Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘குடு’ காரர்களே... தற்போது, காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

‘குடு’ காரர்களே... தற்போது, காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க!

‘குடு’ காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் எனவே இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காலி முகத்திடல் என்பது பொருளாதார கேந்திர நிலையம். சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட பகுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கலாம் எனவும் அமைச்சர் யோசனை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.

போராட்டக்காரர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், படையினரை படுமோசமாக விமர்சித்தனர். படையினரைவிட பிரபாகரன் சிறந்தவர் என்றுகூட குறிப்பிட்டனர்.

இது குறித்து பொன்சேகாவின் நிலைப்பாடு என்ன எனவும் பிரசன்ன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

https://athavannews.com/2022/1292630

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

‘குடு’ காரர்களே... தற்போது, காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க!

 

33 minutes ago, தமிழ் சிறி said:

போராட்டக்காரர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், படையினரை படுமோசமாக விமர்சித்தனர். படையினரைவிட பிரபாகரன் சிறந்தவர் என்றுகூட குறிப்பிட்டனர்.


குடுகாரனைவிட மோசமானது அரசபணத்தை சூறையாடுவது. 64மில்லியன் கையூட்டுப் பெற்று நிரூபிக்கப்பட்டு, 25மில்லியன் தண்டப்பணமும், ஈராண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் பெற்ற குற்றவாளி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர். அதுசரி குற்றவாளிகளின் கூடாரம்தானே இலங்கை நாடாளுமன்றம்.  உங்களையும், உங்கள் கொலைப்படையையும் விட மேலானவராகப் பிரபாகரன் அவர்களை விழித்ததோடு, எங்கே தாங்கள் பயங்கரவாதி என்று நம்பவைத்த இனவாத அரசியல் விம்பம் உடைந்துநொருங்கிவிட்டால் சிங்கள அரசியல்வாதிகளுக்கான அரசியல் இல்லாமற்போவதோடு, மக்களாற் துடைத்தெறியப்படுவோம் என்ற அச்சத்தின் வெளிப்பாடும், வீட்டை இழந்த கடுப்பின் வெளிப்பாடுமே   போராட்டக்காரர்களைப் பார்த்து 'குடுகாரர்' என்று கொதிப்படையக் கரணியமாகும். சரியான மானரோசமுள்ள அரசியல்வாதிகளென்றால் இன்னேரம் தேர்தலுக்கல்லவா சென்றிருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் ஊழலை மறைத்து, மக்களின் பிரச்சனையையும், தேவைகளையும், அவர்களையும் எவ்வளவு இழிவுபடுத்துகிறார் இவர்? அவர்களின் பணத்திலும், வாக்குகளிலும் தான் சுகம் அனுபவித்துக்கொண்டு. குடு கடத்துபவர்களே அரசியல்வாதிகள்தான். மற்றவர்களை இழிவு படுத்துவதன் மூலம் தன்னைத்தானே இழிவு படுத்திக்கொள்கிறார். ஒரு அரசியல்வாதியாய் குடுவை அழித்து, மக்களை காப்பாற்ற என்ன செய்தார் இவர்? தன் கொள்ளையை மறைக்க கேள்விகேட்டவர்களை குடு காறர் என்கிறார். இதிலிருந்து பயங்கரவாதிகள் என்கிற இவர்களின் சொல்லுக்கும்  விளக்கம் இலகுவாக கண்டுபிடித்து விடலாம்.

17 hours ago, தமிழ் சிறி said:

போராட்டக்காரர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், படையினரை படுமோசமாக விமர்சித்தனர். படையினரைவிட பிரபாகரன் சிறந்தவர் என்றுகூட குறிப்பிட்டனர்.

இவர் கோபப்படுவதிலும் நிஞாயமுண்டு! எதிர்கால அரசியல் கூடாரம் சரிந்து கொண்டிருக்கிறது, இராணுவத்தை, இனவாதத்தை முதலீடாக கொண்டு இயங்கும் வியாபாரம். இனி எதை வைத்து கூவுவது?

  • கருத்துக்கள உறவுகள்

93 பேர் 10ம் வகுப்பு  பரீட்சையில் தேறாதவர்கள் தான் பாராளுமன்றத்தில் உள்ளனர் எனும் போது இப்படியான  நலினமான கருத்துக்களை எதிர்பார்க்கத்தான் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப ஆட்டம் போடாதீங்கப்பு.... இருக்கிற எரிபொருள்.... இன்னும் ஒரு மாதத்துக்கு தான் காணும். அதன் பிறகு... பழைய கதை தான்.

போராட்டத்தினை ஒடுக்க முயலும் ரணில் டொலர் ஒண்டையும் கொண்டு வரவில்லை.... கொண்டு வரக்கூடிய நிலையும் இல்லை.

மக்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, nunavilan said:

93 பேர் 10ம் வகுப்பு  பரீட்சையில் தேறாதவர்கள் தான் பாராளுமன்றத்தில் உள்ளனர் எனும் போது இப்படியான  நலினமான கருத்துக்களை எதிர்பார்க்கத்தான் வேண்டும். 

ஏன் நாடு இப்பிடி இருக்கு எண்டேக்கையே பெரிசாய் யோசிக்க தேவையில்லை.

சிங்களவர்களால் சிங்கள மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனாதிபதி இரண்டு வருசத்திலை தலை தெறிக்க தப்பி ஓட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.