Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

LTTE மற்றும் JVPயினரே நாட்டை அழித்தனர்- மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

LTTE மற்றும் JVPயினரே நாட்டை அழித்தனர்- மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு

LTTE மற்றும் JVPயினரே நாட்டை அழித்தனர்- மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு

சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு காரணம் அதன்பின் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரர்  தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்த வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரஹத் மகிந்த தேரர் காலமானதன் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆட்சியாளர்கள் ஆடம்பர சுகங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் அவர்களை நிராகரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசடி செய்பவர்களை பாதுகாக்க அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதை விடுத்து மக்களை உயர்த்தி பாதுகாப்பது நாட்டின் பாதுகாவலர் என்ற வகையில் ஜனாதிபதியின் கடமையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1302750

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் திருந்துவதுக்கு சான்சே இல்லை ltte ஏன் உருவானது என்பதை தெரிந்தாலும் தெரியாதது போல் இவ்வாறான அறிக்கைகள் விடுவதில் சிங்களத்தை வெல்ல முடியாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் நாட்டை பிரிச்சு விடு....உனக்கும் பிரச்சனை இல்லை.தமிழர்களுக்கும் பிரச்சனை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கு இடையில் சில பக்கங்கள் நினைவில் வராது ஆனால் இன்னும் இருக்கு. வரும்வரை இருக்கு. வயிறு காலியாக அந்த பக்கங்களும் வரும் 

  • கருத்துக்கள உறவுகள்

கண்டு பிடிச்சிட்டார்....ஆர்க்கிமிடீசு.... இதைச் சொல்லேக்கை  ...உடுப்போடைதான் நின்றவரோ..😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.