Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணி அண்ணாவின் தினம் ஒரு நகைச்சுவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்: டாக்டர் நான் நூறு வருடம் வாழ முடியுமா

டாக்டர்: நீங்கள் தண்ணி அடிப்பீர்களா அல்லது புகை பிடிப்பீர்களா?

ஒருவர்: ஒரு நாளும் இல்லை

டாக்டர்:நீங்கள் விரைவாக கார் ஓடுவது,சூதாடுவது அல்லது பொண்ணு கிண்ணு

ஒருவர்:ஒரு போதும் இல்லை டாக்டர்

டாக்டர்:அப்போ என்ன மயிருக்கையா நூறு வருசம் வாழ்ந்து?

ஒருவர்: ?????

  • Replies 78
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பொலிஸ் நிலையத்தில் நடந்த உரையாடல்

வந்தவர் : என்னுடைய மனைவியை ஒரு மாதமாய் காணவில்லை.

பொலிஸ் : ஏன் இவ்வளவு காலமாக அறிpவக்கவில்லை.

வந்தவர் : சனிப்பெயர்ச்சியாக்கும் எண்டு நினைச்சு சத்தம் போடாமல் இருந்திட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன்! மிக நல்ல சுவைகள். தொடருங்கள் வாழ்த்துக்கள். :blink::lol:

பொலிஸ் நிலையத்தில் நடந்த உரையாடல்

வந்தவர் : என்னுடைய மனைவியை ஒரு மாதமாய் காணவில்லை.

பொலிஸ் : ஏன் இவ்வளவு காலமாக அறிpவக்கவில்லை.

வந்தவர் : சனிப்பெயர்ச்சியாக்கும் எண்டு நினைச்சு சத்தம் போடாமல் இருந்திட்டன்

:P :P :lol: :P

சனிப்பெயர்ச்சி சூப்பர் :lol::):D

  • கருத்துக்கள உறவுகள்

முதலாளி: ஏண்டா! டின்ல எண்ணெய் குறையுது. வேலைக்காரன்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே. முதலாளி: டேய்! டின்ல மேலேதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டை என்று கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? தமிழ் கடி 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

  • தொடங்கியவர்

நபர்1 நான் தோடி ராகம் பாடட்டா?

நபர்2 வேண்டாம் அது எனக்குப் பிடிக்காத ராகம்

நபர்1 அப்ப கல்யாணி ராகம் பாடட்டா?

நபர்2 வேண்டாம் அது எனக்குப் பிடிச்ச ராகம்

:):):lol: :P :rolleyes:
  • தொடங்கியவர்

நீதிபதி

நீ குற்றவாளியா சுற்றவாளியா

கைதி

என்ன சேர் இதைக் கண்டுபிடிக்கத்தானே உங்களைச் சம்பளந்தந்து ணவைச்சிருக்கினம். பிறகு என்னைப் பிடிச்சுக் கேக்கிறீங்கள்

நீதிபதி

நீ குற்றவாளியா சுற்றவாளியா

கைதி

என்ன சேர் இதைக் கண்டுபிடிக்கத்தானே உங்களைச் சம்பளந்தந்து ணவைச்சிருக்கினம். பிறகு என்னைப் பிடிச்சுக் கேக்கிறீங்கள்

:rolleyes::):)

நுனாவிளான் உங்க நகைச்சுவைகளை பிரித்து பிரித்து போட்டால் வாசிக்கும் நமக்கு இலகுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாளி: ஏண்டா! டின்ல எண்ணெய் குறையுது.

வேலைக்காரன்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே.

முதலாளி: டேய்! டின்ல மேலேதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டை என்று கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க

நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு ?

ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

:)<_<:(:D

ஒரு மனிசன் செத்தால் இரண்டு பிரச்சினை.

ஒன்னு அவனை புதைக்கிறதா ? எரிக்கிறதா ?

எரிச்சா நோ புறப்பிளம். புதைச்சா இரண்டு புறப்பிளம்

அவனை புதைச்ச இடத்திலை புல்லு முளைக்குமா ? முளைக்காதா ?

முளைக்காட்டி நோ புறாப்பிளம். முளைச்சா இரண்டு புறாப்பிளம்.

முளைச்ச புல்லை மாடு துண்ணுமா துண்ணாதா ?

மாடு துண்ணாட்டி நோ புறாப்பிளம். துண்ணா 2 புறாப்பிளம்.

புல்லு துண்ண மாடு பாலு கறக்குமா ? கறக்காதா ?

பாலு கறக்காட்டி நோ புறாப்பிளம். கறந்தால் 2 புறாப்பிளம்.

அந்தப்பாலை குடிக்கலாமா ? குடிக்க கூடாதா ?

குடிக்காட்டி நோ புறாப்பிளம். குடிச்சால் 2 புறாப்பிளம்.

பாலை குடிச்சா மனுசன் செத்துப்போவானா சாக மாட்டானா ?

சாகாட்டி நோ புறாப்பிளம். செத்தால் 2 புறாப்பிளம்.

செத்த மனுசனை புதைக்கிறதா ? எரிக்கிறதா ?

எரிச்சால் நோ புறாப்பிளம் . . . . புதைச்சா இரண்டு புறப்பிளம்

அவனை புதைச்ச இடத்திலை புல்லு முளைக்குமா ? முளைக்காதா ?

முளைக்காட்டி நோ புறாப்பிளம். முளைச்சா இரண்டு புறாப்பிளம்.

முளைச்ச புல்லை மாடு துண்ணுமா துண்ணாதா ?

மாடு துண்ணாட்டி நோ புறாப்பிளம். துண்ணா 2 புறாப்பிளம்.

புல்லு துண்ண மாடு பாலு கறக்குமா ? கறக்காதா ?

பாலு கறக்காட்டி நோ புறாப்பிளம். கறந்தால் 2 புறாப்பிளம்.

அந்தப்பாலை குடிக்கலாமா ? குடிக்க கூடாதா ?

குடிக்காட்டி நோ புறாப்பிளம். குடிச்சால் 2 புறாப்பிளம்.

பாலை குடிச்சா மனுசன் செத்துப்போவானா சாக மாட்டானா ?

சாகாட்டி நோ புறாப்பிளம். செத்தால் 2 புறாப்பிளம்.

செத்த மனுசனை புதைக்கிறதா ? எரிக்கிறதா ?

எரிச்சால் நோ புறாப்பிளம் . . . .

...............................

...............................

எங்கேயோ கேட்டது . . .

பரணியண்ணா உது நம்ம குருவாகிய கலைஞன் அண்ணாவுக்கு சொல்லணும்.

ஒரு மனிசன் செத்தால் இரண்டு பிரச்சினை.

ஒரு மனிதன் செத்தா இவ்வளவு பிரச்சினையா மாஸ்டர்............... :)

ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

அட பேபி மாதிரி அறிவாளி போல இருக்கு அந்த பிள்ளை............ :P :P :P <_<

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

1 ) தி.க. தலைவர் வீரமணி

சொன்னது :

ஆனால் தி மு க அரசில் மூத்த அமைச்சராக இருக்கிற துரை முருகன் " முன்கூட்டியே எதையும் தெரிந்து கொள்கிற சக்தி படைத்தவர் பாபா .தன் சக்தியால் மோதிரம் வரவழைத்து எனக்கு தந்தார் என்பதுதான் நகைப்புக்கு இடம் தரக் கூடியது.மேஜிக் காட்சியை கடவுளின் அனுக்கிரகம் என்று சொல்வதை கலைஞரின் சர்க்காரில் அமைச்சராக இருக்கும் ஒருவரே பாராட்டுவது வேதனையாக இருக்கிறது

சொல்லாமல் விட்டது :

இதுக்கு பதிலா இவரும் பாபா காலிலேயே விழுந்திருக்கலாம்..வேட்டி தடுக்கி விழுந்துட்டாருன்னு சொல்லியாவது சமாளிச்சிருப்போம்

2 ) தமிழக அமைச்சர் துரை முருகன்

சொன்னது :

பாபா தனது சக்தியால் மோதிரம் வர வழைத்து எனக்கும் தயாநிதி மாறனுக்கும் மட்டும் தந்தார்

சொல்லாமல் விட்டது :

நல்ல வேளை...தயாநிதி மாறனுக்கும் தந்துட்டாரு..நா தனியா மாட்டியிருந்தா இதை வச்சே நம்ம அமைச்சர் பதவியை காலி பண்ணினாலும் பண்ணிருவாங்க.

3 ) முதலமைச்சர் கருணாநிதி

சொன்னது :

வானத்தை கிழித்து பொற்காசுகளை வாரி கொட்டிக் கொடுத்தாலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சொல்லாமல் விட்டது :

எந்தெந்தக் கொள்கைகளை அப்படீன்னு யாரும் கேக்காத வரைக்கும் சரி.

4 ) பாக் அதிபர் முஷாரப்

சொன்னது:

காஷ்மீர் பிரச்சினைக்கு வன்முறை மூலமே தீர்வு காண முடியும் என நம்புகிரவர்களை எங்களுடன் சேர்க்க மாட்டோம்

சொல்லாமல் விட்டது :

அவங்க கையில துப்பாக்கியும், வெடிகுண்டும் குடுத்து இந்தியாவுக்குள்ள அனுப்பிருவோம்

  • தொடங்கியவர்

நபர்1 : காதலியிடமும் மனைவியிடமும் சொல்லக் கூடாத விடயம் என்ன?

நபர்2 : காதலி இருக்கின்ற விடயத்தை மனைவியிடமும் மனைவி இருக்கின்ற விடயத்தை காதலியிடமும் சொல்லக் கூடாது

  • தொடங்கியவர்

நோயாளி டொக்டர் வயிறு எரியுது

வைத்தியர் எப்ப இருந்து

நோயாளி பக்கத்து வீட்டுப் பரிமளம் புதுசா 4 பெட்றூம் ஹவுஸ் வாங்கினதிலை இருந்து

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி நகைச்சுவை

சில பள்ளிகளில் நடக்கும் நகைச்சுவை

* செய்யாத வேலைக்கு தண்டனை

சிறுமி : அம்மா அம்மா இன்னைக்கு நான் செய்யாத ஒன்றிற்காக என்னை தண்டித்தார்கள்.

அம்மா : என்ன செய்யாத ஒன்றிற்காகவா? நான் நாளை பள்ளியில் வந்து கேட்கிறேன். ஆமாம் நீ என்ன செய்யலை?

சிறுமி : ஆசிரியர் வீட்டில் எழுதிவரச் சொன்ன வேலையை

* ஒருவர் தேர்வு எழுதச் சென்றார்.

கேள்விகள் அனைத்தும் அ அல்லது ஆ என்று இருந்தது. அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிப் போட்டு பூ வந்தால் அ என்றும், தலை வந்தால் ஆ என்றும் பதிலளித்தார்.

தேர்வு முடியும் நேரத்தில் மிகுந்த சோகமாக இருந்தார் அவர். அவரிடம் ஆசிரியர் கேட்டதற்கு, விடைகளை மீண்டும் சரிபார்க்கலாம் என்று நினைத்தால் அந்த நாணயத்தைக் காணவில்லை என்றார்.

* பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.

* ஆசிரியர் : பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே.... ஒண்ணுமே வரையாம வந்திருக்க?

மாணவன் : பாக்டீரியா கண்ணுக்குத் தெரியாதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க.

ஆசிரியர் : அவன் 10 காசு கொடுத்து தோசை வாங்கினான். இது என்ன காலம்?

மாணவன் : அதெல்லாம் ஒரு காலம் சார்.

* ஆசிரியர் : இந்த கணக்குல இவ்ளோ தப்பு இருக்கே. நீ ஒருத்தியே இவ்ளோ தப்ப எப்படித்தா செஞ்சியோ?

மாணவி : இல்ல டீச்சர். இந்த கணக்குப் போட எங்க

* ஆசிரியர் : இந்த கணக்குல இவ்ளோ தப்பு இருக்கே. நீ ஒருத்தியே இவ்ளோ தப்ப எப்படித்தா செஞ்சியோ?

மாணவி : இல்ல டீச்சர். இந்த கணக்குப் போட எங்க

எல்லாம் நகைக்க கூடிய துணுக்குகள். நன்றி நுணா

ஆனல இறுதி நகைச்சுவை என்ன தொங்கி நிக்குது போல இருக்கு

Edited by வெண்ணிலா

ஆசிரியர் : அவன் 10 காசு கொடுத்து தோசை வாங்கினான். இது என்ன காலம்?

மாணவன் : அதெல்லாம் ஒரு காலம் சார்.

ஆமாமல அது எல்லாம் ஒரு காலம் நல்லா இருக்கும் நகைசுவை எல்லாம்.......... :P

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாம் நகைக்க கூடிய துணுக்குகள். நன்றி நுணா

ஆனல இறுதி நகைச்சுவை என்ன தொங்கி நிக்குது போல இருக்கு"

* ஆசிரியர் : இந்த கணக்குல இவ்ளோ தப்பு இருக்கே. நீ ஒருத்தியே இவ்ளோ தப்ப எப்படித்தா செஞ்சியோ?

மாணவி : இல்ல டீச்சர். இந்த கணக்குப் போட எங்க அம்மாவும், அப்பாவும் கூட உதவி செஞ்சாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வகுப்பாசிரியர் மேசையில் கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டார்.

மாணவர்கள் மெதுவாகக் கதைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிது தூரத்தில் தலைமை ஆசிரியர் வருவதை ஒரு மாணவன் கவனித்து ஆசிரியரை உசுப்பிவிட்டுப் போனான். உடனே ஆசிரியர் பாடம் நடத்துவதுபோல் பாசாங்கு பண்ணி :

இப்படித்தான் உறங்கிக் கொண்டிருந்த சிங்கம் கர்ஜித்துக் கொண்டு எழுந்து நின்றது, என்றபடி எழும்பினார்.

தலைமையாசிரியரும் அருகே வந்து விட்டார். (அவருக்கு ஒரு சந்தேகம் இவர் நடிக்கிறார் என்று). அவர் வகுப்புக்குள் வந்து ஒரு மாணவனைப் பார்த்து:

தலைமை ஆசிரியர்: பல பழங்கள் சேர்ந்திருப்பதை என்னன்று சொல்வது?

மாணவன்: (முழிக்க, பின்னால் நின்ற நம்ம வாத்தியார் தன் பையிலிருந்த சீப்பையெடுத்து சாடை காட்டினார். உடனே மாணவன்) சீப்பு ஐயா என்றான்.

த.ஆசிரியர்: 'சந்தேகத்துடன்" ம்.ம். சரி. (அடுத்த மாணவனைப் பார்த்து)

நீ சொல்லு, பல பழங்கள் சேர்ந்திருப்பதை எப்படிச் சொல்வது?

மாணவன்: யோசிக்க, (நம்ம ஆளு பின்னால் நின்று குலை,குலை என்று வாயைக் குவித்து சாடைகாட்ட உடனே மாணவனும் தாமதிக்காமல்) வள்,வள்,வள் என்று குரைத்தான்.

தலைமை ஆசிரியரும் வாத்தியாரைப் பார்த்து முறைத்துக் கொண்டே அப்பால் சென்றார். :lol::lol:

நல்ல ஆசிரியர் தான். அதைவிட மானவர்கள் புத்திசாலிகள் போல இருக்குங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.