Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். செம்மணியில் நீரில் மூழ்கி இளைஞன் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். செம்மணியில் நீரில் மூழ்கி இளைஞன் பலி

By DIGITAL DESK 5

18 NOV, 2022 | 10:24 AM
image

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனநிலையில் அவரது சடலம் கடற்படையின் உதவியுடன் வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டது.

குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை இவ்வாறு காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து மீன்பிக்கச்சென்ற இளைஞனை காணத நிலையில், அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தினர். இதையடுத்து மக்களால் இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கடற்படையின் உதவியுடன் நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/140411

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற நீர் விபத்துகளில் எமது இளைய உயிர்கள் வீணாக காவுகொள்ளப்படுவது வருத்தத்திற்குரியது.

குளத்தில் மூழ்கி இறந்தவரை மீட்பதற்குக்கூட இலங்கையில் கடற்படை வரவேண்டிய நிலமை. இப்போது தமிழ் பகுதிகளில் சிவில் சமூகத்தின் தேவைகளை கவனிப்பதற்கு இராணுவம் கடற்படை ஆகியவற்றின் பிரசன்னம் அவசியம் என்றாகிவிட்டது.

அவசர நிலையில் பொதுமக்களுக்கு உதவுவுவதற்கென பொலிஸ் படையில் நீரடி பிரிவு ஒன்று இருத்தல் அவசியம். அல்லது அப்படி ஒரு பிரிவு அவர்களிடம் இருந்தும் பொலீசார் வேண்டுமென்றே கடற்படையின் உதவியை நாடுகின்றனரோ என எண்ணத்தோன்றுகிறது.  

விபத்து நடந்த செம்மணி குளம் கடற்படையின் பொறுப்பிலுள்ள கடல் பிரதேசமுமல்ல. முன்பெல்லாம் பொலீசார் உள்ஊர்வாசிகளின் துணையுடன் அல்லது கரையோர மீன்பிடி சமூகத்தினரில் கடலோடிகளை வரவழைத்து இதுபோன்ற மீட்புவேலைகளைச் செய்வதுதான் வழமை.

முக்கியமாக நீச்சல் தெரியாதவர்கள் நீர் நிலைகளுக்கு அண்மையில் மீன்பிடிக்க அல்லது விளையாட செல்லும்போது அல்லது படகுகளில் பயணம் செய்யும்போது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீச்சல் பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியம், ஏனெனில் தன்னைப் பாதுகாப்பதுடன் ஆபத்திலுள்ள ஒருவரை காப்பாற்றவும் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்

ஆரம்பத்தில்...   யாழ். மத்திய கல்லுரி நீச்சல் தடாகம். 

யாழ் மத்திய கல்லூரி நீச்சல் ...

தற்போது. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.  

#############   #############

வடக்கில் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் வல்வெட்டித்துறையில்  திறந்துவைப்பு – Jaffna Journal | News From Jaffna

ஆரம்பத்தில்...   வல்வெட்டித்துறை  நீச்சல் தடாகம்.

குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பல கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல்  தடாகத்தின் இன்றைய நிலை..! - எங்கள் மண் - கருத்துக்களம்

தற்போது. வல்வெட்டித்துறை  நீச்சல் தடாகம்.

இளையவர்களுக்கும்... நீச்சல்  பழகுவதன் முக்கியத்துவத்தை 
பெற்றோரும், ஆசிரியரும் வற்புறுத்த வேண்டும். 
ஒரு முறை நீச்சல் பழகினால்  வாழ்நாளில் மறப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படாது.

யாழில்...  நீச்சல் பயில்வதற்கு,  இரண்டு தடாகம் இருந்தும், 
பராமரிப்பின்றி உள்ளதால், அங்கு யாரும் போகவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்

ஆரம்பத்தில்...   யாழ். மத்திய கல்லுரி நீச்சல் தடாகம். 

யாழ் மத்திய கல்லூரி நீச்சல் ...

தற்போது. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.  

#############   #############

வடக்கில் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் வல்வெட்டித்துறையில்  திறந்துவைப்பு – Jaffna Journal | News From Jaffna

ஆரம்பத்தில்...   வல்வெட்டித்துறை  நீச்சல் தடாகம்.

குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பல கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல்  தடாகத்தின் இன்றைய நிலை..! - எங்கள் மண் - கருத்துக்களம்

தற்போது. வல்வெட்டித்துறை  நீச்சல் தடாகம்.

இளையவர்களுக்கும்... நீச்சல்  பழகுவதன் முக்கியத்துவத்தை 
பெற்றோரும், ஆசிரியரும் வற்புறுத்த வேண்டும். 
ஒரு முறை நீச்சல் பழகினால்  வாழ்நாளில் மறப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படாது.

யாழில்...  நீச்சல் பயில்வதற்கு,  இரண்டு தடாகம் இருந்தும், 
பராமரிப்பின்றி உள்ளதால், அங்கு யாரும் போகவில்லை. 

திட்டமிடலிலுள்ள அடிப்படைக் குறைபாடு. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

திட்டமிடலிலுள்ள அடிப்படைக் குறைபாடு. 

☹️

உண்மை. பல கோடிகளில் கட்டப் பட்டு, நுளம்பு வளர்க்க பயன் படுகின்றது.
பொதுச் சொத்து என்றால்... எப்படியும் கையாளலாம் என்ற ஒரு மனப் பான்மையும் 
எம் மக்களிடம் உள்ளது என நினைக்கின்றேன்.

1) வைத்திய சாலைகளில் அடிக்கடி பழுதாகிப் போகும், மருத்துவ இயந்திரங்கள்.
2) வீதி போட கொண்டு வந்த கல்லை, இரவோடு இரவாக அள்ளிக் கொண்டு போதல். 
என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.