Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல்வாதிகளின்... வீடுகளுக்கு எரியூட்டப்பட்ட சம்பவம்: சாணக்கியன், கூறிய கருத்துக்களை... மீளப்பெற வேண்டும் – ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – ரணில்

அரசியல்வாதிகளின்... வீடுகளுக்கு எரியூட்டப்பட்ட சம்பவம்: சாணக்கியன், கூறிய கருத்துக்களை... மீளப்பெற வேண்டும் – ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையா்றிய அவர், “20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல.

இந்த கருத்தின் மூலம் சாணக்கியன் நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கிறாரா?

சாணக்கியனின் கருத்தின்படி, 20வது திருத்தத்துக்கு ஆதரவளித்தமையே வீடுகள் எரியூட்டப்பட்டமைக்கு காரணமாக இருக்குமானால் குமார வெல்கமவின் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது?

கோட்டாபய வீட்டுக்கு செல்லவேண்டும் என்று முதலில் கூறியவரே குமார வெல்கம என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஏன் தாக்கப்பட்டார்?

எனவே அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு தமது கருத்தை மீளப்பெற வேண்டும்

இல்லையேல், குறித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரவேண்டியிருக்கும்” என்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.

https://athavannews.com/2022/1286425

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் மீது விசாரணையை கோரவேண்டியிருக்கும் - பிரதமர் ரணில் நாடாளுமன்றில் எச்சரிக்கை

ராசமாணிக்கம் சாணக்கியன்

கடந்த மே 20ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட்ட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இந்த கருத்தின் மூலம், சாணக்கியன், நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கிறாரா? என்று ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

குமார வெல்கம

 

சாணக்கியனின் கருத்தின்படி, 20வது திருத்தத்துக்கு ஆதரவளித்தமையே வீடுகள் எரியூட்டப்பட்டமைக்கு காரணமாக இருக்குமானால், குமார வெல்கமவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அந்த கருத்து பொருந்தாது என்று ரணில் குறிப்பிட்டார்.

கோட்டாபய வீட்டுக்கு செல்லவேண்டும் என்று முதலில் கூறியவரே குமார வெல்கம என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ரணில் குறிப்பிட்டார்.

எனவே அவர் ஏன் தாக்கப்பட்டார் என்று ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

எனவே அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு தமது கருத்தை திரும்பப்பெறவேண்டும்.

இல்லையேல், குறித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரவேண்டியிருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.

பொதுநலவாய செயலாளரிடம் கோரிக்கை 

 

இந்தநிலையில் குமார வெல்கமவின் மீது தாக்குதல் நடத்திய இடத்தில் உள்ள மக்கள், அவரை தாக்கவில்லை.

வெளியில் இருந்து வந்தவர்களே அவரை தாக்கியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, காலிமுகத்திடல் வன்முறை முதல் அன்று இடம்பெற்ற அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்திய சுயாதீனமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொதுநலவாய நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். 

https://tamilwin.com/article/parliment-session-on-political-crisis-1654839897?itm_source=parsely-api

 

  • கருத்துக்கள உறவுகள்

கலவரம் தொடர்பில் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் - சபையில் பிரதமர் எச்சரிக்கை

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் இடம்பெற்ற கலவரத்தை தூண்டும் வகையிலும்  அதனை ஆதரிக்கும் வகையிலும் இராசமாணிக்கம் எம்.பி. சபையில் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அதுதொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என  பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காலம் சென்ற அமரகீர்த்தி அத்துகோரலின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றிருக்கின்றன. லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டபோது அதனை நாங்கள் அனைவரும் இந்த சபையில் கண்டித்தோம்.

வெளியில் விடுதலை புலிகள் அவரை விமர்சித்து வந்தபோதும் நாங்கள் ஒன்றாக செயற்பட்டோம். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனைத்தவிர இந்த சம்பவத்தை எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைவரும் கண்டித்தார்கள். அதுதான் எனது கவலை.

மே மாதம் 20ஆம் திகதி சாணக்கியன் இராசமாணிக்கம் இந்த சபையில் உரையாற்றும் போது, 20ஆம் திருத்தம் போன்று, நாட்டுக்கு நன்மை பயக்காத விடயங்களுக்கு வாக்களித்ததன் காரணமாகவே வீடுகள் எரிக்கப்பட்டன.

2020 வரவு செலவு திட்டம் 2021 வரவு செலவு திட்டத்தில் பிழையான பொருளாதார கொள்கை இருந்தது. அந்த வரவு செலவு திட்டங்களுக்கு கை உயர்த்தியதன் காரணமாகவே வீடுகள் எரிக்கப்பட்டன. 

மக்களை காட்டிக்கொடுத்ததால்தான் உங்களுக்கு இது இடம்பெற்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எப்படி இவ்வாறு உரையாற்ற முடியும். லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டபோது விடுதலை புலிகள் அதனை வெளியில் இருந்து விமர்சித்தார்கள். ஆனால் தற்போது அதனை சபைக்குள் செய்கின்றனர்.

அப்படியானால் வீடுகள் எரிக்கப்பட்டதை, இடம்பெற்ற கொலைகளை ,குமார் வெல்கம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை  அவர் அனுமதிக்கின்றாரா?.

பாராளுமன்றத்தை சுற்றிவளைக்கும்போது, எமக்கு எந்த பாதிப்பும் இல்லை என இங்ங்கு வந்து தெரிவித்திருந்தார். மறுநான் முன்னிலை சோசலிச கட்சி குமார் குணரத்னத்துடன் இணைந்து படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

எனவே இராசமாணிக்கம் எம்.பி. எதிர்வரும் சபை அமர்வின்போது அவர் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து, அதனை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதுதொடர்பில் விசாரணை நடத்தி, உரிய குழுவுக்கு அதனை வழங்கி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகரை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
 

https://www.virakesari.lk/article/129257

 

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலார் எழும்பியிட்டார்...இனி அடக்குவது என்றால் கஸ்டம் பாருங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

தானாக அடங்குவார். வந்த வழியே திரும்புவார் விரைவில்! 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில்  வீட்டு விலைகள் ஏறினாலும் இலங்கை தமிழர்கள் வீடுகள் வாங்கி கொண்டிருக்கிறார்கள். இராசமாணிக்கம் சாணக்கியன் வீடுகள் எரிக்கப்பட்டதை தான் ஊக்குவித்தால் சிங்களவர்கள் தன்னை ஒரு தமிழ் புரட்சி தலைவராக ஏற்று கொண்டு ரணிலை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் என்று நம்பியிருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.