Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவில் நாயை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பலில் இருவர் கைது ; ஒருவர் தலைமறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்து சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

எனினும் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தார்.

நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியது.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் இந்தச் சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயின் உத்தரவில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் இன்று இரவு ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்திய கைக்கோடாரி மற்றும் அதனை காணொளி எடுத்த தொலைபேசி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

மிருக வதைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினார்.

நாயை வெட்டிக் கொன்றவர்களில் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகிறார்.

சந்தேக நபர்கள் உண்மையை கூர மறுப்பதுடன் மாறுபட்ட தகவல்களை வழங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புங்குடுதீவில் நாயை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பலில் இருவர் கைது ; ஒருவர் தலைமறைவு  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நாயை வெட்டிக்கொல்வது  குற்றமாகிய  நாட்டில்👋

மக்களைக்கொன்றவர்களுக்கு பதவி  உயர்வுகள்?😡

1 hour ago, விசுகு said:

நாயை வெட்டிக்கொல்வது  குற்றமாகிய  நாட்டில்👋

மக்களைக்கொன்றவர்களுக்கு பதவி  உயர்வுகள்?😡

நீங்கள் சொல்வது சரி, ஆனால் நாயை கொடூரமாகக் கொன்றவர்களை இதனைக் கூறி நியாயப்படுத்த முடியாது. கண்டிப்பாக தண்டனை கொடுத்து ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

நீங்கள் சொல்வது சரி, ஆனால் நாயை கொடூரமாகக் கொன்றவர்களை இதனைக் கூறி நியாயப்படுத்த முடியாது. கண்டிப்பாக தண்டனை கொடுத்து ஆக வேண்டும்.

நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒரு கை தட்டலும் போட்டிருக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு கராஜில் வேலை செய்யும்பொழுது அங்கே ஒரு பெரிய மாமரம் இருந்தது.....( யாழ் இந்து மைதானத்துக்கு எதிரில்)......ஒருநாள் நானும் நண்பனும் அதில் ஏறி நிறைய மாங்காய்களை பிடுங்கி பின் அவற்றை ஒரு ஏ. 40 காரின் டிக்கிக்குள் வைத்து விட்டோம்.....அடுத்த நாள் முதலாளி வந்து கீழே மாம்பிஞ்சுகள்  காய்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அப்படியே கார் டிக்கியையும் திறந்தார்....அங்கேயும் நிறைய காய்கள்.....எங்களைத் தவிர வேறு யாரும் உந்த வேலை செய்ய மாட்டினம் என்று அவருக்கு தெரியும்.....நாங்கள்தான் இரவு கராஜில் படுப்பது......உடனே எங்களை கூப்பிட்டு...... சீச்சீ ....காதில பிடிச்சு இழுத்து வந்து இண்டைக்கு இவ்வளவு மாங்காயையும் நீங்கள் ரெண்டுபேரும் சாப்பிட்டு விட்டுத்தான் இங்கால வரவேணும் என்று சொல்லி விட்டார் ........!

இவர்கள் மூன்று பேரையும் பிடித்து அப்படிச்  சாப்பிட விட்டிருக்கலாம் .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

நான் முன்பு கராஜில் வேலை செய்யும்பொழுது அங்கே ஒரு பெரிய மாமரம் இருந்தது.....( யாழ் இந்து மைதானத்துக்கு எதிரில்)......ஒருநாள் நானும் நண்பனும் அதில் ஏறி நிறைய மாங்காய்களை பிடுங்கி பின் அவற்றை ஒரு ஏ. 40 காரின் டிக்கிக்குள் வைத்து விட்டோம்.....அடுத்த நாள் முதலாளி வந்து கீழே மாம்பிஞ்சுகள்  காய்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அப்படியே கார் டிக்கியையும் திறந்தார்....அங்கேயும் நிறைய காய்கள்.....எங்களைத் தவிர வேறு யாரும் உந்த வேலை செய்ய மாட்டினம் என்று அவருக்கு தெரியும்.....நாங்கள்தான் இரவு கராஜில் படுப்பது......உடனே எங்களை கூப்பிட்டு...... சீச்சீ ....காதில பிடிச்சு இழுத்து வந்து இண்டைக்கு இவ்வளவு மாங்காயையும் நீங்கள் ரெண்டுபேரும் சாப்பிட்டு விட்டுத்தான் இங்கால வரவேணும் என்று சொல்லி விட்டார் ........!

இவர்கள் மூன்று பேரையும் பிடித்து அப்படிச்  சாப்பிட விட்டிருக்கலாம் .......!  😂

சேனாதி மாஸ்றர் வீடோ அல்லது சிவனேசராசா மாஸ்ரர் வீடோ சுவியர்? அல்லது ரத்தின வாசாவோ?

18 hours ago, விசுகு said:

நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒரு கை தட்டலும் போட்டிருக்கிறேன் 

கை தட்டும் போது கொஞ்சம் சத்தமாகத் தட்டினால் தானே கேட்கும்.... 😀

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

கை தட்டும் போது கொஞ்சம் சத்தமாகத் தட்டினால் தானே கேட்கும்.... 😀

 

புரியுது?

நீங்க  ஊர்ப்பெயரை  பார்த்து விட்டீர்கள்  என்று?😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

சேனாதி மாஸ்றர் வீடோ அல்லது சிவனேசராசா மாஸ்ரர் வீடோ சுவியர்? அல்லது ரத்தின வாசாவோ?

இல்லை....வைரவர் கோவில் பக்கம் வீதியை கடந்து மைதான மதிலுக்கு முன்பாக......பேக்கரிக்கும் தமிழ் பள்ளிக்கூடத்துக்கும் நடுவில்.....!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய் கொலை- புங்குடுதீவு சந்தேக நபர் வாக்குமூலம்!

போதைப்பொருளுக்கு அடிமையாகி ஊரில் திருட்டுக்குச் செல்லும் போது தம்மை பார்த்து குலைப்பதனால்தான் நாயைக் கொலை செய்ததாக சந்தேக நபர்களில் ஒருவர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

நாயை கைக்கோடாரியினால் வெடிக் கொலை செய்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அதனை காணொளி பதிவு செய்தவரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் நேற்றுமுன்தினம் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்தி கைக்கோடாரி மற்றும் அதனை காணொளி எடுத்த அலைபேசி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.

“போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் ஊரில் திருட்டுகளில் ஈடுபட்டோம். எம்மைக் கண்டவுடன் நாய் குலைத்து காட்டிக்கொடுத்துவிடும்.

இதனால் அங்கு இடம்பெறும் திருட்டுகளுடன் எமக்குத் தொடர்பு உண்டு என பொலிஸார் விசாரணைக்கு அழைப்பார்கள். அதனால்தான் அந்த நாயைக் கொலை செய்தோம்.

கைக்கோடாரியினால் வெட்டி கொலை செய்தவர் அன்றைய தினம் போதையில் இருந்தார். சில நாள்களுக்கு முன்பாகவே நாயை கொலை செய்துவிட்டோம்.

அதன் காணொளி சகோதரனின் அலைபேசியில் இருந்தது. அவர் தவறுதலாக ரிக்ரொக்கில் பதிவேற்றப்பட்டுவிட்டது” என்று காணொளி பதிவெடுத்தவர் விசாரணைகளில் தெரிவித்தார்.

சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாய் கொலை- புங்குடுதீவு சந்தேக நபர் வாக்குமூலம்! (newuthayan.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.