Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்னேற்றம் இல்லை! – சுமந்திரன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்னேற்றம் இல்லை! – சுமந்திரன் தெரிவிப்பு

Screenshot_20220512-201607_Chrome.jpg

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை நடைபெற்ற சந்திப்பு அவ்வளவு நல்லதாக இல்லை. கடந்த டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் முன்னேற்றம் எதுவும் இன்று வரை இல்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசியல் கைதிகள் விடயம் மற்றும் காணி விடுவிப்பு சம்பந்தமாக கடந்த சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையே இன்றைய சந்திப்பிலும் திரும்பச் திரும்ப அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி சந்திப்பின் போது உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்கள் பற்றி ஒரு பட்டியல் தருமாறு சொன்னார்கள். நான் அதைத் தருகின்றேன் என்று தெரிவித்தேன்.

அதேநேரத்தில் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் இன்னமும் ஒரு முன்னேற்றம் இல்லை எனில் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டி வரும் என்பதை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.

இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் நானும் (எம்.ஏ. சுமந்திரன் – தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதனும் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தனும் (புளொட்) கலந்துகொண்டோம்.

அதேவேளை, அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்றனர் . வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாடு சென்றிருப்பதால் அவர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/01/182481/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்றனர் .

நொச்சி! இந்தப்பெரியவாளை எந்தத் தரப்பில் வைத்திருகிறார்கள் என்று பார்த்தேளா? இப்போ வடக்கை பற்றி பேசுவதால் இதை வெளியிட்டிருக்கிறார்கள். மற்றவாளின் பெயர்களையும் தொடர்ந்து  இந்த வரிசையில் எதிர்பாக்கலாம், ஆனால் ஒரு தரப்பும் இல்லாமல் நடுத்தெருவில் விடப்படுவார்கள் வெகு விரைவில் என்பதையும்  எதிர்பாக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்றனர் .

டக்ளஸ் சிங்கள தரப்பிலை இருந்து கொண்டு தமிழர் தரப்பு பிழை விடுது எண்டு அடிக்கடி சொல்லுறவர் எல்லோ?  அப்பிடியெண்டால் இவர் சிங்களவரோ? 🧐

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சந்திப்பு அவ்வளவு நல்லதாக இல்லை

அப்பாடா..

நானும் இந்த அபிலாசைகள் திரியை தொய்ய விட்டிட்டன் - பெப்ரவரி நாலாம் தேதிக்கு முன் தீர்வு வந்தால் என்ன செய்வது எண்டு யோசிச்சனான். 

இனி ஆறுதலா எழுதலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, goshan_che said:

இனி ஆறுதலா எழுதலாம்.

கனக்க யோசிக்காதையுங்கோ......இன்னும் காலமிருக்கு.... உங்கடை பேரப்பிள்ளையை வைச்சும் ஆறுதலாய் எழுதலாம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அப்பாடா..

நானும் இந்த அபிலாசைகள் திரியை தொய்ய விட்டிட்டன் - பெப்ரவரி நாலாம் தேதிக்கு முன் தீர்வு வந்தால் என்ன செய்வது எண்டு யோசிச்சனான். 

இனி ஆறுதலா எழுதலாம்.

 

21 minutes ago, குமாரசாமி said:

கனக்க யோசிக்காதையுங்கோ......இன்னும் காலமிருக்கு.... உங்கடை பேரப்பிள்ளையை வைச்சும் ஆறுதலாய் எழுதலாம்.😁

தமிழர் பிரச்சினைக்கு, இப்போதைக்கு தீர்வு வாற மாதிரி அறிகுறி இல்லை.
எல்லாப் பக்கமும் தொடர்ந்து கதைக்க  வாரிசு இருக்கு.
எரிக் சோல்கைமுக்கும் வயது ஏறிக் கொண்டு போகுது.
அவரும், தனக்கு ஒரு வாரிசை… உருவாக்க வேண்டிய நேரம் வந்திட்டுது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஆட்டத்தை ஆரம்பிக்கவேயில்லை எங்கே முன்னேறுவது? எழுபத்தொன்பது வருஷமா எத்தனையோ பேர் அசைச்சுப் பாத்திட்டினம் அசையேல்லை, திடுதிப்பெண்டு சுதந்திர தினத்துக்கு கொடி ஏத்தலாமெண்டு  சுமந்திரன் கனவு கண்டிருக்கலாம்  நாங்கள் நினைக்கேலை. கடன் வேண்டுறதுக்கு இவையளை கூட்டிவைச்சு கதைச்சு காலத்தை இழுத்தடித்துக்கொண்டு அறிக்கை விட்டு வாங்கலாமெண்டு நரியார் திட்டம் போட்டிருப்பார், இவையும் போகமுன்னம் அவரை புகழ்ந்து, ரகசியம் பேசி ஒண்டும் ஆகேல்லை, ஆகவும் ஆகாது, எங்கட ஆக்களும் வாங்கிறதுக்கு இன்னும் தயாராகவில்லை.  ஒட்டுக்குழு ஓணான்குழுக்கள் கலைக்கப்படவேண்டும், பச்சோந்திகள் விலக்கப்படவேண்டும், இருக்கிறவர்கள் ஒன்று சேரவேண்டும், சிங்களத்துக்கும் போக வழியில்லாமல் இறுகவேண்டும். காலம் அதைச்செய்யும், அதுவரை நாங்கள் பொறுத்துத்தான் ஆகவேண்டும். உலகமும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்

இனப் பிரச்சினைக்கு தீர்வு: ஜனவரி 10 வரை தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதிக்கு அவகாசம்!

அரசியல் தீர்வு மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தடன் இதுவரையில் நடத்தப்பட்ட சந்திப்புகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வு தொடர்பான வரைபொன்றை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் தங்களிடம் கையளிக்க வேண்டும் என்றும், இல்லையேல் வீனாக பேச்சுக்களை நடத்தி பலனில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.

அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு விடயம் ஆகியன தொடர்பில் முன்வைக்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படாது, அரசியல் தீர்வு தொடர்பில் கதைத்துக்கொண்டிருப்பது அர்த்தமற்றது என்று அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

இதன்போது பதிலளித்துள்ள ஜனாதிபதி 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும், அதன்போது தீர்வுகள் குறித்து பேசுவோம் என்றும் கூறியுள்ளார்.

http://www.samakalam.com/இனப்-பிரச்சினைக்கு-தீர்-3/


 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் தைப்பொங்கல் விசேட அறிவிப்பு?

January 6, 2023
 

வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு அரசியல் கைதிகளின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
 

https://www.supeedsam.com/176735/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

பிரச்சினைகளுக்கு தீர்வு தொடர்பான வரைபொன்றை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் தங்களிடம் கையளிக்க வேண்டும் என்றும்,

என்னடா இது? அதிகாரத்தீர்வு நல்லாட்சி காலத்தில வரைஞ்சாச்சு என்று சுமந்திரன் சொல்லிக்கொண்டிருந்தார், முந்தாநாளும் சொன்னமாதிரியிருக்கு. இவர்களுக்கு இன்னும் கண்ணில காட்டேலையோ? சரி ..... இவர்களாவது தங்கள் பிரச்சனை இது, அதற்கான தீர்வு இது, உங்கள் முடிவு எது? இஸ்ரமென்றால் பேச்சுக்கு கூப்பிடுங்கோ வாறோம், இல்லையென்றால் எங்களை கஷ்ரப்படுத்த வேண்டாமென்று அறிவிக்கலாமெல்லோ?

21 minutes ago, கிருபன் said:

15 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும், அதன்போது தீர்வுகள் குறித்து பேசுவோம் என்றும் கூறியுள்ளார்

அது ஏது இவ்வளவுகாலமும் அங்க கூப்பிட்டு ரகசியமாகத்தானே பேசியவர்? இப்போ என்ன புதுசா இங்க? ஓ .... அப்போ கையூட்டு குடுக்கத்தேவையில்லை, தேத்தண்ணி செலவு மிச்சம்! நரியார் என்ன கணக்கு போடுறார், என்ன  திட்டத்தோட வாறார் எண்டு ஒண்டும் தெரியேல்லையே? இனி தாடியர் கூட்டம் சேக்கிறதில குறியாய் இருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.