Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை போன்றதொரு நிலைமையை பங்களாதேஸ் ஒருபோதும் எதிர்கொள்ளாது- பிரதமர் ஷேக் ஹசீனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போன்றதொரு நிலைமையை பங்களாதேஸ் ஒருபோதும் எதிர்கொள்ளாது- பிரதமர் ஷேக் ஹசீனா

By RAJEEBAN

30 AUG, 2022 | 05:23 PM
image

பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நிலையை எதிர்கொள்ளாது  என அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நெருக்கடியை சந்திக்காது மாறாக  அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அது முன்னோக்கி நகரும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனது கட்சி தலைவர்களும் ஆதரவாளர்களும் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்  பங்களாதேஸ்ஒருபோதும் இலங்கை போன்றிருக்காது  இருக்கவும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய பிஎன்பி அரசாங்கத்தின் காலத்தில் பங்களாதேஸ் இலங்கைபோன்றதொரு நிலையை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது ஆனால் அவாமி லீக் அரசாங்கம் நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டு விட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவாமி லீக் நாட்டை நெருக்கடியான நிலையிலிருந்து மீட்டுள்ளது ஆகவே ஏன் பங்களாதேஸ் இலங்கை போன்ற நிலையை எதிர்கொள்ளவேண்டு;ம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/134703

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைப்போல சிங்கப்பூரை கொண்டு வருவோம் என்ற நிலை மாறி இலங்கை போன்று எமது நாடு வங்குரோத்து ஆகாது என்ற நிலை 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இலங்கையைப்போல சிங்கப்பூரை கொண்டு வருவோம் என்ற நிலை மாறி இலங்கை போன்று எமது நாடு வங்குரோத்து ஆகாது என்ற நிலை 

இன்று அநேகமான நாடுகள் வறுமைக்கு இலங்கையை உவமைப்படுத்தும் நிலைக்கு இலங்கை வந்துள்ளது. நாங்கள் வறுமையை விரட்டுவோம், பொருளாதாரத்தை  உயர்த்துவோம், கட்டியெழுப்புவோம் என்று எதையாவது சொல்லலாம். எதற்கு இலங்கையை இழுக்கிறார்கள்? அவ்வளவுக்கு அடிமாடாய் கிடக்குது இலங்கை. இதில இறையாண்மை, சிங்கள, பவுத்தம் என்கிற கோசம் ஒன்றும் குறைச்சலில்லை! எப்படி இலங்கை இந்த நிலைக்கு வந்தது? தாங்கள் எப்படி வெற்றியடைந்தோம் என்பதையும் சேர்த்து சொன்னார்கள் என்றால் இலங்கைக்கு இன்னும் மதிப்பு உயரும். எங்கட கமால் குணரட்ன இதைக்கேட்டு பெருமிதம் அடைவாரா? இல்லை....,  நீச்சல் தடாகத்தில் சவர்க்காரம் போட்டு குளித்ததால் வெட்கப்பட்டவர், இதைக்கேட்டு என்ன மனநிலை அடைந்தார் என்பதையும் விளக்கினால் நல்லது.    

  • கருத்துக்கள உறவுகள்

செருப்படி..இதைவிட வேறு என்ன வேணும்..

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

இலங்கையைப்போல சிங்கப்பூரை கொண்டு வருவோம் என்ற நிலை மாறி இலங்கை போன்று எமது நாடு வங்குரோத்து ஆகாது என்ற நிலை 

நாம் பிறந்து வளர்ந்த நாட்டை இப்படி அவமதிக்கும் இடத்திற்குக் கொண்டு வந்துவிட்ட சிங்கள இனவெறியர்கள்.

2 hours ago, satan said:

இன்று அநேகமான நாடுகள் வறுமைக்கு இலங்கையை உவமைப்படுத்தும் நிலைக்கு இலங்கை வந்துள்ளது. நாங்கள் வறுமையை விரட்டுவோம், பொருளாதாரத்தை  உயர்த்துவோம், கட்டியெழுப்புவோம் என்று எதையாவது சொல்லலாம். எதற்கு இலங்கையை இழுக்கிறார்கள்? அவ்வளவுக்கு அடிமாடாய் கிடக்குது இலங்கை. இதில இறையாண்மை, சிங்கள, பவுத்தம் என்கிற கோசம் ஒன்றும் குறைச்சலில்லை! எப்படி இலங்கை இந்த நிலைக்கு வந்தது? தாங்கள் எப்படி வெற்றியடைந்தோம் என்பதையும் சேர்த்து சொன்னார்கள் என்றால் இலங்கைக்கு இன்னும் மதிப்பு உயரும். எங்கட கமால் குணரட்ன இதைக்கேட்டு பெருமிதம் அடைவாரா? இல்லை....,  நீச்சல் தடாகத்தில் சவர்க்காரம் போட்டு குளித்ததால் வெட்கப்பட்டவர், இதைக்கேட்டு என்ன மனநிலை அடைந்தார் என்பதையும் விளக்கினால் நல்லது.    

இந்த அம்மையாருக்கு என்ன துணிச்சல். ஒருவேளை இலங்கையிலிருந்து தமது நாட்டை நோக்கி நகர்ந்துள்ள ஆடைத் தொழிற்றுறையைவைத்துக் கூறுகிறாரா? சிங்களத்தக்கு ஏது வெட்கம். அதற்குத் தமிழரை அழித்தால்போதும். அதற்காக எந்த மலத்தையும் சுமக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நமது நாட்டின் சிறப்பை உலகமே பாத்ததே, ஜனாதிபதி தப்பியோடிய விமானத்தை பலபேர் தொடர்கண்காணிப்பு செய்தனரே, இதற்கு பிறகு கருத்து சொல்வதற்கு எதற்கு அஞ்ச வேண்டும்? அதிலும் அவர்களிடமே கைநீட்டியிருக்கிறார்கள்.  அவர் என்ன இங்கையிலேயே இருக்கிறா பிடிச்சு உள்ள போட? அல்லது விசாவை ரத்துசெய்ய? ஏன் இவர்களுக்கு துணிச்சல் இருந்திருந்தால்; அவவின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்திருக்கலாம், கேள்வி கேட்டிருக்கலாம், எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். எதுவுமே செய்யவில்லையே காரணம் என்ன? இவர்களுக்கு துணிவில்லை. நீங்கள் சொன்னதுபோல் வெட்கமும் இல்லை. இதுவே நாம் சொன்னால் சும்மா வீரம் பீறிக்கொண்டு வந்து நாட்டிலுள்ள தமிழரது சொத்துக்கள்  கொழுந்து விட்டெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 31/8/2022 at 10:33, satan said:

இதுவே நாம் சொன்னால் சும்மா வீரம் பீறிக்கொண்டு வந்து நாட்டிலுள்ள தமிழரது சொத்துக்கள்  கொழுந்து விட்டெரிந்திருக்கும்.

அவர்களுக்கு நெருப்பு வைத்து எரிப்பது என்பது மிகவும் பிடித்த வேலையாக தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரில் தொடக்கி வைத்தது, இப்போ நாடு பூராவும் தொடருது. மக்களின் தேவைக்கு எரிபொருள் இருக்கோ இல்லையோ சொத்துக்களை எரிப்பதற்கு தாராளமாக கிடைக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.