Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

8,9´ம் திகதிகளில் ...  போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு- கொழும்பில் உச்சக் கட்ட பாதுகாப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுமாறு ஜனாதிபதி ஆயுதப் படைகளுக்கு அழைப்பு – வர்த்தமானி வெளியீடு!

8,9´ம் திகதிகளில் ...  போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு- கொழும்பில் உச்சக் கட்ட பாதுகாப்பு!

கொழும்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நாளை (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.

அதேநேரம், 9ஆம் திகதியும் கோட்டா கோ கம போராட்டக்காரர்களுடன் இணைந்து எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் பேரணியை ஆரம்பித்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை செல்ல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், டெம்பில் லேன், பிரதமர் இல்லம் மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்து பொது ஒழுங்கை முகாமைத்துவம் செய்யுமாறு கட்டளை அதிகாரி விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்காக கடமைகளில் ஈடுபடுவதற்கு பெருமளவிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே கொழும்பு பிரதேசத்தில் உள்ள முகாம்கள் மற்றும் நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிக்கு சமூகமளிக்கும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் அவசர கதியில் மேற்படி கடமைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1290061

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பொலிசார் தலைமறைவாக போறார்களோ.

  • கருத்துக்கள உறவுகள்

மே 9, ஜூன் 9  போல ஜூலை 9ம் இருக்க வேண்டும் என்று  ஹிருணிக்கா வேறை சபதம் எடுத்து இருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

மே 9, ஜூன் 9  போல ஜூலை 9ம் இருக்க வேண்டும் என்று  ஹிருணிக்கா வேறை சபதம் எடுத்து இருக்கிறார்.

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition  Cops get another hug from Hirunika

ஹிருணிகாவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம்; ரணில் கோரிக்கை - ஜே.வி.பி  நியூஸ்

இந்த அரசாங்கத்தை, நாடு முழுக்க சென்று... எதிர்ப்பதில்,
ஹிருணிகாவின்  பங்கு, முதன்மையானது. 

  • கருத்துக்கள உறவுகள்

யூலையில்  சிங்களவருக்குள் எதாவது  நடக்கணும்

நடக்கும்

நான் பார்க்கணும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், டெம்பில் லேன், பிரதமர் இல்லம் மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்து பொது ஒழுங்கை முகாமைத்துவம் செய்யுமாறு கட்டளை அதிகாரி விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்காக கடமைகளில் ஈடுபடுவதற்கு பெருமளவிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே கொழும்பு பிரதேசத்தில் உள்ள முகாம்கள் மற்றும் நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிக்கு சமூகமளிக்கும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் அவசர கதியில் மேற்படி கடமைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டளை அதிகாரி மட்டக்களப்பையும், யாழ்ப்பாணத்தையும் மறந்ததேன்........?????????😲

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Paanch said:

கட்டளை அதிகாரி மட்டக்களப்பையும், யாழ்ப்பாணத்தையும் மறந்ததேன்........?????????😲

ஆஆஆஆ
நீங்களே போட்டுக் கொடுத்துவியள் போல இருக்கே பாஞ்ச்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

யூலையில்  சிங்களவருக்குள் எதாவது  நடக்கணும்

நடக்கும்

நான் பார்க்கணும்

எனக்கு… கெதியாக… 8,9’ம் திகதி வர வேணும் என்று,
விறு விறுப்பாக இருக்கு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு 73ஆவது பிறந்தநாள் – கோட்டா கோ கம ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 73 நாட்கள்!

போராட்டத்தினை தடுக்குமாறு... கோரிய, பொலிஸாரின் கோரிக்கையினை... நிராகரித்தது நீதிமன்றம்!

ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் போராட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா நிராகரித்துள்ளார்.

குற்றம் நடந்தால், அதை எதிர்கொள்வதற்கான அதிகாரம் உள்ளதால், குறித்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, அமைதியான போராட்டங்களை நடத்த மக்களுக்கு உரிமை உண்டு என பொலிஸ் மா அதிபர் சீ .டீ . விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அவர்களின் உரிமைகளை பொலிஸார் உறுதி செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச அல்லது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதையும் அல்லது அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1290166

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆ
நீங்களே போட்டுக் கொடுத்துவியள் போல இருக்கே பாஞ்ச்?

அப்படி அல்ல ஈழப்பியரே! மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்தில் இருக்கும் இராணுவம் அனைத்தும் கொழும்பு சென்றுவிட்டால், சிறிது காலமாவது அங்குள்ள மக்கள் இராணுவத் தொல்லையின்றி சற்று நிம்மதியாக இருப்பார்களே என்ற எண்ணத்தினால் வந்தது.😌 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.