Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மைதானத்திற்கு தமிழர் பெயரா? வெடித்த எதிர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்திற்கு தமிழர் பெயரா? வெடித்த எதிர்ப்பு!

மைதானத்திற்கு தமிழர் பெயரா? வெடித்த எதிர்ப்பு!

கோறளைப்பற்று பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் தவிசாளர் கனகரெத்தினம் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தினால் இன்று ஞாயிற்றுக் கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சகோதார இனத்தவர்கள் விடுத்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டு பிரிதொரு தினத்தில் இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ் மைதானத்திற்கு தனி நபர்களது பெயர் எதுவும் வைக்காமல் முன்பு இருந்தமை போல் பொது விளையாட்டு மைதானம் என பெயர் வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக கேள்வியுற்றவர்கள் மைதானத்திற்கு முன்பாக ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்துடன் தவிசாளருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வாழைச்சேனை பொலிசார் வரவழைக்கப்பட்டு கலவரம் ஏற்படாமல் தடுத்தனர்.

பொலிசார் இரு தரப்பினரின் விடயத்தினை விசாரித்ததன் பின்னர் குறித்த செயற்பாட்டினை நிறுத்தியதுடன் நீதி மன்ற நடவடிக்கையின் பின்னர் பெயர் பலகை இடும் செயற்பாட்டினை மேற்கொள்ளுமாறு தவிசாளரிடம் ஆலோசனை வழங்கினர்.

குறித்த விளையாட்டு மைதானம் புதுக்குடியிருப்பு கிராமசேகர் பிரிவிற்குள் வருவதாகவும் பிரதேச சபையில் முன்னாள் தவிசாளரின் பெயர் மைதானத்திற்கு வைக்கப்படவேண்டும் என சபை தீர்மானம் எடுக்கப்பட்டதனால் இன்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் சட்ட நடவடிக்கையின் பின்னர் மீண்டும் அதே இடத்தில் குறித்த தவிசாளரின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கருத்து தெரிவித்தார்.
 

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=169284

  • கருத்துக்கள உறவுகள்

சகோதர இனம் எதிர்பு தெரிவித்தது என்றால்…. முஸ்லீமாக தான் இருக்கும்.
இவர்களுக்குத்தான்… கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியையே 
தாரை வார்த்துக் கொடுத்தவர்கள் நம் அரசியல்வாதிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சகோதர இனம் எதிர்பு தெரிவித்தது என்றால்…. முஸ்லீமாக தான் இருக்கும்.
இவர்களுக்குத்தான்… கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியையே 
தாரை வார்த்துக் கொடுத்தவர்கள் நம் அரசியல்வாதிகள். 

ரணில் அரசியல் தீர்விலும் இதுதான் நடக்கும்...அவர் இப்ப வளர்ப்பு  பிராணிகளை வாய் பொத்தி வைத்திருக்கிறார்....கடைசியில் தீர்வு சுமந்து சம்பந்துவின் அரை குறை அமைச்சுப் பத்வியுடன் முடிவடையும்

  • கருத்துக்கள உறவுகள்

புட்டோடை தேங்காய்ப்பூ சேராமல், துணிந்து வெட்டிப்போட்டு நடக்க வெளிக்கிடும்வரை வெருட்டல் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, satan said:

புட்டோடை தேங்காய்ப்பூ சேராமல், துணிந்து வெட்டிப்போட்டு நடக்க வெளிக்கிடும்வரை வெருட்டல் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

உண்மைதான். ஆனால் மேலும் இழுபட்டுச்செல்லும். காலங்கடத்திகளுக்குக் களமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.