Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனம் ஒரு குரங்கு-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனம் ஒரு குரங்கு-பா.உதயன் 

அன்பும் அழுக்கும் ஆசையும் பாசமும் 
கோபமும் கொண்ட என் மனக்குரங்கு 
ஏன் தான் எதுகும் புரியவில்லை 
எப்பவும் பாய மறுப்பதில்லை 

மனதுக்குள் கிடக்கும் பாம்பைக் கூட 
குரங்குக்கு கொல்லத் தெரியவில்லை 
எத்தனை அழுக்குகள் மனசுக்குள் கிடக்குது 
குரங்குக்கு இது ஒன்றும் புரியவில்லை 

சும்மாய் இரு என்று குரங்கை சொன்னால் 
சும்மாய் இருக்கவும் முடியவில்லை 
எப்பவும் கத்துது எதிலும் பாயுது 
அமைதியாய் இருக்க அதுக்கு ஏது பழக்கம் 

தன்ன அறியாமல் எல்லாம் அறிந்தவன்
தான் என்றே துள்ளுது குரங்கு 
தனக்கே எல்லாம் தெரிந்தது போல் 
தாவுது குரங்கு எப்பவுமே 

இன்னும் ஓர் குரங்கு போல் தன்னை நினைக்குது 
இருப்பதைக் கொண்டு வாழவும் தெரியாமல் 
அந்தக் குரங்கைப்போல் வாழவும் பார்க்குது 
ஆடம்பரமாக சீவிக்க எண்ணுது 

பித்தனைப் போல் சில காலம் 
பிடிவாதமாய் சில காலம் பாசமாய் பல காலம் 
கோபமாய் சில காலம் எத்தனை மாயம் 
எத்தனை வேடங்கள் குரங்கின் நாடகம்

எவ்வளவு  உயரம் தான் என்று 
எப்பவும் குரங்குக்கு தெரிவதில்லை 
இருப்பது எல்லாம் நிரந்தரம் இல்லை 
இன்னும் குரங்குக்கு விளங்கவில்லை 

எத்தனை குரங்குகள் எத்தனை அழுக்கு 
எதுகும் குரங்குக்கு புரிவதில்லை 
ஆறடி மண்ணே இறுதியில் தஞ்சம் 
அதைப் பற்றிக் குரங்குக்கு தெளிவு இல்லை .

பா.உதயன் ✍️
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, uthayakumar said:

பா.உதயன் ✍️

கவிதை அருமை.... 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, uthayakumar said:

 

எத்தனை குரங்குகள் எத்தனை அழுக்கு 
எதுகும் குரங்குக்கு புரிவதில்லை 
ஆறடி மண்ணே இறுதியில் தஞ்சம் 
அதைப் பற்றிக் குரங்குக்கு தெளிவு இல்லை .

பா.உதயன் ✍️
 

இதை புரிவதிற்குள் வாழ்கை முடிந்துவிடுகின்றது, நல்ல சிறப்பான கவிதை👍

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, uthayakumar said:

எவ்வளவு  உயரம் தான் என்று 

எப்பவும் குரங்குக்கு தெரிவதில்லை 
இருப்பது எல்லாம் நிரந்தரம் இல்லை 
இன்னும் குரங்குக்கு விளங்கவில்லை 

எத்தனை குரங்குகள் எத்தனை அழுக்கு 
எதுகும் குரங்குக்கு புரிவதில்லை 
ஆறடி மண்ணே இறுதியில் தஞ்சம் 
அதைப் பற்றிக் குரங்குக்கு தெளிவு இல்லை .

பா.உதயன் ✍️
 

நல்ல ஒரு கவிதைக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2022 at 11:50, குமாரசாமி said:

கவிதை அருமை.... 👍🏼

 

On 11/9/2022 at 13:17, உடையார் said:

இதை புரிவதிற்குள் வாழ்கை முடிந்துவிடுகின்றது, நல்ல சிறப்பான கவிதை👍

 

On 11/9/2022 at 15:26, தமிழ் சிறி said:

நல்ல ஒரு கவிதைக்கு நன்றி.

நல்ல கருதிட்ட அனைவருக்கும் நன்றிகள்!🌺

On 11/9/2022 at 15:57, uthayakumar said:

சும்மாய் இரு என்று குரங்கை சொன்னால் 
சும்மாய் இருக்கவும் முடியவில்லை 
எப்பவும் கத்துது எதிலும் பாயுது 
அமைதியாய் இருக்க அதுக்கு ஏது பழக்கம் 

இத்தகைய குரங்கு மனத்தை நெறிப்படுத்திச் சமநிலையில் வைப்பது என்பது வாழ்நாள் நீண்ட ஒரு போராட்டம் தான். இதில் வென்றோர் ஞானியர். அவர்கள் கூட எத்தனையோ சோதனைகளைத் தாண்டியே பல்வேறு பயிற்சிகள் மூலம் தான் ஞான நிலையை அடைந்தனர். 😊

சிந்திக்கத் தூண்டும் கவிதையைத் தந்தமைக்கு நன்றி உதயன். 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.