Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் போராளிகளின் விபரம் திடீரென சேகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளின் விபரம் திடீரென சேகரிப்பு

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்பிலான அடிப்படை தகவல்களை சேகரித்தல் என்ற தகவலுக்கு அமைய நீதி அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. 
 

https://www.tamilmirror.lk/வன்னி/முன்னாள்-போராளிகளின்-விபரம்-திடீரென-சேகரிப்பு/72-306468

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

சொல்லுறது  ஒன்று, செய்யிறது வேறொன்று. முதலில் இப்போ விடுதலையானவர்களின் விபரம் அவர்களிடம் உள்ளது விடுவிக்கும்போதே செய்யிற உதவியையும் சேர்த்து செய்யலாமே? என்னவெல்லாம் சோடிக்கிறானுகள்!

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, satan said:

சொல்லுறது  ஒன்று, செய்யிறது வேறொன்று. முதலில் இப்போ விடுதலையானவர்களின் விபரம் அவர்களிடம் உள்ளது விடுவிக்கும்போதே செய்யிற உதவியையும் சேர்த்து செய்யலாமே? என்னவெல்லாம் சோடிக்கிறானுகள்!

நான் நினைக்கின்றேன். இது மாவீரர் வாரம் வரவிருக்கின்ற சூழலில் அழைத்து அச்சுறுத்தல்களை வழங்கும் நோக்கமாகவும் இருக்கலாம். மக்களைத் தடுக்க முடியாததொரு நிலைதோன்றியுள்ளது. ஆகையால் இவர்களை வைத்து வேறேதாவது சதி முயற்சியாகவும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nochchi said:

நான் நினைக்கின்றேன். இது மாவீரர் வாரம் வரவிருக்கின்ற சூழலில் அழைத்து அச்சுறுத்தல்களை வழங்கும் நோக்கமாகவும் இருக்கலாம். மக்களைத் தடுக்க முடியாததொரு நிலைதோன்றியுள்ளது. ஆகையால் இவர்களை வைத்து வேறேதாவது சதி முயற்சியாகவும் இருக்கலாம். 

மாவீரர் நாள் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என மிரட்டப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலம் சிறையில் வைத்து அவர்களது இளமையை கொல்லும்போது வராத கரிசனை, அவர்களை விடுவிக்க அக்கப்பாடு பட்டு விடுவித்தபிற்பாடு வராத கவலை, ஏது இப்போ அவசரமாய் வருது? வெளிநாட்டு குழுக்கள் எல்லாம் மாவீரர் தினத்தை கண்காணிக்கத்தான்   வந்திருக்கினமோ? முன்னாள் போராளிகளை அந்தநாளில் உதவி என்று அழைத்து எங்கை கொண்டுபோய் மறைச்சு வைக்கப்போறானுகளோ?

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை போட்டு அலைக்கழிக்கிறார்கள்.
வருடக் கணக்கில் சிறைவாசம், பிறகு புனர் வாழ்வு என்று வைத்திருந்தார்கள்.
விடுதலை செய்த பின்பும் நிம்மதி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

போராளிகளை போட்டு அலைக்கழிக்கிறார்கள்.
வருடக் கணக்கில் சிறைவாசம், பிறகு புனர் வாழ்வு என்று வைத்திருந்தார்கள்.
விடுதலை செய்த பின்பும் நிம்மதி இல்லை.

இனிமேல் நம் இளைய தலைமுறை விடுதலை, போராட்டம் என்று நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது, தானுண்டு தன்பாடுண்டு என்று கூட இருக்கக்கூடாது, மாறாக கலாச்சார சீரழிவை உருவாக்க வேண்டும் என்பதே இந்த அலைக்கழிப்பு, கெடுபிடி, நீண்ட மனிதாபிமானமற்ற சிறை சொல்லும் செய்தியாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளின் தகவல்களை திரட்டுவதானது சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும் - அருட்தந்தை சத்திவேல்

By VISHNU

30 OCT, 2022 | 07:01 PM
image

K.B.சதீஸ் 

முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் ஞாயிற்றுக்கிழமை (30) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

முன்னாள் போராளிகளின் தகவல்களை நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் திரட்டுவதாக செய்திகள் வந்துள்ளன.

என்ன நோக்கத்திற்காக இத் தகவல்கள் திரட்டப்படுகின்றன? என்பது தொடர்பில் முன்னாள் போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் அச்ச உணர்விலேயே உள்ளனர். 

இது தொடர்பில் நீதி அமைச்சு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் அத்தோடு வடகிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி மக்களுக்கு தெளிவூட்டல் பெற்றுக் கொடுப்பதோடு பாதிப்பு ஏற்படும் எனில் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டான செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டும்.

அண்மையில் கொழும்பில் வெள்ளத்தை போன்ற தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் வீடுகளில் தங்கி இருப்போர் தொடர்பாக பொலிசார் தகவல் திரட்டுவதாகவும் அவ்வாறான தகவல் படிவங்களை எவரும் நிரப்பி கொடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்  மனோ கணேசன் பகிரங்கமாக கூறியதோடு இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடனும், ஜனாதிபதியுடன் வினவுவதாக கூறியிருந்தார்.

இது இவ்வாறு இருக்க தற்போது தமிழர்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தமிழர் பகுதியில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுவதாக கூறப்படுகின்றது. 

முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும். இது உள ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு சுயமாகவே முன்னாள் போராளிகள் தமது ஜனநாயக செயற்பாட்டை மட்டுப்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.  இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

அண்மையில் அரசு கொண்டுவர முனைந்த புனர்வாழ்வு தொடர்பான திருத்தச்சட்டம் சமூகத்தில் எழுந்த சலசலப்பும்   மக்களின் எதிர்ப்பும் சட்ட சிக்கலும் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டது. அச்சட்ட அமுலாக்கத்தை வேறு வகையில் நிறைவேற்றுவதற்காக முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா?

தெற்கின் போராட்டக் குழுவினர் தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களை முன்வைத்து அரசிற்கு எதிரான வீதி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் சகாக்கள் மூன்று பேரைவிடுவிக்குமாறும், பயங்கரவாத சட்டத்தை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பயங்கரவாத சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்க முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா?

இத்தகைய தகவல் திரட்டும் ஏற்பாடு முன்னாள் போராளிகளின் ஜனநாயக ரீதியான ரீதியிலான  மாற்று அரசியல் செயற்பாட்டையும்  அது தொடர்பான சிந்தனையையும் தடுக்கும். இது அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் சுதந்திர நடமாட்டத்தை கூட பாதிக்கும்.

அது மாத்திரமல்ல தற்போது மறைமுகமாக படையினரும் புலனாய்வு பிரிவினரும் இயங்குகின்ற நிலையில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டும் செயற்பாடு நேரடியாகவே அரச படைகள் தமிழர்களை கண்காணிப்பில்  வைத்திருக்கவும், தமிழர்கள் வாழும் கிராமங்களை திறந்த வெளி புனர் வாழ்வு கிராமங்களாகவும் பேரினவாதம் முயற்சிக்கலாம். இது உடனே தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.

https://www.virakesari.lk/article/138701

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகில் இருந்து வரும் பிரதிந்திகளிடம்  இந்த அராஜகத்தை தமிழ் பிரதிந்திகள் முன்வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவர்களோடு விருந்துண்பதிலும், படம் பிடிப்பதிலும் அவர்கள் படு பிஷி, அவர்களை குழப்பாதீர்கள் ....!

6 hours ago, ஏராளன் said:

முன்னாள் போராளிகளின் தகவல்களை நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் திரட்டுவதாக செய்திகள் வந்துள்ளன.

மீண்டும் அவர்கள் தம்மை பாதுகாக்க ஆயுதம் தூக்க உந்துகிறார்களா? நான் சொல்லேலை, உலகுக்கு தப்ப விடுதலை ஆனால் மூக்கணாங்கயிறு இவர்கள் கையில். ஒரு தமிழ் அரசியல்வாதியாவது இதுபற்றி கேள்வி கேட்டார்களா? நாம் தான் விடுவித்தோம் என்று எத்தனைபேர் உரிமை கொண்டாடினார்கள், அதோடு படுத்துவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.