Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

By T. SARANYA

03 OCT, 2022 | 02:40 PM
image

வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 221-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்த போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

இதனிடையே, போரில் கைப்பற்றிய உக்ரேனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த பகுதி ஒட்டுமொத்த உக்ரேனின் 15 சதவிகிதம் ஆகும். 

சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரேன் - ரஷ்யா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், வன்முறை சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இத்தாலியின் ரோம் நகரில் புனித பீட்டர் சதுர்க்கத்தில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கேட்டுக்கொள்கிறேன். 

அணு ஆயுத யுத்த ஆபத்தை அபத்தமானது என அவர் கூறினார். தீவிர அமைதி ஒப்பந்தத்திற்கு திறந்த நிலையில் உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி முன் வர வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அணு ஆயுத யுத்தத்தை ரஸ்யா மீது யார் திணிக்கிறார்கள் என்பதற்கு பல சான்றுகள் இருந்தாலும்  ரஸ்யா/ஐரோப்பிய வாயு குழாயை தகர்த்து   ஏற்கனவே $ 45 பில்லியனை ஐரோப்பாவில் இருந்து கறந்தவர்கள் யாரேன ஆராய போப்பால் முடியாதா?

 

  • கருத்துக்கள உறவுகள்

சாகிறது வெள்ளைத்தோல் கிறீஸ்தவர்கள் என்பதால் போப்பிற்கு அதீத அக்கறை போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

போப்புக்கு இது தேவையில்லாத வேலை. நாலு சாத்துச் சாத்தினால் புட்டின் மஹாத்தையா சதாம் , கடாபி போல கோவணத்தோடு சரணடைவார்!!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

சாகிறது வெள்ளைத்தோல் கிறீஸ்தவர்கள் என்பதால் போப்பிற்கு அதீத அக்கறை போலுள்ளது.

 

24 minutes ago, வாலி said:

போப்புக்கு இது தேவையில்லாத வேலை. நாலு சாத்துச் சாத்தினால் புட்டின் மஹாத்தையா சதாம் , கடாபி போல கோவணத்தோடு சரணடைவார்!!

போப்  உலக கத்தோலிக்க மத தலைவராக  தேர்ந்து எடுக்க படடவர்  . அமைதியை   நிலை நாடட யுத்தத்தை நிறுத்த சொல்லத்தான் முடியும் . துவக்கை கொடுத்து "இன்னும் அடியடா" என்ற சொல்லவா  முடியும். ஒரு மத தலைவரை உலக கத்தோலிக்க தலைவரை இவ்வாறு   அவதூறாக சொல்வது அபத்தம்.. உலக மக்களின்  உயிரிழப்பு  வரவேற்க தக்கதா ?  நாட்டில் பசி யாலும் பஞ்சத்தாலும் அகதிகளாக   அலைவதையும் உலக பொருளாதாரமே  சீர் குலைவதையும் பார்த்துக் கொண்டு இருக்கமுடியுமா ? கருப்புத்தோலுக்கு வந்தால் ரத்தம் வெள்ளைத்   தோலுக்கு வந்தால் தக்காளிச்சட்னியா ? போரின் வடுக்களையும்,ரணங்களையு ம்  சோகங்களையும் கண்ட நீங்கள்  
இப்படிப்பேசலாமா? "நாலு சாத்து சாத்த  நீங்கள் அழைத்தால் போவீர்களா "ஒவ்வொருப்போர் வீரனுக்கும் குடும்பம் ,பாசம் , பற்று  .உணர்வு   உண்டு . ஒரு சமாதான விரும்பி யுத்தத்தை நிறுத்த தான் சொல்ல  முடியும்.  உண்மை நேர்மை நீதி நியாயம் போதிக்கும் ஒரு மத தலைவராக பாருங்கள் . வெள்ளைத்தோல் என்று வேடிக்கை  பேச , நிந்திக்க  வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி, போப்பை யாரும் நிந்திக்கவில்லை. இதைவிட மிக மோசமாக ஈராக், லிபியா, சிரியா ஏன் ஸ்ரீலங்கா போன்றநாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது இவர் எங்கிருந்தார். அப்போது அமெரிக்காவையோ நேட்டோ நாடுகளையோ போரை நிறுத்தும்படி சொல்லவில்லையே?? தனக்கு தனக்கு என்று வந்தால்தான் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2022 at 17:19, வாலி said:

போப்புக்கு இது தேவையில்லாத வேலை. நாலு சாத்துச் சாத்தினால் புட்டின் மஹாத்தையா சதாம் , கடாபி போல கோவணத்தோடு சரணடைவார்!!

இரண்டு உலக யுத்தங்களை தனித்து நின்று சமாளித்த நாடு. இரண்டாம் உலகப் போரில் ரஷ்சியா ஜேர்மனியின் கிழக்கை கைப்பற்றிய பின் தான் அமெரிக்க தலைமை பன்னிப்படைகள் சாரி.. நேசப்படைகள் ஜேர்மனியின் மேற்கை அடைந்தன.

ஈராக்கும் ரஷ்சியாவும் ஒன்றென்று வாழ்பவர்களை நினைச்சால்..??! அமெரிக்கனே நேரடியாக மோத தயங்கும் இந்த வேளையில் கூட.. எம்மவர்கள் வாயால் நல்லா சாத்துவார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.