில்

விரக்தி விதைக்கின்ற

காவியங்கள் எல்லாம்

கருகும் அவள் குப்பையிலே.

நீருள்ளால் நெருப்பெடுத்துச் செல்லும்

சாகசங்கள் எப்போது தேர்ந்தாய்

குறமகளே எனக்கேட்டால்

விரல்களுள் பற்குத்தும் குச்சியாய்

என்திருவேல் உருள

நூலகம்போல்

பெண்கவிஞர் ஏடுகள் இறைந்துள்ள

காவல் பறனைக் காட்டிச் சிரிக்கின்றாள்.

உன்னில் சிக்கித் துடிக்கையிலே- வள்ளி

உயிரினில் காவியம் துளிர்க்குதடி.

பூசாரியைப் பேயாக்கி

மரமேற்றி அங்கிருந்த

பேய்க்குப் பூனூல் அணிந்து

பூவும் கொடுத்து வேடிக்கை பார்கின்ற

வள்ளிப் புனத்து வழி ஆபத்து என்றார்கள்

விதிவசத்தால் காதில் விழவில்லை.

வேலும் இழந்தேன்.

அலக்சாண்டரையே தின்றது போர்களம்

எந்தப் பெரு வேட்டுவனையும்

காடு ஒருநாள் தின்றுவிடும்.

visjayapalan@gmail.com

ம் அருமை. நல்ல படைப்புகளை தேடி இணைக்கும் மோகன் அண்ணாவிற்கு நன்றிகள்

உன்னில் சிக்கித் துடிக்கையிலே- வள்ளி

உயிரினில் காவியம் துளிர்க்குதடி.

திரு முருகு

அலக்சாண்டரையே தின்றது போர்களம்

எந்தப் பெரு வேட்டுவனையும்

காடு ஒருநாள் தின்றுவிடும்.

அருமையான கவிதை எழுதிய கவிஞருக்கும் அதை இங்கே இணைத்த மோகண் அண்ணாவிற்கும் நன்றிகள்........அதில் மேலே குறிபிட்ட இந்த வரிகள் பிரமாதம்........... :lol:

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய பரணி, ஜமுனா, சுகன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

திரு முருகு

எந்தப் பெரு வேட்டுவனையும்

காடு ஒருநாள் தின்றுவிடும்.

visjayapalan@gmail.com

போராளிக் கவிஞன் ஒருவன் இந்த வரிகளை சுட்டி அஞ்சல் எழுதி யிருந்தான். காதல் கவிதையில் வருகிற அந்த ஒரு வரியில் அவனுக்கான சேதி ஒன்றிருந்தது. நாம் அகன்றும் உயர்ந்தும் இணைந்து விஸ்வரூபமெடுத்து தீர்க்கமாகவும் துரிதமாகவும் செயல் படவேண்டிய தருணம் இது என்கிற சேதியாக உணர்ந்து எழுதியிருந்தான். என்னுடைய கவிதைகளில் ஆனையும் பெண்ணையும் காதலையும் மட்டுமே சிலர் காண்கிறார்கள். காதல் கவிதைகள் எல்லாம் வெறும் காதல் கவிதைகள் மட்டுமல்ல. உலகம் ஆணும் பெண்ணும் இயற்கையும்தான். கிரேக்க மாகவி கோமரில் இருந்து நமது துறவி எழுதிய சிலம்புவரை காலம் கடந்து நிலைக்கிற உலகின் இலக்கியங்களிலலும் தூக்கலாக இருப்பதும் காதலும் வீரமும் இயற்கையும்தானே. ஆனால் உலகின் ஞானமும் கலைகளும் ஆண்பெண் பாதிரங்களூடாக இயற்கைஊடாக பிரபஞ்சத்தையே சொல்கிறதல்லவா. கவிதைகளில் ஆணும் பெண்ணும் இயற்கையும் மனசுகளால் எழுதும் கவிதையான காதலையும் உடல்களால் எழுதும் கவிதையான கலவியையும் மட்டுமன்றி வாழ்வினனதும் போராட்டங்களதும் சேதி உணர்த்துகிற குறியீடாகவும் இருக்கிறதல்லவா. ராதேயன் போன்ற என் போராளித் தோழர்களுக்கு மிகவும் பிடித்த நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள். -கவிதைப் பூங்காடு பக்கம் 5 - வெறும் இயற்கை அழகு பற்றி மட்டும் அக்கவிதை பேசவில்லை. இலக்கியங்களை வாசிக்கிறபோது ஆண் பெண்ணை இயற்கையை ரசித்து அங்கு தேங்கிவிடாமல் அவற்றைக் கடந்தும் அவை குறிப்பால் உணர்த்தும் சேதியைப் பற்றியும் ஓங்கியும் உயர்ந்தும் மேல் செல்ல வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அனால் அவர் அவர் ஒவ்வொரு சமயம் தமக்கு பிடித்த தளதில் லயிக்கலாம் என்பதுதான் கவிதையின் வளமாகும். கல் எறிபவர்களுக்குப் பயந்து பூத்துக் கனியத் தயங்கும் பழமரமும் உளதோ?

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.