Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் காணிகளை அடாத்தாக பிடிப்பதை பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது – வேலன் சுவாமிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் காணிகளை அடாத்தாக பிடிப்பதை பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது – வேலன் சுவாமிகள்

vela-300x146.pngசிங்கள அரச பேரினவாதம்  நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வலி. வடக்கு காணி அபகரிப்புக்கு எதிராக இன்று (02) போராட்டம் இடம்பெற்றது. இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலே எங்களின் காணிகள், நிலங்கள் அபகரிக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் கடந்த 74 வருடங்களாக இடம்பெற்றுவருகின்றன. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

குறிப்பாக இன்று வலி. வடக்கிலே 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட காணி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கின்றன. எங்களுடைய மக்கள் தாங்கள் வாழ்வதற்கு இடம் இல்லாமல் துன்பப்பட்டுக்கொண்டு விவசாயம் செய்வதற்கு, பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, கடல் வளங்களை பெற்றுக்கொள்வதற்கு வழி இல்லாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய எங்களது பூமியிலே வந்து சிங்கள, பௌத்த, அரச பேரினவாத அதாவது அரச இயந்திரம் இங்கு அடாவடியாக நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.

இளையோர் சமூகம் பொங்கி எழுந்தால்  மாணவர் எழுச்சி மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும். இதற்கான ஒரு ஆரம்பம் தான் இன்று நடைபெற்றிருக்கிறது. ஆகவே அனைத்து காணி அபகரிப்புக்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் இது தொடருமாக இருந்தால் எங்களுடைய மாணவர்கள் பேரெழுச்சியாக வட, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இராணுவக், கடற்படை, விமான முகாம்கள் என்று அனைத்தும் முடக்கப்பட்டு எங்களுக்கான போராட்ட வடிவத்தை நாங்களே தீர்மானிக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். ஆகவே இந்த இடத்தில் உள்ள காணிகள் அனைத்தும் எங்களுக்கு வேண்டும். இதற்கு  எங்கள் ஆதரவையும் வழங்கி நிற்கின்றோம் .

எனவே இந்த சந்தர்ப்பத்தில் அனைவரையும் எங்களுடன் இணையுமாறும், தொடர்ந்து போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு உங்களை வேண்டி நிற்கின்றோம். இந்தியா உட்பட அனைத்து சர்வதேசமும் இதிலே தலையிட்டு உடனடியாக காணி அபகரிப்புக்களை, வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தை கூறுபோடுகின்ற முயற்சியை நிறுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தயக்கத்திலே சுயநிர்ணய அடிப்படையில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பினை நடாத்தப்படுவதன் ஊடாக அரசியல் தலைவிதியை நாங்களே தீர்மானிக்கிறோம். இது தான் எங்களுடைய பிரதானமான வேண்டுகோளாக இருக்கின்றது என்றார்.

தமிழர்களின் காணிகளை அடாத்தாக பிடிப்பதை பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது – வேலன் சுவாமிகள் – குறியீடு (kuriyeedu.com)

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரவு இந்தியத் தூதரகத்தில் இருந்து வந்துவிட்டது. 

வேறு என்ன செய்வதாக உத்தேசம் ? இந்தியாவிடம் முறையிடுவீர்களா? 

😀

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையம் ஆட்டும்வேலை.  ஒருபுறம் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள பவுத்த துறவிகளை பயிற்றுவிக்கவும், பவுத்த உறவுகளை மேம்படுத்தவும், பௌத்த மதத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களின் அடிப்படையில் கூட்டாக அடையாளப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டங்களை துரிதமாக அமுலாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கவும் மில்லியன் கணக்கில் உதவி, ஊக்கப்படுத்திக்கொண்டு இங்கால எதிர்ப்பு போராட்டங்களையும் முடுக்கி விட்டு குளிர் காய தயாராய் இருக்கு. இந்த லட்ஷணத்தில சைவருக்கு இந்தியா உகவும் என்று சச்சியரும், வேலன் சுவாமியும், தமிழரை இந்தியா கைவிடாது என்று நமது தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோரும் காத்திருகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உத்தரவு இந்தியத் தூதரகத்தில் இருந்து வந்துவிட்டது. 

வேறு என்ன செய்வதாக உத்தேசம் ? இந்தியாவிடம் முறையிடுவீர்களா? 

😀

13 ஐ அமுல் படுத்த தான் இந்த பாடு.

  • கருத்துக்கள உறவுகள்+

பொறுக்க முடியாது என்று அண்ணன் அறிவித்துவிட்டார். 
ஆகையால் எதிர்வரும் குறித்த திகதியில் எல்லோர் முன்னிலையிலும் தீக்குளித்து அண்ணன் தமிழினத்தின் விடியலிற்காய் உயிர்துறப்பார் என்பதைப் பெருமையுடன் அறிவித்துக்கொள்கிறோம். 🤣🤣

 

(வடிவேலின் அரசியல் மேடைப்பேச்சு பகிடியின் பாணியில் வாசிக்கவும்)

No photo description available.

Edited by நன்னிச் சோழன்
புதிய படிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

13 ஐ அமுல் படுத்த தான் இந்த பாடு.

மாவீரர் நாள் வருகிறதல்லோ..😀

எல்லோரும் கொஞ்சம் அதிகமாக ஊளையிடுவார்கள. 

😏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.