Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில். வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு!

By T. SARANYA

09 NOV, 2022 | 04:17 PM
image

ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு பிரஜை ஒருவர் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டு இருந்தார். 

இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139560

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு பிரஜை ஒருவர் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டு இருந்தார். 

இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

பேசாமல் அவுஸ்ரேலியாவிலை சொந்தமாய் ஒரு பண்டத்தரிப்பு முருகன் கோயிலை  கட்டி பூசையாக்கியிருக்கலாம். சேதாரம் இருக்காது.

இப்ப கோயில் கட்டுறது/ஆரம்பிக்கிறது எல்லாம் பெரிய வேலையா என்ன? 😎

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லம் கோவில், சர்ச், பள்ளிவாசல்களில்தான் அடிதடி அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பேசாமல் அவுஸ்ரேலியாவிலை சொந்தமாய் ஒரு பண்டத்தரிப்பு முருகன் கோயிலை  கட்டி பூசையாக்கியிருக்கலாம். சேதாரம் இருக்காது.

இப்ப கோயில் கட்டுறது/ஆரம்பிக்கிறது எல்லாம் பெரிய வேலையா என்ன? 😎

 ஊர் பக்கம் வந்து ஒரு கோவில பொறுப்பு எடுங்க பார்ப்பம்🤔

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 ஊர் பக்கம் வந்து ஒரு கோவில பொறுப்பு எடுங்க பார்ப்பம்🤔

அவருக்கென்ன விசரே? 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அவருக்கென்ன விசரே? 😁

வெட்டு விழும் போல😛😛

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இங்க கோவில் நடாத்திறார் எல்லே...😁

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வெட்டு விழும் போல😛😛

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அங்க வந்து அலுவல பார்க்கணும் 😋

Just now, Nathamuni said:

அவர் இங்க கோவில் நடாத்திறார் எல்லே...😁

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 ஊர் பக்கம் வந்து ஒரு கோவில பொறுப்பு எடுங்க பார்ப்பம்🤔

நான் ஊரிலை இருக்கேக்கையே கோயில் சங்கு ஊதுற பிரச்சனையிலை இருட்டடி போட்டவங்கள். அதுவும் இப்ப வெளியிலை இருந்திட்டு கோயில் நிர்வாகத்திலை தலையிட சும்மா விடுவாங்களே? 🤣

16 minutes ago, Nathamuni said:

அவருக்கென்ன விசரே? 😁

அதுதானே எனக்கென்ன விசரே?  🤣
முந்தினய மாதிரி இனி ஓடவும் ஏலாது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 ஊர் பக்கம் வந்து ஒரு கோவில பொறுப்பு எடுங்க பார்ப்பம்🤔

என்ன....? சவால் விட்டு கூப்பிட்டு வெட்டு போடப்போறியள் எண்ணுறியள்!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

என்ன....? சவால் விட்டு கூப்பிட்டு வெட்டு போடப்போறியள் எண்ணுறியள்!

ஐயோ பாவம் அவரு😛

23 hours ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருக்கேக்கையே கோயில் சங்கு ஊதுற பிரச்சனையிலை இருட்டடி போட்டவங்கள். அதுவும் இப்ப வெளியிலை இருந்திட்டு கோயில் நிர்வாகத்திலை தலையிட சும்மா விடுவாங்களே? 🤣

அதுதானே எனக்கென்ன விசரே?  🤣
முந்தினய மாதிரி இனி ஓடவும் ஏலாது :cool:

நானும் துணிச்சலான கட்டை என நெனச்சன் 🤭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 வீதியால் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு - யாழில் சம்பவம்

By DIGITAL DESK 2

11 NOV, 2022 | 10:45 AM
image

குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து வீதியில் சென்ற இளைஞன் மீது தாக்குதலை நடத்திய வன்முறை கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. 

யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டை சந்திக்கு அருகில் நேற்று (நவ.10) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று குடையினுள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து வீதியில்நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை  நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

குழுக்களிடையே வாள் வெட்டு: இருவர் காயம்! | உதயன் | UTHAYAN

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139691

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.