Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனையின்போது சிக்கிக் கொண்ட 124 பேர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனையின்போது சிக்கிக் கொண்ட 124 பேர்!

By T. SARANYA

07 DEC, 2022 | 01:27 PM
image

கொழும்பு கோட்டை  ரயில்  நிலையத்தில் நேற்று (06) காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட  விசேட பயணச்சீட்டு சோதனையின்போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில்  நிலைய ஊழியர்கள் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டதாக  ரயில்வேயின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

இதன்போது  கைது செய்யப்பட்ட 78 பேர் உரிய அபராதத் தொகையை உடனடியாகச்  செலுத்தியுள்ளனர். ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபா எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பயணச்சீட்டு  இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடமிருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 இலட்சத்து 78,610 ரூபா என தெரிவிக்கப்படடள்ளது.

https://www.virakesari.lk/article/142431

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சீட் பிடிக்கும் ஆட்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாதோ?

இரவு கொழும்பில் ஏறி காலையில் திருகோணமலை இறங்கும் புகையிரதம் ஒன்றில் ஏறினேன்.  அன்றுடன் ரயில் பயணம் வெறுக்காத  குறை. ஆசனம் முன்பதிவு செய்தும் அல்லோல கல்லோலப்பட்டேன். 

இரயில் பிளாட்போமில் வந்து நின்றதும் எல்லோரும் சீட் பிடிக்க பாய்ந்தடித்து ஓடியது முன்பு ஊரில் விமானம் குண்டுவீசவரும் போது பதுங்கு குழியினுள் விழுந்தடித்து ஓடுவதை நினைவுபடுத்தியது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வந்து நின்றதும் 

என்ன சார் வந்து நின்றதும் என்கிறீர்கள்?

புகையிரதம் நிற்க முன்பே அத்தனை பேரும் உள்ளே இருப்பார்கள்.

அப்பாவிகள் முதியவர்கள் பெண்கள் தான் புகையிரதம் நின்ற பின்பு ஏறுபவர்கள்.

முன்பதிவு செய்துமா அல்லோல கல்லோலம்?

7 hours ago, ஏராளன் said:

இதன்படி, பயணச்சீட்டு  இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடமிருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 இலட்சத்து 78,610 ரூபா என தெரிவிக்கப்படடள்ளது.

இதிலே இலஞ்சமாக எவ்வளவு தள்ளினார்கள் என்பது கணக்கிலில்லை யுவர் ஆனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சார் வந்து நின்றதும் என்கிறீர்கள்?

புகையிரதம் நிற்க முன்பே அத்தனை பேரும் உள்ளே இருப்பார்கள்.

அப்பாவிகள் முதியவர்கள் பெண்கள் தான் புகையிரதம் நின்ற பின்பு ஏறுபவர்கள்.

முன்பதிவு செய்துமா அல்லோல கல்லோலம்?

 ரயிலோட ஓடி ஏறி சீற் பிடிச்ச ஞாபகம் இருக்கோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 ரயிலோட ஓடி ஏறி சீற் பிடிச்ச ஞாபகம் இருக்கோ? 😁

2017 இல் இலங்கை போனபோது மச்சான் முதலே 3ம் வகுப்பு சீட்டை எடுத்து தந்துவிட்டு கடைக்கு போய் வருகிறேன் என்று போய்விட்டார்.

புகையிரதம் வரும் நேரமாகியும் அவர் வரவில்லை.

நிறைய கூட்டமாக இருந்தது.ஆனபடியால் மறுபக்கம் போய் நின்று நல்ல இருக்கைகள் பிடித்தோம்.

முன்னரெல்லாம் வெள்ளி இரவு போய் ஞாயிறு இரவு கொழும்பு வாறது.அந்த நேரங்களில் முதல் ஏறி இருக்கைகள் பிடிப்போரில் நானும் ஒருவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

2017 இல் இலங்கை போனபோது மச்சான் முதலே 3ம் வகுப்பு சீட்டை எடுத்து தந்துவிட்டு கடைக்கு போய் வருகிறேன் என்று போய்விட்டார்.

புகையிரதம் வரும் நேரமாகியும் அவர் வரவில்லை.

நிறைய கூட்டமாக இருந்தது.ஆனபடியால் மறுபக்கம் போய் நின்று நல்ல இருக்கைகள் பிடித்தோம்.

முன்னரெல்லாம் வெள்ளி இரவு போய் ஞாயிறு இரவு கொழும்பு வாறது.அந்த நேரங்களில் முதல் ஏறி இருக்கைகள் பிடிப்போரில் நானும் ஒருவன்.

இரவு  மெயில் ரயில் எண்டால் நான் சில வேளைகளில் KKS  போய் சீற் பிடித்து வந்திருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சார் வந்து நின்றதும் என்கிறீர்கள்?

புகையிரதம் நிற்க முன்பே அத்தனை பேரும் உள்ளே இருப்பார்கள்.

அப்பாவிகள் முதியவர்கள் பெண்கள் தான் புகையிரதம் நின்ற பின்பு ஏறுபவர்கள்.

முன்பதிவு செய்துமா அல்லோல கல்லோலம்?

இதிலே இலஞ்சமாக எவ்வளவு தள்ளினார்கள் என்பது கணக்கிலில்லை யுவர் ஆனர்.

 

அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை ஏப்பம் விட்டு தின்ற காசில், சொந்த வாகனங்களில் பவுசாய் திரியும்போது குடிமக்கள் எஞ்சிய மிச்சம் சொச்சத்தில் உருவாக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை பெற்றுக்கொள்ள மிருகத்தனமாய் போட்டி போடுகின்றார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வது அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னான நிலை.

£600-1200 தெண்டமாக அழுது, ஏதோ மரண தண்டனை கைதியின் எலெக்ரிக் கதிரையில் இருப்பது போல் 11 மணி நேரம் காலை மடக்கி வைத்து இருந்து, ஒரு பெட்டி போன்ற அறையில் உச்சா, கக்கா எல்லாம் போய், அதுக்கு பக்கத்தில் வைத்திருக்கும் சாப்பாடை கவ்வி மென்று முழுங்கி,

இலண்டனில் இருந்து போகும் விமான பயணத்தை விட ஊரில் இருக்கும் பலூன் பஸ்சிலோ அல்லது 1ம் வகுப்பு ரயிலிலோ போவது அவ்வளவு கடினம் இல்லை.

இலங்கையில் இப்போ 3ம் வகுப்பு (பழைய மர சட்ட இருக்கைகள்) இல்லை என நினைக்கிறேன். 2,1 தான்.

1ம் வகுப்பு முன் பதிவு செய்திருந்தால் யாரும் ஏறி சீட்டில் இருக்க மாட்டார்கள், இருந்தாலும் காவலாளியை விட்டு தூக்கி விடலாம்.

ஒரே பிரச்சனை - மலசலகூடம். நாசமறுப்பார் நாறி வச்சிருப்பார்கள்😷.

ஆகவே பயணம் முழுவதும் கழிவகற்றாமல் கடத்த முடிந்தால் போதும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.