Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டாரா?​​​​​​​

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டாரா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக  ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் வரைக்கும் தமிழரசு கட்சி ஒரு செயலிழந்த கட்சியாகவே பார்க்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கி வீட்டுச் சின்னத்தை ஒரு பொதுச் சின்னமாக தலைவர் அவர்கள் அங்கீகாரம் வழங்கி நாங்கள் ஒரு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தினோம்.

இன்று தமிழரசுக் கட்சி தனித்துவமாக முடிவை எடுத்து ஒரு தொழில்நுட்பம் முறை என்றும் ராஜதந்திர முறை என்றும் கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறிக்கொண்டு, வீட்டுச் சின்னம் தான் தமிழ் மக்களுடைய சின்னம் என்றும், தமிழரசுக் கட்சி தான் தமிழ் மக்களுடைய தாய் கட்சி என்றும் வலியுறுத்தி ஊடகங்களிலே செய்து வெளியிட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பும் ஊடகப் பேச்சாளர் பொறுப்பும் எங்களிடமே இருக்கின்றது என்று தமிழரசு கட்சி கூறி வருகின்றது. உண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து கட்சிகளைக் கொண்டு தற்போதைய காலத்தின் தேவை உணர்ந்து ஒரு புதிய பரிணாம வளர்ச்சி கண்டு இங்குநிற்கின்றது.

அந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ, பிளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக குற்றுவிளக்கு சின்னத்தில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றது.

இந்த சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தனித்துவமாக தமிழரசு கட்சி இல்லாமல் செயல்பட்டு வருகின்றது இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் ஐயா   விலக்கப்படுகின்றார் ,கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரன் விலக்கப்படுகின்றார்.

சம்பந்தன் ஐயா வெறுமனே திருகொணமலை மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலை இங்கே உருவாகி இருக்கின்றது.
 

 

http://www.samakalam.com/கூட்டமைப்பு-தலைவர்-பதவிய/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

குற்றுவிளக்கு

குத்துவிளக்கின் தத்துவம்[தொகு]

குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இந்துக்களும் தமிழர்களும் மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக இதனைக் கொள்வர்.இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள். இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும்.

# தமிழ் பாரம்பரிய பெயர்களை கொலை செய்து செய்தி வெளியிடும் சமர்களத்துக்காக விக்கிபீடியாவில் இருந்து சிறிய தகவல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே-சி.வி.கே.சிவஞானம்

ஊடக அறிக்கை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியாது என்று வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

CVK-Sivagnanam-300x182.png

தனது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப் பின்போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி, அதன் செயற்பாடுகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. அது பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இருந்தாலும் கூட ரெலோவின் பேச்சாளர் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இல்லை. அல்லது அவரது பதவி செயலற்றுப் போய்விட்டது. அவருடைய தலைவர் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. ஆனால் இரண்டு கட்சிகளாலும் காலம் காலமாக பல காலமாகவே உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விடயம் – அந்த விடயத்தை அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அது அவர்களின் உரிமை. பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மூன்று கட்சி களும் அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்தனர். அது முன்பும் அவ்வாறே நடந்தது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் தெரிவு என்பது இதுவரையில் பாராளுமன்றக் குழுவாகவே இருந்திருக்கின்றது.

பாராளுமன்றக் குழு தெரிவு செய்த சம்பந்தன் இன்னும் அந்தப் பதவியில் தான் இருக்கின்றார். ஆகவே அவரை நீக்குவதோ அல்லது அந்தப் பதவி வறிதாக்குவதோ வெறுமனே ஓர் ஊடக அறிக்கை மூலம் சொல்ல முடியாது. முறைப்படியாக பாராளுமன்றக் குழு கூடி விரும்பினால் அவரை நீக்கலாம் அல்லது அவர் விரும்பினால் விலகலாமே தவிர பதவி வறிதாக்கல், செயலற்றுப் போதல் என்று எதுவும் இல்லை. நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு தலைவரை இவ்வாறு அவமதிக்கின்ற ஒரு கூற்றை என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சி சார்ந்தது மட்டுமல்லாது பொதுவாகவே ஒரு மனிதனின் மதிப்பு சார்ந்த விடயத்தில் அதை ஆட்சேபிக்கின்றேன். அது தவறு. சம்பந்தன் இன்னும் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்படுகின்றார் என்பதே உண்மை” என்றார்.

 

https://thinakkural.lk/article/235407

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியை மக்களே நிராகரித்து விட்டால் பழசுகளின் நிலை என்ன?🙂

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் இன்னும் கதிரைக்கு ஆசைப்படுவதும், சண்டைபிடிப்பதும் எழுபது வருடங்களாக இருந்து கதிரை தாங்காமல் மாறி மாறி அமர்ந்ததைவிட எதை சாதித்தார் இவர்? இப்போ கதிரையில் இருப்பதற்கும், யாராவது கதிரையையும் இவரையும் பிடிக்க வேண்டும். இப்படி ஒரு பாரம் தேவையா? இவர் கதிரையில் இருப்பதற்கு  இருவர் வேண்டும். வெளிநாட்டுக்காரர் பாத்தா இந்த வயது போன காலத்திலும் மக்கள் இவரை வதைக்கிறார்கள் அவ்வளவு கெட்டிக்காரன் என்று நினைப்பார்கள்? அவர்தான் பிடிவாதமாக  கதிரையை இறுக்கப்பிடித்திருக்கிறார் என்பது அந்த மக்களுக்குத்தான் புரியும். பிணத்தைவைத்து பதவி செய்யும் உலகமிது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, satan said:

கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் இன்னும் கதிரைக்கு ஆசைப்படுவதும், சண்டைபிடிப்பதும் எழுபது வருடங்களாக இருந்து கதிரை தாங்காமல் மாறி மாறி அமர்ந்ததைவிட எதை சாதித்தார் இவர்? இப்போ கதிரையில் இருப்பதற்கும், யாராவது கதிரையையும் இவரையும் பிடிக்க வேண்டும். இப்படி ஒரு பாரம் தேவையா? இவர் கதிரையில் இருப்பதற்கு  இருவர் வேண்டும். வெளிநாட்டுக்காரர் பாத்தா இந்த வயது போன காலத்திலும் மக்கள் இவரை வதைக்கிறார்கள் அவ்வளவு கெட்டிக்காரன் என்று நினைப்பார்கள்? அவர்தான் பிடிவாதமாக  கதிரையை இறுக்கப்பிடித்திருக்கிறார் என்பது அந்த மக்களுக்குத்தான் புரியும். பிணத்தைவைத்து பதவி செய்யும் உலகமிது!


அவர் ஒரு ஈழத்து கட்டுமரம் 😎

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மாகாண முதலமைச்சரை விட தவிசாளர் பதவிக்கு ஒரு அனுகூலம் உண்டு.

சபையின் காலம் முடிந்ததும், எல்லாரும் பதவி இழப்பர். ஆனால் அடுத்த சபை கூடும் வரை தவிசாளர் பதவியில் தொடர்வார் - அதே கொடுப்பனவுகளுடன், வரபிரசாதங்களுடன் என அறிகிறேன்.

சம்பந்தருக்கு சளைத்தவர் இல்லை சி வி கே.

9 hours ago, nunavilan said:

தமிழரசுக்கட்சியை மக்களே நிராகரித்து விட்டால் பழசுகளின் நிலை என்ன?🙂

யாழ் களத்தில் வந்து கருத்து எழுதலாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

யாழ் களத்தில் வந்து கருத்து எழுதலாம் 🤣.

சாத்தானிடம் செத்தான்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:


அவர் ஒரு ஈழத்து கட்டுமரம் 😎

கதிரைக்கு அடிமையாக்கிவிட்டார், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை, மோசமான நிலை. யாராவது புனர்வாழ்வு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலுண்டு. யாருக்கந்த தைரியமுண்டு சாமியாரை அனுப்புவோமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கதிரைக்கு அடிமையாக்கிவிட்டார், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை, மோசமான நிலை. யாராவது புனர்வாழ்வு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலுண்டு. யாருக்கந்த தைரியமுண்டு சாமியாரை அனுப்புவோமா?

ஐயோ  ஐயையோ வேண்டாம் இவரும் சம்பந்தன்  சுமத்திரன். உடன்   இரண்டாறக்கலந்து  ஒரு பதவியை பெற்று மூம்மூர்த்தியாகிவிடுவார்கள   ....அதன் பிற்பாடு   இவர் புலம்பெயர் தமிழர்களை வறுத்து எடுத்து விடுவார் 🤣   சம்பந்தன்.  இந்த உலகத்தை விட்டு போகக்கூடியநிலையில்.  புனர்வாழ்வு அதிர்ச்சி வைத்தியம்   எல்லாம் அதிக செலவு கூடிய செயல்கள....

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கேட்டுப் பாத்தேன் யாருக்காவது தைரியம் இருக்கா என்று? நீங்கள் சொன்னதுதான் சரி. அவருக்கு புனர்வாழ்வு கொடுக்கப்போய் சம்பந்தர் போய்சேந்துவிடுவார் பிறகு சாமியாருக்கு புனர்வாழ்வு  கொடுக்கவேண்டும். யாரும் போக வேண்டாம் அவரே போற நேரம் கதிரை காலியாகுந்தானே அப்போ பாத்துக்கொள்வோம். பிறகு கனவிலே வந்து தன்ர கதிரைக்கு சண்டை பிடிப்பார் கண்டியளோ! 

  • கருத்துக்கள உறவுகள்

 நாட்டிலை 13 இழுபறி போற போக்கை பார்த்தால்  சம்மை முந்திக்கொண்டு நரியாரை போக செய்திடுவாங்கள் போல இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.