Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: பங்கேற்க அழைக்கப்படாத நாடுகள் எவை தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: பங்கேற்க அழைக்கப்படாத நாடுகள் எவை தெரியுமா?

 
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இங்கிலாந்தின் முன்னாள் அரசத் தலைவரும், கொமன்வெல்த் நாடுகளின் தலைவருமான இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96வது வயதில் செப்டம்பர் 8 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையின் கோடைகால இல்லத்தில் காலமானார். அவரது உடல் செப்டம்பர் 19ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் முதல் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கியஸ்தர்கள் பிரிட்டனுக்கு வரவுள்ளனர்.

இந்த சூழலில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

1. ரஷ்யா

2. பெலாரஸ்

3. ஆப்கானிஸ்தான்

4. மியான்மர்

5. சிரியா

6. வெனிசுலா

இதுதவிர வட கொரியா, ஈரான் மற்றும் நிகரகுவாவின் தூதர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால், இந்த நாடுகளின் தலைவர்களுக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படவில்லை.

முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புதின், மூன்றாம் சார்லஸ் மன்னர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இருப்பினும் உக்ரைன் மீதான போர் காரணமாக, புதினுக்கு ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

https://thinakkural.lk/article/208513

  • கருத்துக்கள உறவுகள்


சொறி லங்கா ஆயுத அடிப்படையிலான முழு இனப்படுகொலை நடந்து, சொறி சிங்களம் மறைப்பதை, மறுப்பதை, பிரித்தானியாருக்கு எந்த விதமான மனகுத்துதலும் இல்லை; ஏனெனில் பிரித்தானியர் தமிழர் இனப்படுகொலையில் பங்காளிகள்.           

அனால், மேற்கு நிலைப்பாடுகளோடு ஒத்து வராதவர்களே, பிரித்தானியருக்கு எட்டப் பலம் புளிக்கும் என்ற, தாம் தார்மீக அடிப்படையில் உயர்ந்தவர்கள் என்ற புளிச்சல்  கதை .    

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனக்கலவரங்களாக இருக்கட்டும்.. இனப்படுகொலையாக இருக்கட்டும் எதற்கும் பிரித்தானிய அரச குடும்பம் வருத்தமோ.. கவலையோ தெரிவித்தது கிடையாது. மாறாக சிங்களப் பேரினவாத இனப்படுகொலையாளர்களை பக்கிங்காம் அரண்மனைக்கு அழைத்து விருந்து கொடுத்தது தான் நடந்தது. அது மகிந்த ராஜபக்ச உள்ளடங்க. 

ராணியின் மரணம் சராசரி மனிதர் என்ற வகையில் வருத்தமளிக்கும் விடயமும் கவலைக்குரியதும் ஆகும். ஆனால்.. ஈழத்தமிழர் விடயத்தில் ராணி உட்பட அரச குடும்பம் அடிப்படை மனிதாபிமானமற்றுச் செயற்பட்டது தான் யதார்த்தமாகும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் உபதலைவர் தான் ராணியின் இறுதி சடங்குக்கு செல்கிறார்.
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

இந்த சூழலில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

1. ரஷ்யா

2. பெலாரஸ்

3. ஆப்கானிஸ்தான்

4. மியான்மர்

5. சிரியா

6. வெனிசுலா

ஏதோ இந்த நாடுகள் ஐயோ தங்களை கூப்பிடேல்லை எண்டு அழுத மாதிரி பில்டப் குடுக்கினம்..... 

கிழவி போற வயசில நல்ல  சாவாய்  போய் சேர்ந்திட்டுது....அதுக்கு றோட்டு றோட்டாய் அழுது வடிக்கிறாங்கள். உப்பிடித்தானே வட கொரியன் சனமும் அழுததுகள். அதுக்கு மேற்குலகின்ர நக்கல் கொஞ்ச நஞ்சமே?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

ஏதோ இந்த நாடுகள் ஐயோ தங்களை கூப்பிடேல்லை எண்டு அழுத மாதிரி பில்டப் குடுக்கினம்..... 

கிழவி போற வயசில நல்ல  சாவாய்  போய் சேர்ந்திட்டுது....அதுக்கு றோட்டு றோட்டாய் அழுது வடிக்கிறாங்கள். உப்பிடித்தானே வட கொரியன் சனமும் அழுததுகள். அதுக்கு மேற்குலகின்ர நக்கல் கொஞ்ச நஞ்சமே?

அதுக்கு வட கொரியன் இங்கிலீசா கதைக்கிறவன்...இல்லயே...😀

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சனாதிபதியும்...போகமுந்தி புதுக்கதை ஒன்றையும் சொல்லிப்போட்.டு ..(தாய் தகப்பன் முடிசூட்டு விழாவிற்கு போனவையாம் ..1954 லை நம்புங்கோ) பெரிய ஒரு துணி விரிச்சு பிச்சை எடுக்கப் போட்டார்....அங்கை நிக்கிற  கண்ட நிண்ட ஆக்களிடம் கை கொடுத்து நான்தான்..இலங்கை சனாதிபதி...நீங்கள் எங்கடை நாட்டுக்கு வாருங்கோ ..நல்ல சாப்பாடு இருக்கு....என்பார்...உண்மையாத்தான் கேட்கிறன் இவரையும் அவை கூப்பிட்டவையோ...

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

நம்ம சனாதிபதியும்...போகமுந்தி புதுக்கதை ஒன்றையும் சொல்லிப்போட்.டு ..(தாய் தகப்பன் முடிசூட்டு விழாவிற்கு போனவையாம் ..1954 லை நம்புங்கோ) பெரிய ஒரு துணி விரிச்சு பிச்சை எடுக்கப் போட்டார்....அங்கை நிக்கிற  கண்ட நிண்ட ஆக்களிடம் கை கொடுத்து நான்தான்..இலங்கை சனாதிபதி...நீங்கள் எங்கடை நாட்டுக்கு வாருங்கோ ..நல்ல சாப்பாடு இருக்கு....என்பார்...உண்மையாத்தான் கேட்கிறன் இவரையும் அவை கூப்பிட்டவையோ...

துணி விரிக்காத ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே. 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.