Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக குழப்பம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக குழப்பம் !

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று மாலை சிரமதானம் செய்ய முற்பட்ட போது அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மாவீரர்களை நினைவு கூரும் கார்த்திகை மாதம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குறித்த வீதியை சிரமதானம் செய்ய முற்பட்டுள்ளனர்.

இதற்கு இடையூறு ஏற்படுத்திய இராணுவத்தினர் அந்த வீதியை சிரமதானம் செய்து பௌத்த கொடியை நாட்டுவதற்கு முற்பட்டனர்

இரு தரப்பினருக்கும் இடையில் குழப்பமான சூழல் ஏற்பட்தை தொடர்ந்து, இராணுவத்தினர் அங்கு இருந்தவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தினர்.

எனினும் சில மணி நேரத்தின் பின்னர் இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிரமதான பணியை முன்னெடுத்தனர்

அத்துடன் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி இராணுவ பொறுப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

https://athavannews.com/2022/1308308

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மண்ணின் மைந்தர்களை... நினைவு கூரக் கூட, ஒவ்வொரு வருடமும்
இடைஞ்சல்களை எதிர் கொண்டு, பல  அச்சுறுத்தலுக்கு மத்தியில்  போராட வேண்டி உள்ளது.

ஆனால்.. அயல் நாட்டுக்காரன், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கு 
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். 
அதுக்கு... எங்கடை சனமும், 32  பல்லையும் காட்டிக் கொண்டு போகிறார்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

எங்கள் மண்ணின் மைந்தர்களை... நினைவு கூரக் கூட, ஒவ்வொரு வருடமும்
இடைஞ்சல்களை எதிர் கொண்டு, பல  அச்சுறுத்தலுக்கு மத்தியில்  போராட வேண்டி உள்ளது.

ஆனால்.. அயல் நாட்டுக்காரன், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கு 
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். 
அதுக்கு... எங்கடை சனமும், 32  பல்லையும் காட்டிக் கொண்டு போகிறார்கள். 😡

இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆக்காமல் ஓயமாட்டாங்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

எங்கள் மண்ணின் மைந்தர்களை... நினைவு கூரக் கூட, ஒவ்வொரு வருடமும்
இடைஞ்சல்களை எதிர் கொண்டு, பல  அச்சுறுத்தலுக்கு மத்தியில்  போராட வேண்டி உள்ளது.

ஆனால்.. அயல் நாட்டுக்காரன், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கு 
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். 
அதுக்கு... எங்கடை சனமும், 32  பல்லையும் காட்டிக் கொண்டு போகிறார்கள். 😡

என்னசெய்வது அரைஞாண்கயிறுகூட இல்லைப்போலும். 

1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆக்காமல் ஓயமாட்டாங்கள் போல.


ஐயா இந்தியாவின் மாநிலமாகிப் பல ஆண்டுகளாகிவிட்டது.எங்கட ரணில் - சம் சும் கோவினர் சும்மா இன்னும் ரீல்விடுகினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆக்காமல் ஓயமாட்டாங்கள் போல.

நாங்கள் ஒவ்வொரு விடயத்திற்கும்… சிங்களவன், முஸ்லிம், இந்தியன்,
கோடலிக் காம்பு ஒட்டுக் குழுக்கள், ஆவா குழு, வாள்வெட்டு குழு, போதை வஸ்து குழு என்று
எத்தனை எதிரிகளுடன் போராட வேண்டி உள்ளது. 

எங்களின் பொன்னான நேரமும், உழைப்பும்…
இந்த தறுதலைகளுடன் மல்லுக் கட்டுவதிலேயே வீணாக போய் விடுவதால்…
ஆக்க பூர்வமான முன்னேற்றத்தை… எம் இனம் அடைய தவறி விடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் ஒவ்வொரு விடயத்திற்கும்… சிங்களவன், முஸ்லிம், இந்தியன்,
கோடலிக் காம்பு ஒட்டுக் குழுக்கள், ஆவா குழு, வாள்வெட்டு குழு, போதை வஸ்து குழு என்று
எத்தனை எதிரிகளுடன் போராட வேண்டி உள்ளது. 

சிறி சிங்களவனுக்கு இதில் வேலையே இல்லையே.

தொடக்கி வைத்திட்டு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

குரங்கு கூட்டத்துக்குள் மிளகாயயும் பொல்லுகளையும் வைத்த மாதிரி இருக்கு.

8 minutes ago, nochchi said:

ஐயா இந்தியாவின் மாநிலமாகிப் பல ஆண்டுகளாகிவிட்டது.எங்கட ரணில் - சம் சும் கோவினர் சும்மா இன்னும் ரீல்விடுகினம்

மக்கள் தான் மறதி பிடித்தவர்களாச்சே.

எப்படி வேணுமானாலும் ஏமாற்றலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

எங்கள் மண்ணின் மைந்தர்களை... நினைவு கூரக் கூட, ஒவ்வொரு வருடமும்
இடைஞ்சல்களை எதிர் கொண்டு, பல  அச்சுறுத்தலுக்கு மத்தியில்  போராட வேண்டி உள்ளது.

ஆனால்.. அயல் நாட்டுக்காரன், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கு 
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். 
அதுக்கு... எங்கடை சனமும், 32  பல்லையும் காட்டிக் கொண்டு போகிறார்கள். 

 

இதையும் உவங்கள் சும்மா இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்ல ஒரு கூட்டம் நம்முள் இருக்கிறது 😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

இதையும் உவங்கள் சும்மா இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்ல ஒரு கூட்டம் நம்முள் இருக்கிறது 😡

விசுகர்…. உலகில் உள்ள மற்ற இனம் எல்லாம், தனது இனத்துக்கு ஆபத்து வரும் போது…
மொத்தமாக ஓரணியில் திரண்டு… அந்த ஆபத்தை எதிர் கொண்டு, இனத்தை காப்பாற்றுவார்கள்.
தமிழ் இனத்தில் மட்டும்… அந்த நேரம் எதிரியுடன் சேர்ந்து,
தனது இனத்துக்கு குடைச்சல் கொடுப்பார்கள்.
இது… ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இதே நிலைதான். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

மக்கள் தான் மறதி பிடித்தவர்களாச்சே.

எப்படி வேணுமானாலும் ஏமாற்றலாம்.

நல்ல தலைவன் இல்லாததால் மக்கள் தறிகெட்டு இழுப்பவன் பக்கமெல்லாம் இழுப்படுகிறார்கள். இருப்பதோ எல்லாம் ஓநாய்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.