Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி மாளிகையில் இருந்த... நீச்சல் தடாகத்தில், சவக்காரம் போட்டு குளிக்கும் காட்சியை.. பார்த்த வெளிநாடடவர்கள்.. எம்மை ஏளனமாக பார்த்தனர்.– கமல் குணரத்ன.-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது – கமல் குணரத்ன

ஜனாதிபதி மாளிகையில் இருந்த... நீச்சல் தடாகத்தில், சவக்காரம் போட்டு குளிக்கும் காட்சியை.. பார்த்த வெளிநாடடவர்கள்.. எம்மை ஏளனமாக பார்த்தனர். – கமல் குணரத்ன.-

காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(19) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் வன்முறையை தூண்டி, பொலிஸாரை தாக்கி, மிகவும் கீழ்த்தரமான விமர்சித்தவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அத்தகையவர்களுக்காக நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகின்றனர்.

அதுமட்டுமல்ல சில சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்குள் கைதட்டுகின்றனர். இப்படியான நடவடிக்கையால் பொலிஸார் உள ரீதியில் பாதிக்கப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் தவறான வழியில் பணம்தேடி வீடுகளை நிர்மாணித்து இருந்தால், அதற்கு எதிராக செயற்படுவதற்கு நாட்டில் சட்ட கட்டமைப்பு உள்ளது.

இப்படியான பிரச்சினைகளை காட்டாட்சிமூலம் தீர்க்க முடியாது எனவும், எவரும் சட்டத்தை கையில் எடுத்து செயற்படவும் முடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் எனக் கூறப்படுபவர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்நுழைந்த பின்னர், அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் சவக்காரம் போட்டு குளிக்கும் காட்சியும் வெளியானது.

இது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு.. பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாடுகளில் உள்ளவர்கள், அந்த சம்பவத்தை வைத்து... எம்மவர்களை, ஏளனமாக பார்த்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1295430

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to ஜனாதிபதி மாளிகையில் இருந்த... நீச்சல் தடாகத்தில், சவக்காரம் போட்டு குளிக்கும் காட்சியை.. பார்த்த வெளிநாடடவர்கள்.. எம்மை ஏளனமாக பார்த்தனர்.– கமல் குணரத்ன.-
  • கருத்துக்கள உறவுகள்

பின்ன...

ஜெர்மனியில் இருந்து, தமிழ்சிறியர், குமாரசாமியார், கந்தையர்57, பஞ்சார் பார்த்து கெக்களம் போட்டு சிரிச்சது, லண்டன் வரை கேட்டதே...  

****

சனம் பெற்றோலுக்கும், காஸ் சிலிண்டருக்கும், பாணுக்கும் வரிசையில நிண்டது மரியாதையா இருந்தது, இந்த ஆமி மண்டையருக்கு !

****
 

பாதுகாப்பு செயலாலாலராக, முப்படைக்கும், போலீசுக்கும் பொறுப்பாக இருந்து, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை பாதுகாக்காமல், தலை தெறிக்க ஓடவிட்ட பின்னர், அதற்கான பொறுப்பை எடுத்து, ராஜினாமா செய்ய வேண்டியவர், தடாகத்தில குளிச்ச விடயம், அவமானமாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

பின்ன...

ஜெர்மனியில் இருந்து, தமிழ்சிறியர், குமாரசாமியார், கந்தையர்57, பஞ்சார் பார்த்து கெக்களம் போட்டு சிரிச்சது, லண்டன் வரை கேட்டதே...  

****

சனம் பெற்றோலுக்கும், காஸ் சிலிண்டருக்கும், பாணுக்கும் வரிசையில நிண்டது மரியாதையா இருந்தது, இந்த ஆமி மண்டையருக்கு  

அவற்றை அறிவுக்கு ஏற்ற படிதானே பேச முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்கோ! சொந்த மக்களை அந்நிய நாடுகளின் உதவியோடு, அந்நிய படையணிகளை கொண்டு கொன்று குவிக்கும்போது ஏளனமாக பாக்கவில்லையோ? சொந்த மக்களின் பணத்தை சுரண்டிக்கொண்டோடி நாடு நாடாய் அலையும்போது ஏளனம் செய்யவில்லையோ? எல்லா நாடுகளிடமும் கையேந்தும்போது ஏளனம் செய்யவில்லையோ? வெளிநாட்டு இளைஞர் சாப்பாடு கொடுக்கும்போது நம்மவர் கையேந்தி நிற்கும் போது ஏளனம் செய்யவில்லையோ? அதுதான் கண்டித்தார்களே! உங்களுக்கு அது உறைக்கவில்லை, வெட்கம் வரவில்லை?  நாட்டுமக்களை தெருவில் விட்டால்; அவர்களுக்கு எது தேவையோ, எது கிடைத்ததோ அதை அனுபவித்தார்கள். கொள்ளை அடித்தவர்கள் தங்களை புத்திசாலிகள் என்று காட்ட இப்படியான கட்டுக்கதைகளை அவிட்டு விடுவார்கள்!          

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் மாதிரி மூடிவைச்சிட்டு செய்தால்.. இந்த அவமானம் வந்திருக்காது என்று நினைக்கிறார் போல. என்ன மீடியாவுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் பதவாகி இருந்தால்.. இவர் இப்ப உந்தப் பதவியிலும் இருக்க முடியாது. அவமானப்பட்டு சிறையில் இருந்திருக்கலாம்.. அதுவும் சர்வதேச அளவில் அறியப்பட்ட மிக மோசமான இனப்படுகொலை...அரச பயங்கரவாதிகளில் ஒருவராக. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.