Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈஸ்டர் தாக்குதல் – இலங்கைக்கு விரையும், "ஸ்கொட்லாந்து யார்ட்"  பொலிஸார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியைச் சேர்ந்த 52 பேரிடம் குற்ற தடுப்பு பிரிவு வாக்கு மூலம் பதிவு

ஈஸ்டர் தாக்குதல் – இலங்கைக்கு விரையும், "ஸ்கொட்லாந்து யார்ட்"  பொலிஸார்!

ஈஸ்டர் தாக்குதலுக்கான மூல காரணத்தை கண்டறியும் வகையில் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த தாக்குதல் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சுயாதீன விசாரணை நடாத்தும் நோக்கிலேயே ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் சுயாதீனமான விசாரணைகள் நடாத்தப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸாரை அழைத்து சுயாதீன விசாரணை நடாத்த தீர்மானித்துள்ளார் என கூறப்படுகின்றது.

https://athavannews.com/2022/1296006

  • கருத்துக்கள உறவுகள்

இது யாருக்கு ஆப்பு வைக்கும் ரணிலின் நடவடிக்கை என்பது தெரியவில்லை.
கோத்தா உட்பட ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பத்தையும் வெள்ளையடித்து அவர்களுக்கு நன்றிக்கடனை செலுத்துவதற்காகவா அல்லது அவர்களுக்கு குறிசுட்டு அவர்களை நிரந்தரமாகவே ஓரங்கட்டவா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கும்போது இந்த அவசர நடவடிக்கை சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இது சுயாதீன விசாரணையாக இருக்குமா, இந்த விசாரணைக்கு ஆகும் செலவுகளை யார் பொறுப்பேற்பது?  நாட்டில் நடந்த பெரிய அளவிலான ஊளல்கள் பணமோசடிகள் அத்துடன் ராஜபக்சக்களில் சுமத்தப்பட்டுள்ள அன்னிய செலாவணி மோசடி என்பவற்றிற்கான விசாரணைகள் அல்லது நாட்டிலிருந்து திருடப்பட்ட டாலர் கையிருப்பு எங்கே பதுக்கிவைக்கப்பட்டுள்ளது அல்லது முதலீடு செய்யப்பட்டுள்ளது?. இதுபோன்ற விடயங்களையும் சுயாதீனமாக ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸாரை அழைத்து விசாரணை செய்யவேண்டும் என்பது ரணிலுக்கு தோன்றவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே குண்டுவெடிப்பு நடந்த சில வாரங்களில் வெளிநாட்டு படை ஒன்று விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது, ஆனால் கோத்தா தங்கள் இராணுவம் அதற்கான தகுதியுடையது, வெளிநாட்டுப்படையின் பிரசன்னம் தேவையற்றது  என மறுப்பு வெளியிட்டிருந்தார். காரணம் தான் அகப்படுவேன் என்பது அவருக்கு தெரியும். ஒருதடவை மன்னார் நீதிமன்ற தாக்குதலின் போதும் இப்படியான ஒரு விசாரணை கோரப்பட்டபோது ரிஷாத் அது தேவையற்றது என தெரிவித்திருந்தார். காரணம் தான் அகப்படுவேன் என்பது அவருக்கு தெரியும். ஆனால் நான் நினைக்கிறன் குண்டுவெடிப்புக்கு காரணம் நல்லாட்சி அரசு என்று குற்றம் சுமத்தி தங்களை கதாநாயகர்களாக்கி அரசை பிடித்துக்கொண்டது ராஜக்பக்ஷா கூட்டம். இது நல்ல சந்தர்ப்பம், இதை பயன்படுத்தி உண்மையை வெளிகொண்டுவந்து ராஜ பக்ஸ கூட்டத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் வேலையாக இருக்கலாம், இல்லையெனில் ரணில் நிம்மதியாக அரசியல் நடத்த முடியாது குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஒருவேளை பயங்காட்டி ஒதுங்கியிருக்கச் செய்யும் தந்திரமாகவும்  இருக்கலாம், இல்லை இவர்களின் மோசடியையும் ஆராயலாம். கோத்தாவின் வருகையை கட்டுப்படுத்த ரணில் முனைகிறார் என நினைக்கிறேன்,  வந்தாலும் இந்த விசாரணையை பயன்படுத்தி எதிர்ப்பு இல்லாமல் கைது செய்யலாம். நரிப்புத்தி யாருக்கு தெரியும்?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்குள் இந்தியாவும் சம்பந்தப்பட்டிருந்தால்....................?

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை கைவிடப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 விசாரிக்கவெண்டு  பெட்டி படுக்கையோட வாற ஸ்கொட்லாண்ட் யாட்க்கு இது தெரியாமலா இருக்கும்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

 விசாரிக்கவெண்டு  பெட்டி படுக்கையோட வாற ஸ்கொட்லாண்ட் யாட்க்கு இது தெரியாமலா இருக்கும்? 😎

 

On 25/8/2022 at 13:31, தமிழ் சிறி said:

ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

On 25/8/2022 at 13:31, தமிழ் சிறி said:

இது குறித்து சுயாதீன விசாரணை நடாத்தும் நோக்கிலேயே ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

On 25/8/2022 at 13:31, தமிழ் சிறி said:

ஜனாதிபதி, ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸாரை அழைத்து சுயாதீன விசாரணை நடாத்த தீர்மானித்துள்ளார் என கூறப்படுகின்றது.

சும்மா கூப்பிடுகிறோம் என்று  பயங்காட்டப்போகிறார்கள். கோத்தாவும் நாடு திரும்புகிறார், வரும் திகதியை பிற்போட்டார் என்று செய்திகள் வருகின்றன, இதுதான் காரணமோ? ஒருவேளை ஸ்கொட்யாட் பொலிசைக்கொண்டு கோத்தாவை கைது செய்கிற திட்டமாக இருக்கலாம். நரி எந்தப் பொந்துக்காலை  ஓடும் எண்டு தெரியாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, satan said:

சும்மா கூப்பிடுகிறோம் என்று  பயங்காட்டப்போகிறார்கள். கோத்தாவும் நாடு திரும்புகிறார், வரும் திகதியை பிற்போட்டார் என்று செய்திகள் வருகின்றன, இதுதான் காரணமோ? ஒருவேளை ஸ்கொட்யாட் பொலிசைக்கொண்டு கோத்தாவை கைது செய்கிற திட்டமாக இருக்கலாம். நரி எந்தப் பொந்துக்காலை  ஓடும் எண்டு தெரியாது. 

கோத்தாவிற்கு தற்போது இருக்கும் எதிர் அலையை பயன்படுத்தி ஏதாவது நரி வேலை செய்ய முற்படலாம்.
இப்படியே நாள் போகப்போக ஆறின கஞ்சி பழங்கஞ்சியாகி கோத்தா புனிதர் ஆக்கப்பட்டு போர்வீரனாக்கப்பட்டு மாவீரனாக்கப்பட்டு மகுடத்துடன் மீண்டும் ஜெயவே வா கோஷத்துடன் நாட்டுக்குள் அழைத்து வரப்படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2022 at 10:54, குமாரசாமி said:

 விசாரிக்கவெண்டு  பெட்டி படுக்கையோட வாற ஸ்கொட்லாண்ட் யாட்க்கு இது தெரியாமலா இருக்கும்? 😎

அதுக்காக இலவச கொலிடே, 5* ஹோட்டல், இத்யாதி, இத்யாதியை வேண்டாம் எண்டு சொல்ல ஏலுமே🤣.

On 26/8/2022 at 10:39, satan said:

விசாரணை கைவிடப்படும்.

லலித், பிரேமதாச கொலைகளையும் ஸ்கொட்லாண்ட் யார்ட் வந்து சும்மா துலக்கோ, துலக்கு எண்டுதானே துலக்கினவை?🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

அதுக்காக இலவச கொலிடே, 5* ஹோட்டல், இத்யாதி, இத்யாதியை வேண்டாம் எண்டு சொல்ல ஏலுமே🤣.

ஆயுர்வேத எண்ணை மசாஜ்..........?  😂

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2022 at 04:31, தமிழ் சிறி said:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியைச் சேர்ந்த 52 பேரிடம் குற்ற தடுப்பு பிரிவு வாக்கு மூலம் பதிவு

ஈஸ்டர் தாக்குதல் – இலங்கைக்கு விரையும், "ஸ்கொட்லாந்து யார்ட்"  பொலிஸார்!

ஈஸ்டர் தாக்குதலுக்கான மூல காரணத்தை கண்டறியும் வகையில் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த தாக்குதல் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சுயாதீன விசாரணை நடாத்தும் நோக்கிலேயே ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் சுயாதீனமான விசாரணைகள் நடாத்தப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸாரை அழைத்து சுயாதீன விசாரணை நடாத்த தீர்மானித்துள்ளார் என கூறப்படுகின்றது.

https://athavannews.com/2022/1296006

நியூ ஸ்கொட்லாண்ட் யார்ட் என்பது இலண்டன் பெருநகர பொலீசாரின் தலைமையகம்.

இவர்களின் திறனை பார்த்து இங்க சனம் ரொம்பகடுப்பா திரியுது. அண்மையில் தலைமை அதிகாரி விலகும் படி ஆயிற்று.

இது ரணில் காட்டும் வெள்ளைகார பூச்சாண்டி.

Just now, குமாரசாமி said:

ஆயுர்வேத எண்ணை மசாஜ்..........?  😂

🤣 இத்யாதிக்குள் உலகமே அடங்கும் சிதாலேப எண்ணை மசாஜ் உட்பட🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.