Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் நகைக்கடை உரிமையாளருக்கு நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யது பாஸ்கரன்

கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி ஒருவர் வேலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதுடன், கடையை திறக்க வைத்து 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் குறித்த நபர், வியாபார நடவடிக்கைகளை முடித்து நேற்று இரவு வீடு சென்றுகொண்டிருந்த போது பன்னங்கண்டி பகுதியில் வைத்து வானில் வந்தவர்களால் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு நீண்ட நேரம் வானில் வைத்து தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு அழைத்து சென்று கடையை திறக்குமாறு மிரட்டி அங்கிருந்து 10 பவுண் தங்க நகைகளை எடுத்துச் சென்றதுடன்,  காயங்களுக்கு உள்ளான நபரை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் உறவினர்களின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (R)

Tamilmirror Online || நகைக்கடை உரிமையாளருக்கு நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிழம்பு said:

யது பாஸ்கரன்

கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி ஒருவர் வேலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதுடன், கடையை திறக்க வைத்து 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் குறித்த நபர், வியாபார நடவடிக்கைகளை முடித்து நேற்று இரவு வீடு சென்றுகொண்டிருந்த போது பன்னங்கண்டி பகுதியில் வைத்து வானில் வந்தவர்களால் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு நீண்ட நேரம் வானில் வைத்து தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு அழைத்து சென்று கடையை திறக்குமாறு மிரட்டி அங்கிருந்து 10 பவுண் தங்க நகைகளை எடுத்துச் சென்றதுடன்,  காயங்களுக்கு உள்ளான நபரை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் உறவினர்களின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (R)

Tamilmirror Online || நகைக்கடை உரிமையாளருக்கு நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்

army??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Nathamuni said:

கடையை திறக்க வைத்து 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

10 பவுண் நகையா? மினைக்கெட்டதிலையும் பிரயோசனமில்லை.

14 minutes ago, Nathamuni said:

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் குறித்த நபர், வியாபார நடவடிக்கைகளை முடித்து நேற்று இரவு வீடு சென்றுகொண்டிருந்த போது பன்னங்கண்டி பகுதியில் வைத்து வானில் வந்தவர்களால் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு நீண்ட நேரம் வானில் வைத்து தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு அழைத்து சென்று கடையை திறக்குமாறு மிரட்டி அங்கிருந்து 10 பவுண் தங்க நகைகளை எடுத்துச் சென்றதுடன்,  காயங்களுக்கு உள்ளான நபரை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

நள்ளிரவு ஒரு மணி மட்டும் முதலாளி வீட்டுக்கு வரேல்லையெண்டால் ...... வீட்டுக்காரர் தேடி கடைக்கு போகேல்லையோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

10 பவுண் நகையா? மினைக்கெட்டதிலையும் பிரயோசனமில்லை.

நள்ளிரவு ஒரு மணி மட்டும் முதலாளி வீட்டுக்கு வரேல்லையெண்டால் ...... வீட்டுக்காரர் தேடி கடைக்கு போகேல்லையோ? :cool:

10 பவுண் எண்டால் 15 லட்சத்திற்கு மேல் எல்லோ!

பல நகைக்கடை நடத்தும் பொற்கொல்லர்கள் இரவிரவாக தான் வேலை செய்கிறவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

army??


அடித்து விட்டு… களவு எடுத்ததை பார்க்க… இராணுவம் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு அமைச்சர் நாட்டின் நலன் கருதி நகை அளிக்குமாறு மக்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். விமான நிலையத்தில் பயணிகள் கொண்டுவரும் நகைகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொண்டுவந்தார்கள் என பறிக்கிறார்கள், பறித்தெடுப்பதற்கு ஒரு காரணம் அது. முன்பெல்லாம் கடத்தி கப்பம் பெற்றார்கள், இது புது வித கொள்ளை. தமிழனை வாழ விடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, satan said:

அண்மையில் ஒரு அமைச்சர் நாட்டின் நலன் கருதி நகை அளிக்குமாறு மக்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். விமான நிலையத்தில் பயணிகள் கொண்டுவரும் நகைகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொண்டுவந்தார்கள் என பறிக்கிறார்கள், பறித்தெடுப்பதற்கு ஒரு காரணம் அது. முன்பெல்லாம் கடத்தி கப்பம் பெற்றார்கள், இது புது வித கொள்ளை. தமிழனை வாழ விடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்கள்.

எங்கடையளும் சாமிக்கு சாத்துப்படி சாத்தின மாதிரி அள்ளிக்கட்டிக்கொண்டு போயிருப்பினம் 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.