Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

அப்பன்! முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பின்னர் ஈழத்தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசை பெரிதும் நம்பினார்கள்.நம்பினேன். இது சம்பந்தமாக ஜேர்மனிய உறுப்பினர்களுடனும் உறவாடினேன். உப்புச்சப்பில்லாமல் கதைத்தார்கள். வெட்டினோம் புடுங்கினோம் பீலிங்....ஏதோ கோவில்  அங்கத்தவர் போல் இருக்கின்றார்கள். திருவிழா காலங்களில் மட்டும் தலையை வெளியே காட்டுவர் போல் அவர்களது நடத்தைகள்.

கவனிக்க.....

இவர்களை பற்றி இவ்வளவு நாகரீகமாக எழுதிவிட்டேனா என நினைக்கும் போது என்னை நானே கிள்ளிப்பார்க்கின்றேன்.:face_savoring_food:

எல்லாரும் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் போல் ஆகி விட‌ முடியாது தாத்தா.............த‌லைவ‌ரின் மாவீர‌ உரைய‌ கேட்க்க‌ ம‌க்க‌ள் த‌வ‌மாய் கார்த்து இருந்த‌ கால‌ங்கள் ம‌ற‌க்க‌ முடியாத‌வை

2009க்கு பிற‌க்கு உருத்திர‌ குமார் மாவீர‌ நாள் உரை ஆற்றினார்............மக்க‌ள் அதை விரும்பி பார்த்ததாக‌ தெரிய‌ வில்லை................அடுத்த‌ வ‌ருட‌ம் ந‌ம‌க்கு ச‌வாலான‌ கால‌ம் நாம் துணிந்து செய‌ல் ப‌ட‌னும் அது இது என்று உருத்திர‌குமார் புல‌ம்பினார்................இது வேலைக் ஆகாது என்று அவ‌ரின் பேச்சை ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே கேட்ப‌தை நிறுத்தி விட்டேன்

எவ‌ர் எல்லாம் த‌ன்னை முன் நிலை ப‌டுத்தாம‌ த‌மிழீழ‌த்துக்கு உண்மையும் நேர்மையுமா அகிம்சை வ‌ழியில் போராடுகின‌மோ அவை ப‌க்க‌ம் நிப்ப‌து சிற‌ப்பு................

Edited by பையன்26

  • Replies 82
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, satan said:

மாற்ற முடியாததை  ஏற்றுக்கொள்ள வேண்டும். குறை சொல்லிப்பயனில்லை ஆனாலும் ஆற்றாமையின் வெளிப்பாடு புலம்புகிறோம். இல்லையேல் மாற்றிக்காட்ட வேண்டும். இந்தியா இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப முடிந்ததென்றால், சாபாட்டுப்பொட்டலம் போட முடிந்ததென்றால் நமது உறவுகளால் ஏன்முடியவில்லை? கப்பலை நடுக்கடலில் நிறுத்தி காத்திருந்து விட்டு இந்தியா தான் விடுவிக்கிறேன் என்று போலி வாக்குறுத்திவிட்டு ஒன்றுமில்லாமல் சும்மா திரும்பிய சம்பவமும் உண்டு. இதை  ஐ. நாவும், சர்வதேசமும் கைகட்டி, வாய்பொத்தி பாத்துக்கொண்டுதானே இருந்தது. இது சர்வதேச  இனவழிப்பின் உச்சக்கட்டம். அதை மாற்றி எழுத முடியும் நினைத்தால், அதற்கு தடுத்தாடும், கேள்வி கேட்க்கும் சட்ட நுணுக்க  திறமை வேண்டும்!

எல்லாவற்றுக்கும் மேலாக புலம்பெயர் மக்களுக்குள் ஒரு நிதி அமைப்பை உருவாக்க வேண்டும். கட்சி நிதி போல் மாதாந்த கட்டணத்துடன் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கு வெளிநாடுகளில் அனுமதி உள்ளதென நினைக்கின்றேன். நல்லதிற்கும் கெட்டதிற்கும் பண முதலீடு வேண்டும். அது போல் எமக்குள் ஒரு நிதியமைப்பை உருவாக்கி  மாதாந்த சம்பளத்திற்காகவது எமது இன பிரச்சாரங்களுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, பையன்26 said:

எல்லாரும் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் போல் ஆகி விட‌ முடியாது தாத்தா.............த‌லைவ‌ரின் மாவீர‌ உரைய‌ கேட்க்க‌ ம‌க்க‌ள் த‌வ‌மாய் கார்த்து இருந்த‌ கால‌ங்கள் ம‌ற‌க்க‌ முடியாத‌வை

2009க்கு பிற‌க்கு உருத்திர‌ குமார் மாவீர‌ நாள் உரை ஆற்றினார்............மக்க‌ள் அதை விரும்பி பார்த்ததாக‌ தெரிய‌ வில்லை................அடுத்த‌ வ‌ருட‌ம் ந‌ம‌க்கு ச‌வாலான‌ கால‌ம் நாம் துணிந்து செய‌ல் ப‌ட‌னும் அது இது என்று உருத்திர‌குமார் புல‌ம்பினார்................இது வேலைக் ஆகாது என்று அவ‌ரின் பேச்சை ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே கேட்ப‌தை நிறுத்தி விட்டேன்

எவ‌ர் எல்லாம் த‌ன்னை முன் நிலை ப‌டுத்தாம‌ த‌மிழீழ‌த்துக்கு உண்மையும் நேர்மையுமா அகிம்சை வ‌ழியில் போராடுகின‌மோ அவை ப‌க்க‌ம் நிப்ப‌து சிற‌ப்பு................

அப்பன்!  தலைவர்  ஈழத்தமிழர்களுக்கு  இப்படி எங்களால்  வாழ முடியும் என ஒரு நிர்வாகத்தை  செயல்படுத்தி காட்டி  முடியாதது எதுவுமில்லை என சொல்லி சென்று விட்டார். இனி அதை முன்னெடுப்பவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

எவ‌ர் எல்லாம் த‌ன்னை முன் நிலை ப‌டுத்தாம‌ த‌மிழீழ‌த்துக்கு உண்மையும் நேர்மையுமா அகிம்சை வ‌ழியில் போராடுகின‌மோ அவை ப‌க்க‌ம் நிப்ப‌து சிற‌ப்பு..

எதுவும் இனாமாக கிடைத்தால் அதன் அருமை தெரிவதில்லை, அது எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும். ஒரு தலைவன் நெருக்கடியிலிருந்து பிறந்து மக்களுக்காக அதை தடுத்தாடி, பல சவால்களை, கஷ்ரங்களை, விமர்சனங்களை  கடந்து  தலைவனாக வேண்டும் அப்போ தெரியும் அதன் வலி, பொறுப்பு பெற்றதை விட்டுக்கொடாமல் கட்டிக்காக்கும்  திறமை. இது, திருவிழாவுக்கு கூடும் பக்தர் கூட்டம்!

6 minutes ago, குமாரசாமி said:

மாதாந்த சம்பளத்திற்காகவது எமது இன பிரச்சாரங்களுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். 

கூலிக்கு அமர்த்தி வேலை வாங்கும் துறைகளுமுண்டு ஆனால் இது ஒரு இனம் சார்ந்தது, அந்த உணர்வு தானாக வரவேண்டும். அதற்கு பெற்றோர் நமது வரலாறுகளை, பட்ட கஷ்ரங்களை எல்லாம் பிள்ளைகளுக்கு ஆதாரபூர்வமாக சொல்லிக்கொடுக்கவேண்டும். அந்த நிகழ்வுகளில் பங்குபற்ற செய்யவேண்டும், பெற்றோர் தங்கள் பங்களிப்பை, பொறுப்பை பிள்ளைகள் அறியச்செய்ய வேண்டும், அது நமது கடமை என உணர வைக்கவேண்டும். கூலிக்கு வேலை செய்பவன் பிறகு ஒற்றனாக, துரோகியாக, விலை போகக்கூடியவனாக மாறிவிடுவான், மாறிய சம்பவங்களுமுண்டு. அவர்கள் திறமையை எங்களிடமிருந்து பெற்று வளர்த்து அதை விற்று பிழைப்பார்கள். சேவை செய்யக்கூடியவர், எதற்கும் விலை போகாத மனநிலை வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, satan said:

எதுவும் இனாமாக கிடைத்தால் அதன் அருமை தெரிவதில்லை, அது எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும். ஒரு தலைவன் நெருக்கடியிலிருந்து பிறந்து மக்களுக்காக அதை தடுத்தாடி, பல சவால்களை, கஷ்ரங்களை, விமர்சனங்களை  கடந்து  தலைவனாக வேண்டும் அப்போ தெரியும் அதன் வலி, பொறுப்பு பெற்றதை விட்டுக்கொடாமல் கட்டிக்காக்கும்  திறமை. இது, திருவிழாவுக்கு கூடும் பக்தர் கூட்டம்!

கூலிக்கு அமர்த்தி வேலை வாங்கும் துறைகளுமுண்டு ஆனால் இது ஒரு இனம் சார்ந்தது, அந்த உணர்வு தானாக வரவேண்டும். அதற்கு பெற்றோர் நமது வரலாறுகளை, பட்ட கஷ்ரங்களை எல்லாம் பிள்ளைகளுக்கு ஆதாரபூர்வமாக சொல்லிக்கொடுக்கவேண்டும். அந்த நிகழ்வுகளில் பங்குபற்ற செய்யவேண்டும், பெற்றோர் தங்கள் பங்களிப்பை, பொறுப்பை பிள்ளைகள் அறியச்செய்ய வேண்டும், அது நமது கடமை என உணர வைக்கவேண்டும். கூலிக்கு வேலை செய்பவன் பிறகு ஒற்றனாக, துரோகியாக, விலை போகக்கூடியவனாக மாறிவிடுவான், மாறிய சம்பவங்களுமுண்டு. அவர்கள் திறமையை எங்களிடமிருந்து பெற்று வளர்த்து அதை விற்று பிழைப்பார்கள். சேவை செய்யக்கூடியவர், எதற்கும் விலை போகாத மனநிலை வேண்டும்.

இங்கே நான் சொல்ல வந்தது கட்சி தொண்டாயினும் இன தொண்டாயினும் அதில் ஈடுபடுபவர்களுக்கு வாழ்வாதார நிதி அவசியம் வேண்டும். போக்குவரத்து செலவுகளுக்கு கூட ஒரு நிதியமைப்பு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அப்பன்!  தலைவர்  ஈழத்தமிழர்களுக்கு  இப்படி எங்களால்  வாழ முடியும் என ஒரு நிர்வாகத்தை  செயல்படுத்தி காட்டி  முடியாதது எதுவுமில்லை என சொல்லி சென்று விட்டார். இனி அதை முன்னெடுப்பவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

தாத்தா 14ஆண்டு ஆக‌ போகுது ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு
ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் 2009க்கு பிற‌க்கு பெரிய‌ இல‌க்கை அடைய‌ வில்லை.................2009 ஈழ‌ ம‌ண்ணில் இழ‌ அழிப்பு ந‌ட‌ந்த‌து என்று உல‌குற்கு காட்டி விட்டார்க‌ள்.................2013 பெரும்பாலான‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கும் தெரிய‌ வ‌ந்த‌து ஈழ‌த்தில் இன‌ அழிப்பு ந‌ட‌ந்த‌து என்று..................திருட்டு திராவிட‌ க‌ட்சிக‌ள் ம‌த்திய‌ அர‌சுக்கு ப‌ய‌ந்து எம‌க்கான‌ நீதியை பெற்று த‌ர‌ த‌ய‌க்க‌ம் கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் செய்த‌  ஊழ‌ல்க‌ள்...............நேர்மையான‌ த‌மிழ‌ன் த‌மிழ‌க‌த்தை ஆண்டால் ம‌த்திய‌ அர‌சை அடி ப‌ணிய‌ வைக்க‌லாம்................இந்தியாவில் இருக்கும் ப‌ல‌ மானில‌ங்க‌ள் ஈழ‌த்தை ஆத‌ரிச்சா எம‌க்கு சாத‌க‌மான‌ நிலை உருவாகும் இந்தியாவில்................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

தாத்தா 14ஆண்டு ஆக‌ போகுது ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு
ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் 2009க்கு பிற‌க்கு பெரிய‌ இல‌க்கை அடைய‌ வில்லை.................2009 ஈழ‌ ம‌ண்ணில் இழ‌ அழிப்பு ந‌ட‌ந்த‌து என்று உல‌குற்கு காட்டி விட்டார்க‌ள்.................2013 பெரும்பாலான‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கும் தெரிய‌ வ‌ந்த‌து ஈழ‌த்தில் இன‌ அழிப்பு ந‌ட‌ந்த‌து என்று.................

புலிகள் காலங்காலமாக இலங்கையில் எங்களுக்கு நடந்த இனவழிப்பை உலகுக்கு வெளிப்படுத்தினார்கள், அதை நம்ம தலைகள்; ஒன்றுமில்லாமல், இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்கும் நிலைக்கு வக்காலத்து வாங்கி எந்த காரணத்துக்காக கதவு திறக்கப்பட்டதோ அந்த காரணத்தை மாற்றி திறந்த கதவை பூட்டிக்கொண்டிருக்கிறார்கள். எமது பிரச்சனையை போய் சொல்லுங்கள் என்று கேட்டால்; அது அமெரிக்கா சொன்னது நீங்கள் வரவேண்டாம் நாங்களே பாத்துக்கொள்கிறோம் ஆகவே நாம் போகத்தேவையில்லை என்கிறார்கள், ஆனால் இலங்கைக்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்க அவசரமாக கால நேரம் இல்லாமல் நாடு மாற்றி நாடு பறக்கிறார்கள்.

13 minutes ago, குமாரசாமி said:

இங்கே நான் சொல்ல வந்தது கட்சி தொண்டாயினும் இன தொண்டாயினும் அதில் ஈடுபடுபவர்களுக்கு வாழ்வாதார நிதி அவசியம் வேண்டும். போக்குவரத்து செலவுகளுக்கு கூட ஒரு நிதியமைப்பு வேண்டும்.

நீங்கள் சொல்வது யதார்த்தமானது. இன்றைய உலகில் பணமில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்பதற்கு நமது நாடும், வீடும் நல்ல உதாரணம். வெறுங்கை முழமிடாது. ஆனால் பலர் முகம் தெரியாமல், பெயர் சொல்லாமல், பல அழுத்தங்களுக்கிடையில் வேலை செய்வதாலேயே நமது பிரச்சனை இன்னும் அணையாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களோடு பல திறமைசாலிகள் சேர்ந்து ஒரே நேரத்தில் பல வழிகளில் எதிரியை சிந்திக்க, ஆற அவகாசம் அளிக்காமல் நாம் விரட்டக்கூடிய வழிகளில் முறையிட, செயற்பட, நெருக்கடிகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக நமக்கு சிங்களம் இரண்டு தெரிவு வைக்கும், அந்த இரண்டுமே ஏற்புடையதாக இருக்காது. ஒன்று சர்வதேச விசாரணையை நாம் கைவிடவும் அதே நேரம் நமது செயற்பாட்டை தடுத்து நிலங்களை பறிக்கும் நிலையையும் உருவாக்கும். இரண்டுமே ஒரே நேரத்தில் ஒரே கவனத்தில் கையாளப்படவேண்டும். ஆனால் அது நம்மால் முடிவதில்லை. இப்படியான சூழ்நிலைகளை நாம் அவர்களுக்கு உருவாக்க வேண்டும் இது நல்ல சந்தர்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்

நிதி திரட்டும் அமைப்பு நெறி முறைகளுக்கு உட்பட்டதாக உருவாக்கப்படவும் நிர்வகிக்கப் படவும் வேண்டும். முக்கியமாக வெளிப்படைத் தன்மை முக்கியம்.

இந்த நிதி ஈழத்தில் மூன்று முக்கியமான கருமங்களுக்குப் பயன் படல் வேண்டும்

1) கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் காணிகள் வாங்கப்பட்டு தமிழ் மக்கள் அங்கு பயிர்ச் செய்கை செய்ய உதவிட வேண்டும்

2) தமிழ் தாய்மார்களின் மகப்பெறு வீதம் அதிகரிக்கப் பட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெறுவோருக்கு, பணம் காணி உரிமைகள் போன்றவை கொடுக்கப்படலாம்

3) இளவயது திருமணங்கள் ஊக்குவிக்கப்படல் வேண்டும் ( பெண்கள் 24-28 வயதுக்குள் கற்பமடைய வேண்டும்) இது ஆரோக்கியமான இளம் சமூகத்தை உருவாக்கும்.

 

இந்த மூன்றும் அடுத்த 20 வருடங்களுக்கு மிகச் சிறப்பாக நடைபெறும் படசத்தில் நாட்டுப் பிரச்சனை தானாகவே தீர்ந்து விடும் 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.