Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு!

R-1-7-780x450.jpg

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை நாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ் புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், மதப் பெரியார்கள் மற்றும் சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள இந்த அறைகூவலை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் சாருமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இந்த முயற்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் ஈடுபட்டு அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு உயர் குழுவை அமைத்து, அதன் மூலம் ஒரு தீர்மானத்தை எடுத்து தமிழ் மக்களுக்கு அது குறித்து விளக்கமூட்டி அதனை அரசாங்கத்தின் முன்பாக சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இவர்கள் அனைத்து தமிழ் கட்சிகளின் தலைமைகளையும் கேட்டுள்ளனர்.

வெளிநாட்டு தூதுவர்களை மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை தனித்தனியே அல்லது குழுக்களாக தமிழ் கட்சிகள் சில சந்தித்து பேசி வருவதால் எந்த பலனும் இல்லை. அவை வெறுமனே ஊடகங்களுக்கு செய்திகளாக மட்டுமே பிரயோசனப்படுத்தப்படும்.

யுத்த காலத்திலும் சரி யுத்தம் முடிவடைந்த கடந்த 10 வருட காலத்திலும் இந்த நிலைமையைத்தான் நாங்கள் கண்டு வருகின்றோம்

இது தமிழ் கட்சிகள் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே நோக்கப்படுகிறது. இனியும் இந்தப் பருப்பு வேகாது எனும் அளவுக்கு தமிழ் மக்கள் இத்தகைய விடயங்களில் வெறுத்துப் போய் உள்ளனர்.

ஆகவே இந்த பொய்யான பரப்புரைகளை விடுத்து தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து புதிய வேலை திட்டத்தில் இறங்க வேண்டும். அது அமைச்சர் தேவானந்தா தலைமையில்தான் இருக்க வேண்டுமென்று இல்லை.

அவரையும் இணைத்து எல்லோரும் இணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த ஒரு தீர்வு கிட்டுமென தெரிவித்துள்ள புத்திஜீவிகள் பலரும், அதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

https://akkinikkunchu.com/?p=223751

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்த புத்திசீவிகளும் அரசியல் கட்சிகளும்? 

அக்கினிக் குஞ்சு அதையும் சொல்லிப் போயிருக்கலாம் ? 

😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

யாரப்பா அந்த புத்திசீவிகளும் அரசியல் கட்சிகளும்? 

அக்கினிக் குஞ்சு அதையும் சொல்லிப் போயிருக்கலாம் ? 

😉

அவரேதான்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

யாரப்பா அந்த புத்திசீவிகளும் அரசியல் கட்சிகளும்? 

அக்கினிக் குஞ்சு அதையும் சொல்லிப் போயிருக்கலாம் ? 

😉

அக்கினிக்குஞ்சுக்கு மறதி அதிகம் போலும்

டக்லஸ் மாமாவே சொல்லியிருக்கிறார்

என்னுடன் சேருபவர்கள் எல்லோரும் சுயநலவாதிகளாக கெட்டவர்களாக இருக்கிறார்களே என்று?

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலையும் ஒரு விளையாட்டு நடந்திச்சு...தெருத்திருவிழாவில் ஒரு பூத்து....இலங்கைவாழ் தமிழ் பேசு முசுலிம் சம்மேளனம்....எட்டிப் பார்த்தால்...முதல் தமிழ்..புத்தகம் வெளியிட்டதே நாமதானாம்..அதைவிட தமிழ் ...சகலவிடையங்களையும் கையாண்டது நாமதானாம்...அசுரப்பு,கக்கீமின் புத்தகம் வரை பவிக்கிடக்கு...சின்னதா ஒரு புத்தகம் ..யாழ் முசுலீம்கள் வேண்டுவதென்ன....காணியும் இடமும்...கிழக்கு எங்கடைதான்...நானா ஒருவர் கடை திறந்து...அத்திவாரம் போட்டிருக்கிறார்... கொழும்பு பாய் பியாணியும்...கேரளாக்கடையும் களை கட்டியிருக்கு...சாணக்கியன் தம்பி புலம்பெயர்ந்த தமிழினம் ஒன்று படவேணும் என்றூ  அந்த இடத்தில் முழங்கியிருக்கிறார்....எங்கையோ இடிக்குது...கிழக்கின் ஆரம்பம் கனாடவிலையும் களைகட்டுதுபோலை...

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, alvayan said:

கனடாவிலையும் ஒரு விளையாட்டு நடந்திச்சு...தெருத்திருவிழாவில் ஒரு பூத்து....இலங்கைவாழ் தமிழ் பேசு முசுலிம் சம்மேளனம்....எட்டிப் பார்த்தால்...முதல் தமிழ்..புத்தகம் வெளியிட்டதே நாமதானாம்..அதைவிட தமிழ் ...சகலவிடையங்களையும் கையாண்டது நாமதானாம்...அசுரப்பு,கக்கீமின் புத்தகம் வரை பவிக்கிடக்கு...சின்னதா ஒரு புத்தகம் ..யாழ் முசுலீம்கள் வேண்டுவதென்ன....காணியும் இடமும்...கிழக்கு எங்கடைதான்...நானா ஒருவர் கடை திறந்து...அத்திவாரம் போட்டிருக்கிறார்... கொழும்பு பாய் பியாணியும்...கேரளாக்கடையும் களை கட்டியிருக்கு...சாணக்கியன் தம்பி புலம்பெயர்ந்த தமிழினம் ஒன்று படவேணும் என்றூ  அந்த இடத்தில் முழங்கியிருக்கிறார்....எங்கையோ இடிக்குது...கிழக்கின் ஆரம்பம் கனாடவிலையும் களைகட்டுதுபோலை...

May be an image of 4 people, beard and people standing

கனடாவில் வைத்து இன மத நல்லிணக்கத்தின் பெயரால் குர் ஆனை வழங்குகிறார்கள் கெளரவ சாணக்கியன் பெற்றுக்கொள்கிறார்
வாழ்த்துக்கள். ❤️
பதிலுக்கு பகவத் கீதையினையோ, பைபிளையோ சாணக்கியன் வழங்கியிருந்தால் மத இன நல்லிணக்கத்தின் பெயரால் அவர்கள் அதை பெற்றிருப்பார்களா?
 
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முஸ்லிம்கள் தடையாக இருக்கும் வரைக்கும் தமிழ் தரப்பின் நல்லிணக்க நடவடிக்கைகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போன்றதே...
 
கல்முனை வடக்கு விடயத்தில் தீவிரமாக இருந்த தமிழ் இளையோர்கள் நல்லிணக்கத்தின் பெயரால் காயடிக்கப்பட்டிருக்கின்றனர் அவர்களின் குரல்கள் மெளனிக்கவைக்கப்பட்டிருக்கின்றன. இது
கிழக்கில் தமிழர்களின் இருப்புக்கும் அரசியலுக்கும் ஆபத்தானது.
 
முஸ்லிம்களின் நல்லிணக்க நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களின் பக்கத்தை வலுப்படுத்தும் முகமாகவே காலம் காலமாக இருந்துவருகிறது...
  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே நான் சொன்னேன்...கனடியன் தமிழ் காங்கிரசிலும் அத்திவாரம் போட்டுக் கொடுக்கத்தான் ..இவர் விளையுறார்....சின்ன  ஒரு இடம் ....அப்புறம் கிழக்கின் நிலைமைதான்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கனடாவில் வைத்து இன மத நல்லிணக்கத்தின் பெயரால் குர் ஆனை வழங்குகிறார்கள் கெளரவ சாணக்கியன் பெற்றுக்கொள்கிறார்

வாழ்த்துக்கள். ❤️ [ 😭 ]

பதிலுக்கு பகவத் கீதையினையோ, பைபிளையோ சாணக்கியன் வழங்கியிருந்தால் மத இன நல்லிணக்கத்தின் பெயரால் அவர்கள் அதை பெற்றிருப்பார்களா?

ஒரு போதும் பகவத் கீதையினையோ பைபிளையோ அவர்கள் பெற்று கொள்ள மாட்டார்கள் அவர்கள் குரானை கொடுத்தது முஸ்லிம் மதத்தில் சேருவதற்கான அழைப்பு.
குரானை  பெற்று கொள்ளுதல் மத நல்லிணக்கமாக பார்க்கபடும். பகவத் கீதையையோ பைபிளையோ அல்லது மத நிராகரிப்பு புத்தகம் ஒன்றை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் அது மதவெறியாக மத சுதந்திரத்திற்கு எதிரான செயலாக  பார்க்கபடும்.

கனடாவில் வைத்து சாணக்கியனுக்கு குரான் வழங்கபடுகிறது சுதந்திரமான ஜனநாயக கனடாவின் சுதந்திரம் எதற்கு எல்லாம் பயன்படுத்தபடுகிறது🙁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு போதும் பகவத் கீதையினையோ பைபிளையோ அவர்கள் பெற்று கொள்ள மாட்டார்கள் அவர்கள் குரானை கொடுத்தது முஸ்லிம் மதத்தில் சேருவதற்கான அழைப்பு.
குரானை  பெற்று கொள்ளுதல் மத நல்லிணக்கமாக பார்க்கபடும். பகவத் கீதையையோ பைபிளையோ அல்லது மத நிராகரிப்பு புத்தகம் ஒன்றை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் அது மதவெறியாக மத சுதந்திரத்திற்கு எதிரான செயலாக  பார்க்கபடும்.

கனடாவில் வைத்து சாணக்கியனுக்கு குரான் வழங்கபடுகிறது சுதந்திரமான ஜனநாயக கனடாவின் சுதந்திரம் எதற்கு எல்லாம் பயன்படுத்தபடுகிறது🙁

வருகின்ற தெருத் திருவிழாவில் எல்லோருக்கும் குரான் கொடுக்கப்படும்....அதுவும் கக்கீம் அல்லது ரிசாத்து நேரில் வந்து..🙃

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

ஆகவே இந்த பொய்யான பரப்புரைகளை விடுத்து தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து புதிய வேலை திட்டத்தில் இறங்க வேண்டும். அது அமைச்சர் தேவானந்தா தலைமையில்தான் இருக்க வேண்டுமென்று இல்லை.

 

15 hours ago, கிருபன் said:

அவரையும் இணைத்து எல்லோரும் இணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த ஒரு தீர்வு கிட்டுமென தெரிவித்துள்ள புத்திஜீவிகள் பலரும், அதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிரிப்புத்தான் வருகுது! இது, தன்னையும் தமிழ்கட்சி என்று மக்கள் ஏற்கவேண்டும், தமிழ்க்கட்சிகளாடு சேர்ந்து குளிர் காயவேண்டும் என்று எத்தனை அறிக்கை, ஊழையிடல். போதாதற்கு ரணிலையும் வில்லங்கத்திற்கு இழுத்து வைத்துக்கொண்டு. அவர் தனது  கையை சுத்தமாக வைத்துக்கொண்டு வேலையே இலகுவாக்க இவரை அழைத்தால், இவர் வேறொரு லெவலில். 

இந்த வசனங்கள்  அடிக்கடி இவர் பாவிக்கும் வசனங்கள். நல்லவேளை, மக்கள் என்று கூறவில்லை. இருந்தாலும் புத்திசாலி. மக்கள் என்று சொன்னால் அவரை ஆதரிக்காத மக்கள் எப்படி கோரிக்கை வைக்க முடியும் என்று கேள்வி எழும்.  எப்படியாவது தமிழ்கட்சிகளோடு ஒட்டி, தனது தகிடு தத்தங்களை மறைத்து, தன்னை புனிதன் என்று காட்ட வேண்டும். இவ்வளவு நாளும் சிங்களத்திடம் நக்கித்தித்தின்று இப்போ கூட்டம் தேடுது உடு அடிக்க. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.