Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது : இதுவே அரசியல் தீர்வுக்கான இழுபறிக்கு பிரதான காரணம் - வாசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது : இதுவே அரசியல் தீர்வுக்கான இழுபறிக்கு பிரதான காரணம் - வாசு

By VISHNU

07 FEB, 2023 | 03:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது, இதுவே அரசியல் தீர்வு இழுபறிக்கு பிரதான காரணியாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமை மாகாண சபை தேர்தல் ஊடாக பாதுகாக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் அந்த உரிமையையையும் பறித்துக் கொண்டது.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து ஏனைய அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க கூடாது என மகாசங்கத்தினர் உட்பட பெரும்பாலான தரப்பினர் கடுமையாக வலியுறுத்துகிறார்கள்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்க பகிர்ந்தளிக்கும் போது நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும்.

அதிகாரங்கள் பகிரப்படாத நிலையிலும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அரசியல் பரிந்துரைகளின் பிரகாரம் நியமிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அல்ல எந்த மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்க கூடாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளார்.

அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் தமிழ் தலைமைகள் நடைமுறைக்கு சாத்தியமான ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

அதிகார பகிர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் மத்தியில் காணப்படும் கருத்து மற்றும் கொள்கை வேறுபாடுகள் அதிகார பகிர்வு விவகாரம் காலம் காலமாக இழுபறி நிலையில் இருக்க ஏதுவான காரணியாக உள்ளது.

அதிகாரத்தை பகிர்ந்தளிக்க நான் தயாராக இருந்தேன் ,அதிகார பகிர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவிப்பார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் தரப்பு எடுக்கும் தீர்மானம் சிறந்ததாக அமையாது, முரண்பாடுகளை மாத்திரம் தோற்றுவிக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/147607

  • கருத்துக்கள உறவுகள்

கக்கிறது முழுக்க இனத்துவேசம்.... சம்பந்திமட்டும் தமிழர் வேணூம்...இவரை வால் பிடிக்கவும் நிறைய தமிழரும் இருக்கினம்..மகிந்த கோட்டாவின் அமைச்சரவையில்  இருந்து கக்கிவிட்ட துவேசம் கணக்கிலடங்காது...இப்ப நீலிக்கண்ணீர் வடிக்குது..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

இதை மட்டும் நம்மால் ஏற்படுத்தவே முடியாது. தொன்று தொட்டு வரும் பரவணிக்குணம். எவ்வளவோ சாதித்த தலைவராலும் முடியவில்லை இனி யாரால் முடியும்? இவர்களே நம்மை அழித்துவிடுவார்கள்.

3 hours ago, alvayan said:

கக்கிறது முழுக்க இனத்துவேசம்....

ரோகண விஜயவீர, வாசுதேவ நாணயக்கார, சஜித் போன்றோர் தேர்தலில் நின்ற போது; விஜயவீர தன் தேர்தல் வாக்குறுதியில், தான் வென்றால் இருபத்து நான்கு  மணி நேரத்தில் புலிகளை தூக்கில் போடுவேன் என்றும், வாசு தான் வென்றால் அதே இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் புலிகளுடன் பேசி தீர்வுக்கு வருவேன் என்றாராம். ஆனால் தோற்றுப்போன வாசு இனவாதியாக மாறினார் என அறிந்தேன். ரோகணவுக்கு நடந்தது உலகமே அறியும். இனவாதம் கக்க விரும்பாத அரசியல் வாதிகளை சிங்கள மக்கள் ஒதுக்கினார்கள், அவர்களும் ஒதுங்கிக்கொண்டார்கள், அரசியலில் அவர்கள் மறங்கடிக்கப் பட்டார்கள். இன்று சிங்கள இனவாதிகள் நமது ஒற்றுமையின்மையை பயன்படுத்திக்கொண்டு பழித்தும் உரைக்கிறார்கள், நமக்கு உறைக்கவேயில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, alvayan said:

கக்கிறது முழுக்க இனத்துவேசம்.... சம்பந்திமட்டும் தமிழர் வேணூம்...இவரை வால் பிடிக்கவும் நிறைய தமிழரும் இருக்கினம்..மகிந்த கோட்டாவின் அமைச்சரவையில்  இருந்து கக்கிவிட்ட துவேசம் கணக்கிலடங்காது...இப்ப நீலிக்கண்ணீர் வடிக்குது..

என்ன இருந்தாலும் எங்கடையளுட்டை ஒற்றுமை இல்லையெண்டது உண்மைதானே?

சிங்கள அரசியல்வாதியளிட்டை உள்ள ஒற்றுமை எங்கடை கோதாரியளிட்டை இல்லையெண்டதை வருசக்கணக்காய் பார்க்கிறம் எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்குள் ஒன்றுபட முடியாதவர்கள், தங்கள் பிழைகளை திருத்திக்கொள்ள முடியாதவர்கள் எப்படி எமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள போராடுவார்கள்? அதென்னவோ சிங்களத்துக்கு வால் ஆட்டுவதில் மட்டும் எல்லோருக்கும் ஒருமித்த குணம். அது எப்படி சாத்தியம்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

அவையள் ஒற்றுமையாவது இருக்கட்டும் நீங்கள் அதிகாரப் பகிர்வு குடுக்கப்போறியளெண்டால் குடுத்துத் துலைக்கலாம் தானே. உங்களுக்கு மனமில்லை பிறகு ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட மாதிரி ஒரே குலைப்பு தான். காணி பொலிஸ் அதிகாரம் இல்லையெண்டால் பிறகென்ன அதிகாரப் பகிர்வு. முதல் குடுத்துப்பாக்கவேணும் அதாலை பிரச்சினை வேணுமோ இல்லையோ எண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, வாதவூரான் said:

அவையள் ஒற்றுமையாவது இருக்கட்டும் நீங்கள் அதிகாரப் பகிர்வு குடுக்கப்போறியளெண்டால் குடுத்துத் துலைக்கலாம் தானே. உங்களுக்கு மனமில்லை பிறகு ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட மாதிரி ஒரே குலைப்பு தான். காணி பொலிஸ் அதிகாரம் இல்லையெண்டால் பிறகென்ன அதிகாரப் பகிர்வு. முதல் குடுத்துப்பாக்கவேணும் அதாலை பிரச்சினை வேணுமோ இல்லையோ எண்டு

அவர்கள் எதுவுமே கொடுக்கப்போவதில்லை என்பது 70 வருட வரலாறு. அவர்கள் தமிழர் பிரச்சனை என வரும் போது இன ரீதியாக ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்பதும் வரலாறு.

சிங்கள கட்சிகளில் தமிழர்கள் பதவி மற்றும் கட்சி அங்கத்துவம் வகிக்கின்றார்கள்.

தமிழ் கட்சிகளில் ஒரு சிங்கள காக்கா, குருவி குஞ்சுகளாகவது அங்கம்  வகிக்கின்றதா?
 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

தமிழ் கட்சிகளில் ஒரு சிங்கள காக்கா, குருவி குஞ்சுகளாகவது அங்கம்  வகிக்கின்றதா?

தமிழ்த்தேசியம் என்றால் சிங்களத்துக்கு வெறுப்பு, பயம் எனும் கட்சியில் இணைந்து தன்னை வளர்த்துக்கொண்ட பின் எங்கிருந்து வந்தாரோ அங்கே சென்றுவிட்டார் பியசேன. அவர்களை வளர்த்து சிங்களத்துக்கு தாரைவாத்து விட்டு பெருமை அடைவார்கள், நம்மவரை தட்டி வீழ்த்தி வேடிக்கை பார்ப்பார்கள். தமிழ் கட்சியில் இருந்தாலும் சிங்களத்துக்கே சேவை செய்யும் நம்மவர், இதில அவர்கள் அங்கம் வகித்தாலென்ன வகிக்காவிட்டாலென்ன? அவர்களுக்கு தேவையான சேவை எம்பக்கத்திலிருந்து தாராளமாக அவர்களுக்கு கிடைக்கிறதே எதற்கு வீணாக ஒருவரை மினைக்கெடுத்திக்கொண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.