Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரகால சட்டம்... வேறு நோக்கங்களுக்காக, பயன்படுத்தப்படலாம் – ஜி.எல். பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜி.எல்.பீரிஸ்

அவசரகால சட்டம்... வேறு நோக்கங்களுக்காக, பயன்படுத்தப்படலாம் – ஜி.எல். பீரிஸ்

தற்போதைய சூழ்நிலையில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதாலேயே அதற்கு எதிராக வாக்களித்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியமானது எனவும், அதனை அமுல்படுத்துபோது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவசரகால சட்டம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1292714

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் – டலஸ் அழகப்பெரும

அவசரகால சட்டம், அமுல் படுத்தப்பட்டதை... ஏற்கமுடியாது – டலஸ்!

அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதை ஏற்கமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது அணியினர் அரசியல் சூழ்ச்சி செய்யவில்லை எனவும் மக்கள் பக்கம்நின்று, மனசாட்சியின் பிரகாரமே செயற்பட்டுவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது அரசியல் சூழ்ச்சி கிடையாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதியாகி இருந்தால், சர்வக்கட்சி அரசு அமைந்திருக்கும் எனவும் நிச்சயம் மாற்றம் வந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எண் கணித அடிப்படையில் தான் தோற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர், அரசியல் ரீதியில் தோற்கவில்லை எனவும் மக்கள் எம் பக்கமே நிற்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1292755

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, தமிழ் சிறி said:

அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியமானது எனவும், அதனை அமுல்படுத்துபோது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 உங்கடை  தூரநோக்கு சிந்தனை எண்டால் தமிழ்ச்சனம் ஏதும் போராட்டம் செய்தால்

18 hours ago, தமிழ் சிறி said:

எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்ப சிங்களச்சனமெல்லோ போராடினம் அதால அவசரகாலச்சட்டம் கூடாது
 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2022 at 13:55, தமிழ் சிறி said:

அவசரகால சட்டம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அது ஏது இவ்வளவுகாலமும் தமிழருக்கு எதிராக இந்தச்சட்டம் பாயும் போது எழாத நா, இப்போ மட்டும் குழறுது?

On 29/7/2022 at 13:55, தமிழ் சிறி said:

அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியமானது

அதாவது தமிழருக்கெதிராக அவசியமானது என்று சொல்ல வாறார் இவர்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அது ஏது இவ்வளவுகாலமும் தமிழருக்கு எதிராக இந்தச்சட்டம் பாயும் போது எழாத நா, இப்போ மட்டும் குழறுது?

அதாவது தமிழருக்கெதிராக அவசியமானது என்று சொல்ல வாறார் இவர்.  

தமிழருக்கு எதிராக அவசர காலச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது...     
முஸ்லீம்கள் கூட சிங்களவருடன் சேர்ந்து ஆதரவு கொடுத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எகதையாவது பாவித்து

இந்த  தவளையை யாராவது உள்ளே போடுங்களப்பா புண்ணியமாக  போகும்?

அன்ரன்  பாலசிங்கம்  அண்ணையை கண்டால்  சலம்  போனதுகள் எல்லாம் கதைக்குதுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அத்தான் நல்லதொரு அமைச்சுப் பதவிக்கு அடிகோலுகிறார்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2022 at 05:55, தமிழ் சிறி said:

அவசரகால சட்டம்... வேறு நோக்கங்களுக்காக, பயன்படுத்தப்படலாம் – ஜி.எல். பீரிஸ்

அவசரகாலச் சட்டம் அல்லது சிங்கள அரச பயங்கவாத அடக்குமுறைச் சட்டமானது தமிழருக்கு மட்டுமே என்பதில் எவளவு தெளிவாக இருக்கிறார்கள். பேராசியர் என்ற பெயரிலே பெரும் இனவாத ஆசிரியரான பீரீஸ் போன்றவர்களால் பேராசியர்களுக்கே அவமானம். எப்படி இவங்களெல்லாம் இப்பவும் பேராசிரியர் என்று சொல்லிக்கொண்டுதிரிய வெட்கமாயில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nochchi said:

அவசரகாலச் சட்டம் அல்லது சிங்கள அரச பயங்கவாத அடக்குமுறைச் சட்டமானது தமிழருக்கு மட்டுமே என்பதில் எவளவு தெளிவாக இருக்கிறார்கள். பேராசியர் என்ற பெயரிலே பெரும் இனவாத ஆசிரியரான பீரீஸ் போன்றவர்களால் பேராசியர்களுக்கே அவமானம். எப்படி இவங்களெல்லாம் இப்பவும் பேராசிரியர் என்று சொல்லிக்கொண்டுதிரிய வெட்கமாயில்லையா?

கட்சி மாறி கட்சி தாவுவதிலும் வல்லவர் இவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.