Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி மற்றும் கூட்டமைப்பிற்கிடையில் விசேட சந்திப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான சர்வ கட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் அழைப்புக்கு இணங்க அவரைக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சுகவீனம் காரணமாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. அதேவேளை, தவராசா கலையரசன் எம்.பியும் இதில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும் குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர்  பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் கூட்டமைப்பிற்கிடையில் விசேட சந்திப்பு (VIDEO) | Special Meeting Between The President Federation

மேற்படி சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா, ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்படி கூறிய விடயங்களை நான் அப்படியே ஜனாதிபதியிடம் கூறினேன். அதற்கமைய சர்வகட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தேன்.

தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் என்றும் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். அரசமைப்பின் 22ஆவது திருத்தம், புதிய அரசமைப்பு, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் இதன்போது பேசினோம்.

ஜனாதிபதி மற்றும் கூட்டமைப்பிற்கிடையில் விசேட சந்திப்பு (VIDEO) | Special Meeting Between The President Federation

உடனடிப் பிரச்சினைகள் சம்பந்தமாகப் பேசும்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தோம். இந்தக் கோரிக்கையைத் தான் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரினோம். அதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

காணி விவகாரம் தொடர்பிலும் பேசினோம். வடக்கு, கிழக்கில் தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படியும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறும் கோரினோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவிக்கையில்,

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு பகுதிகள் மீது கவனம் செலுத்துமாறு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.உங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென்றால் நல்லெண்ணங்களை வெளிப்படுத்த வேண்டுமெனவும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்த கருத்தினையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

https://tamilwin.com/article/special-meeting-between-the-president-federation-1659539869

 

கூட்டணியை கூப்பிட்ட போது சகல தமிழ் கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவோடு போயிருந்தால் கொஞ்சம் பலமாக இருந்திருக்கும்.

நடக்காது தான் முயற்சி பண்ணியிருக்கலாம்.

இதிலே சித்தார்த்தனின் பார்வை ஏராளமான கதைகள் சொல்லுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிற்குள் கறுப்பு ஆடுகள் – அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார் ரணில்! மௌனம் காத்த எம்.பிக்கள்!

கூட்டமைப்பிற்குள்... கறுப்பு ஆடுகள் – அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார் ரணில்! மௌனம் காத்த எம்.பிக்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் மக்களின் நலன்சார்ந்த 10 முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சிறிதரன், ஜனாதிபதி தெரிவின் போது கூட்டமைப்பினர் டலஸ் அழகப்பெருவிற்கு வாக்களித்திருந்தமையினை சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் இதனை பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையினை நிறைவேற்றவுள்ளமையினை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை எம்.ஏ சுமந்திரன் மொழி பெயர்த்திருந்தார்.

இதன்போது பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக குறிப்பிட்டார்.

இதன்போது, குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காத்திருந்தனர்.

அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தனர்.

குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் பங்கேற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு,

நீண்டகாலமாக சிறையிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளில் ஒருதொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்வது.

அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளிலும், பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும் அடாத்தாக முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல்.

தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல்.

வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல்.

கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்.“உள்ளிட்டவற்றினையே முன்வைத்திருந்தனர்.

TNA-3.jpeg

TNA-4.jpeg

TNA-1.jpeg

TNA-2.jpeg

https://athavannews.com/2022/1293453

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

இதிலே சித்தார்த்தனின் பார்வை ஏராளமான கதைகள் சொல்லுகின்றன.

TNA-3.jpeg

TNA-2.jpeg

சுமந்திரனின் வாயும்... இடியப்பம் புளியுது.
சம்பந்தனை... தூக்கிக் கொண்டு வர, ஆள் கிடைக்கவில்லைப்  போலுள்ளது. 

அது சரி... உள்ளூர் சந்திப்புகளுக்கும், கூத்தமைப்பினர்  சிலர்,
"ரை" கட்டி...  கோட்டு, சூட்டுடன் தான், போவார்களா. 

  • கருத்துக்கள உறவுகள்

டக்கியர் தனது கோரிக்கைகளை TNA கொப்பியடித்துவிட்டது எனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

டக்கியருக்கு வேலை இல்லை எனத் தோன்றுகிறது. 

🤣

2 minutes ago, தமிழ் சிறி said:

TNA-3.jpeg

TNA-2.jpeg

சுமந்திரனின் வாயும்... இடியப்பம் புளியுது.
சம்பந்தனை... தூக்கிக் கொண்டு வர, ஆள் கிடைக்கவில்லைப்  போலுள்ளது. 

அது சரி... உள்ளூர் சந்திப்புகளுக்கும், கூத்தமைப்பினர்  சிலர்,
"ரை" கட்டி...  கோட்டு, சூட்டுடன் தான், போவார்களா. 

சித்தார்த்தனுடைய முகத்தைக் கவனியுங்கோ...🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

டக்கியர் தனது கோரிக்கைகளை TNA கொப்பியடித்துவிட்டது எனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

டக்கியருக்கு வேலை இல்லை எனத் தோன்றுகிறது. 

🤣

சித்தார்த்தனுடைய முகத்தைக் கவனியுங்கோ...🤣

சித்தார்த்தனுடைய முகத்தை... ஏற்கெனவே,  @ஈழப்பிரியன் சொல்லி விட்ட படியால்,
அந்த அசிங்கத்தை, மீண்டும் ஏன்... நினைவு படுத்துவான் என்று நான் சொல்லவில்லை. 😂

//@ஈழப்பிரியன்   இதிலே சித்தார்த்தனின் பார்வை ஏராளமான கதைகள் சொல்லுகின்றன.//

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு விண்ணப்பமும் நிராகரிக்கவில்லை.அங்கால பிக்குமார் விடவா போகினம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதை விடவா போகிறார்கள் என்ற நம்பிக்கை தான்.

இப்போதைய தேவை கிடைத்ததை தக்க வைப்பதே.சகலரையும் சேர்த்தாலே நம்ம வண்டி அடுத்த தேர்தல் வரை ஓடும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

எந்த ஒரு விண்ணப்பமும் நிராகரிக்கவில்லை.அங்கால பிக்குமார் விடவா போகினம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதை விடவா போகிறார்கள் என்ற நம்பிக்கை தான்.

இப்போதைய தேவை கிடைத்ததை தக்க வைப்பதே.சகலரையும் சேர்த்தாலே நம்ம வண்டி அடுத்த தேர்தல் வரை ஓடும்.

கூட்டமைப்பும்… இதை வைத்தே, அடுத்த தேர்தல் வரை,
விதம் விதமான… வடை சுட்டுக் கொண்டு இருக்கும்.

கடைசியிலை… நம்பினம், ஏமாத்திப் போட்டார் என்று, பழைய பல்லவியை சொல்லி விட்டு…
 வழக்கமான, சுத்து மாத்து விளையாட்டில் இறங்கி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பை உடைக்க நரி போட்ட முதல்குண்டு இனி வேலை செய்யும்...உங்கடை ஆட்களும் எனக்கு வோட்டுப்போட்டவை ...கருணாவுக்கு..வைத்த முதல் வெடிபோல்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

கூத்தமைப்பை உடைக்க நரி போட்ட முதல்குண்டு இனி வேலை செய்யும்...உங்கடை ஆட்களும் எனக்கு வோட்டுப்போட்டவை ...கருணாவுக்கு..வைத்த முதல் வெடிபோல்..

கூட்டமைப்பை… பிரித்து மேயத்தானே, சுமந்திரன் இருக்கிறார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

குறிப்பாக தமிழ் மக்களின் நலன்சார்ந்த 10 முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஓம்.....எல்லாம் செய்யலாம் எண்டு போட்டு......அதை கிடப்பில் போடுறதுதானே வழமை.🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.