Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா. வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே இலங்கை ஏனைய நாடுகளின் ஆதரவை இழந்துள்ளது – ஜி.எல்.பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு!

ஐ.நா. வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே இலங்கை ஏனைய நாடுகளின் ஆதரவை இழந்துள்ளது – ஜி.எல்.பீரிஸ்

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் கணிசமான அந்நிய செலாவணியில் பங்களிக்கும் நேரத்தில், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் அனுப்பும் சூழலில் இலங்கைக்கு ஆதரவை காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பது பொதுவான மரபு எனவும் எனினும் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள்கூட வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஏன் நடக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றும் ஆணித்தரமான வாக்குறுதிகளை நாம் இலகுவாக எடுத்துக்கொண்டு அவற்றை மீறுவதே முக்கிய காரணம் என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1303521

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Best of arasiyalla ithellam-satharanam-appa-u - Free Watch Download -  Todaypk

வாசகர் கேள்வி: கடந்த பல  வருடங்களாக... ஐ,நா.வுக்கு வாக்குறுதி வழங்கியது யார்? 😂
பீரிஸ் பதில்: அதுகும் நான் தான். 🤣

எங்களைப் பார்க்க... கேனைப் பயலுகள் மாதிரி இருக்கா...  😎 😅

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதில்லை  என்று தெரிந்தும் வாக்குறுதிகளை வழங்கி பல வெளிநாடுகளுக்கு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக பெரும்பாலும் சுற்றிவந்தவர் இவர். இவருக்கு ஐ. நா. வின்  செயற்பாடு எப்படியிருக்குமென்பது நன்றாக தெரிந்தும் கம்பு  சுற்றி வித்தை காட்டியவர். இப்போ தான் ஓரங்கட்டப்பட்ட கடுப்பில் புதுசா கண்டுபிடித்ததுபோல் பேசுறார். நான் போயிருந்தால் வென்றுவந்திருப்பேன் என்று சொல்லாத வரை பறவாயில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

 இப்போ தான் ஓரங்கட்டப்பட்ட கடுப்பில் புதுசா கண்டுபிடித்ததுபோல் பேசுறார். நான் போயிருந்தால் வென்றுவந்திருப்பேன் என்று சொல்லாத வரை பறவாயில்லை!

பீரிஸ் வீட்டு  வாசல்.... இப்பவும் திறந்துதான் இருக்கு.
வா... என்று ஒரு சொல்லு சொன்னால் போதும், ஆள் பிச்சுக் கொண்டு போயிடுவார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காகத்தான் இந்தச் சவுண்டு விட்டு காத்திருக்கிறார்.

இந்தபதவிக்காக எத்தனை தடவைகள் கட்சி மாறி தாவியிருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஐ.நா. வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே

அப்பிடி நீங்கள் கடைப்பிடிச்சிட்டாலும்......

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பீரிஸ் வீட்டு  வாசல்.... இப்பவும் திறந்துதான் இருக்கு.
வா... என்று ஒரு சொல்லு சொன்னால் போதும், ஆள் பிச்சுக் கொண்டு போயிடுவார். 🤣

 

போனவுடன் பைலை  தூக்கிக்கொண்டடு ஐநாவுக்கு  வந்திடுவார்

ஆனால்  இப்ப பிச்சை கேட்டு??

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

ஆணித்தரமான வாக்குறுதிகளை நாம் இலகுவாக எடுத்துக்கொண்டு அவற்றை மீறுவதே முக்கிய காரணம் என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பதவியிழந்த பீரிஷின் இன்றைய கண்டுபிடிப்பு இது! பதவி கிடைத்துவிட்டால்; அடுத்த கணமே வரிஞ்சு கட்டிக்கொண்டு ஐ . நா. வை சாடி, வரிஞ்சு கட்டிக்கொண்டு பாடம் நடத்த கிளம்பிவிடுவார்.  விரக்தியில் அவர் வாயில் வந்த தத்துவம் இது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

வாசகர் கேள்வி: கடந்த பல  வருடங்களாக... ஐ,நா.வுக்கு வாக்குறுதி வழங்கியது யார்? 😂
பீரிஸ் பதில்: அதுகும் நான் தான். 🤣

எங்களைப் பார்க்க... கேனைப் பயலுகள் மாதிரி இருக்கா...  😎

I do not need to talk about that' - Sampanthan | Tamil Guardian

 

எங்க 'தல' யின் நாடாளுமன்றத் தூக்கங்களையும் உரைகளையும் அவர் சிறிலங்கா தேசியக்கொடியை ஆட்டுவதைப் பார்க்கும்போது அப்படித்..தா...ன்  தோணுதாமே. 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறவன் சரியாய் இருந்தால்; திருத்துறவர் சரியாய் திருத்துவார். சிங்கள மக்கள் விரும்பாத, அவர்களை கோபப்படுத்துகிற தீர்வு எங்களுக்கு வேண்டாம் என்கிறார் பாதிக்கப்பட்ட எங்களுக்கு விடுதலை தேடித்தருவார் என்று நம்பி மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பிவைக்கப்பட்டவர். சிங்கள மக்களோடு வாழ்வதே மகிழ்ச்சி என்று புழகாங்கிதம் அடைகிறார் வந்து ஒட்டிக்கொண்ட தேரோட்டி. அதையே சிங்களவன் துணிந்து சொல்கிறான் " தமிழருக்குசம உரிமை வழங்கினால், இனமுரண்பாடு ஏற்பட்டு நாட்டில் கலகம் வெடிக்குமாம்," எங்கட கோயில்களை இடித்து, விகாரைகளை கட்டி பவுத்த சின்னங்களை உருவாக்குவதாற்த்தானாம் தமிழரும் சிங்களவரும் இணைந்து ஒற்றுமையாக வாழ முடியுமாம் என்று நேற்று ஒன்று சொல்லுது. இதுகளின்ர அறிவை என்னவென்று புகழ்வது? எங்கள் சொத்தை பறித்து, அதில விகாரை கட்டி தங்கள் சின்னங்களை உருவாக்குவதால் ஏற்படும் அபகரிப்பை, ஒற்றுமை என்று வர்ணிப்பவர் தனது வீட்டின் ஒருபகுதியை தனது அயல் வீட்டாருக்கு அல்லது போரினால் வீடிழந்தவருக்கு கொடுக்கட்டும் பாப்போம். அடுத்தவரின் உரிமைகளை பறிப்பவர் எப்படி இணக்கமாய் இருப்பார்? இப்படி அறிவு குறைஞ்சதுகளை பயன்படுத்தி, உங்களின் நிலங்களில் சிங்களவரை குடியேற்றுங்கள், கலந்து கலியாணம் செய்யுங்கள், உங்கள் தொழில் வாய்ப்புகளில் சிங்களவரை இணையுங்கள், இன முரண்பாடு நாளடைவில் இல்லாமற் போய்விடும், புத்திசாலிபிள்ளைகள் பிறப்பார்கள், நாங்கள் ஒரு இனமாக வாழலாம் என உபதேசித்தவுடன் அதுதான் சரி தாம்மேதைகள் போல் அறிக்கை வீரராக கிளம்பிவிடுவார்கள் சோம்பேறிகள். நல்லிணக்கத்தை விரும்புபவன் முதலில் தன் பக்கத்தில் இருந்து தொடங்கட்டும்! எமது நிலங்களை பறிக்காமல் தனது நிலங்களுக்குள் நம்மை அனுமதிப்பானா? ஏன் நம்மை கலவரங்களை ஏற்படுத்தி அழித்தான்? இதுதான் ஒற்றுமையின் அடையாளமா?  ஒற்றுமை, இணக்கம் பற்றி பேசுபவர்கள் முதலில் தங்களின் சொத்துக்களில் தம் இனத்தையே வாழ வைக்கட்டும்.               

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.