Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருந்தால் இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இணங்க வேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருந்தால் இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இணங்க வேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன் 

By DIGITAL DESK 5

12 DEC, 2022 | 10:07 AM
image

 

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஜனாதிபதி, அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது.

ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னோடியான 13 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும், இந்த பேச்சுவார்த்தையில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் என்று கருதுகின்றேன்.

1. அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்ததையை (ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டி என்பதே எமது நிலைப்பாடு) நாம் வரவேற்கின்றோம்.

2. பேச்சுவார்த்தைக்காக 3 ஆம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்பதை கடந்த கால வரலாறு உணர்த்துகின்றது.

3. மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்.

4. பேச்சுவார்த்தை ஒரு கால வரையறைக்குள் பேசி முடிக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியின் அழைப்பை நாம் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது.

அத்தகைய செயற்பாடு எமக்கான சர்வதேச ஆதரவினையும் பெற்றுத்தராது. ஆனால், தீர்வு தொடர்பில் ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்க வேண்டும். 

இதனை நான் 13 ஆம் திகதி சந்திப்பில் வலியுறுத்துவேன். இந்த பேச்சுவார்த்தையில் ஏனைய எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து இந்த கருத்தை வலியுறுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/142845

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைக் கோபாவேசத்தோடு எதிர்க்கும் எந்த கருத்தையும் இங்கே காணவில்லையே? ஏன்?😂

- மனித உரிமைகள் விடயத்தில் உலகின் அடிமட்ட நிலை

- மத/மொழி சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில் ஆசியாவின் மோசமான ஒரு நாடு

- பொதுப் பணம் மக்களுக்குச் சேராமல் ஊழல் வாதிகளிடம் சேர்வதில் முன்னணி நாடு

இந்தத் தகுதிகளெல்லாம் இருப்பதாலா சி. வி ஐயா இந்தியாவை அழைக்கச் சொல்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இந்தியாவைக் கோபாவேசத்தோடு எதிர்க்கும் எந்த கருத்தையும் இங்கே காணவில்லையே? ஏன்?😂

- மனித உரிமைகள் விடயத்தில் உலகின் அடிமட்ட நிலை

- மத/மொழி சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில் ஆசியாவின் மோசமான ஒரு நாடு

- பொதுப் பணம் மக்களுக்குச் சேராமல் ஊழல் வாதிகளிடம் சேர்வதில் முன்னணி நாடு

இந்தத் தகுதிகளெல்லாம் இருப்பதாலா சி. வி ஐயா இந்தியாவை அழைக்கச் சொல்கிறார்?

தேர்தலில்…. வாக்குப் போட… பணம், சாரயம், பிரியாணி கொடுத்து வென்று விட்டு…
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று… பீலா விட்டுக் கொண்டு திரிவதையும் சேர்க்கவும். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பொது அறிவிப்பு 

நான் கீழே சொல்லி உள்ளது இந்தியா பற்றி ஈழதமிழர் எடுக்க வேண்டும் என நான் பலவருடமாக எழுதி வரும் என் நிலைப்பாடு.

தயவு செய்து - இதுதான் எனது நிலைப்பாடும் என்று எனக்கு யாரும் தனிமடலில் காதல் கடிதம் அனுப்ப வேண்டாம் 🤣.

——————————

சி வி செய்வது பாதி சரி, பாதி பிழை என்பேன் நான்

சரியான பாதி

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியா இதில் தலையையிட்டே ஆகும். ஜே ஆர், தலைவர் போன்றோர் கூட இந்தியாவை தவிர்க முடியவில்லை. அதை இப்போ இருக்கும் யாரும் செய்வார்கள் என நாம் எதிர்பார்க முடியாது.

ஆகவே எப்படியும் வர போவவர்களை, நாம் கூப்பிடுவதில் தவறில்லை.

பிழையான பாதி

தனியே இந்தியாவை மட்டும் இன்றி, மேற்கையும் இதில் இணைக்க வேண்டும். நாம் ஓரளவுக்கேனும் அழுத்த கூடிய தரப்பு மேற்கே - அத்தோடு அவர்கள்தான் விசாரணைகளின் லகானை பிடித்திருப்போர்.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.