Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் டென்மார்க்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் டென்மார்க்

KaviFeb 27, 2023 06:39AM
kkakhf.jpg

உக்ரைனுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக டென்மார்க் ராணுவ மந்திரி கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தப் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் விமானங்களை வழங்க தயக்கம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் உக்ரைனுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி டிரோல்ஸ் லண்ட் பால்சன், “உக்ரைன்-ரஷ்யா போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பை கவனிக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது.

எனவே உக்ரைனின் தற்காப்புக்கு உதவ எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க டென்மார்க் அரசு தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

எஃப் 16 போர் விமானம் ஒற்றை இருக்கை, ஒற்றை எஞ்சின் கொண்ட ஜெட் விமானம். ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கக்கூடியது மற்றும் பலவிதமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://minnambalam.com/india-news/denmark-open-to-delivering-f16-fighter-jets-to-ukraine/

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்கள் உலகுக்கு தேவையான முடிவுகளை அவசரமாக சரியான நேரத்தில் எடுக்கணும். அதுவே இன்றைய தேவை. வாழ்த்துக்கள் டென்மார்க் அரசுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

G20 தலைமை பொறுப்பை எடுத்திருக்கின்ற இந்தியாவும் தனது சந்தர்பவாதத்தை கைவிட்டு பொறுப்பை உணர்ந்து ரஷ்யாவை கண்டிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, விசுகு said:

தலைவர்கள் உலகுக்கு தேவையான முடிவுகளை அவசரமாக சரியான நேரத்தில் எடுக்கணும். அதுவே இன்றைய தேவை. வாழ்த்துக்கள் டென்மார்க் அரசுக்கு. 

இதையே தலைவர் பிரபாகரனும் அன்றைய இன்றைய தமிழ் தலைவர்களும் 2009ற்கு முன் எடுத்திருந்தால் ஈழத்தமிழ் மக்கள் இவ்வளவு அல்லோலப்பட்டிருக்க மாட்டார்கள்.

பிராந்திய அரசியலுக்கும் இந்திய இறையாண்மைக்கும் பாதிப்பு வரக்கூடாது என நினைத்ததில் தவறு உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

G20 தலைமை பொறுப்பை எடுத்திருக்கின்ற இந்தியாவும் தனது சந்தர்பவாதத்தை கைவிட்டு பொறுப்பை உணர்ந்து ரஷ்யாவை கண்டிக்க வேண்டும்.

இது ந‌ட‌க்க‌ வாய்ப்பே இல்லை...................

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

இதையே தலைவர் பிரபாகரனும் அன்றைய இன்றைய தமிழ் தலைவர்களும் 2009ற்கு முன் எடுத்திருந்தால் ஈழத்தமிழ் மக்கள் இவ்வளவு அல்லோலப்பட்டிருக்க மாட்டார்கள்.

பிராந்திய அரசியலுக்கும் இந்திய இறையாண்மைக்கும் பாதிப்பு வரக்கூடாது என நினைத்ததில் தவறு உண்டா?

வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ க‌ருத்து தாத்தா.............14ஆண்டு ஆக‌ போகுது இதுவ‌ரை ஒற்றுமையா நின்று ஒன்றையும் சாதிக்க‌ வில்லை..............எல்லாம் வாய் சொல் வீர‌ர்க‌ள்.................த‌லைவ‌ர் ம‌ட்டும் தான் செய‌லில் செய்யுது விட்டு சொல்லுற‌வ‌ர்....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, பையன்26 said:

வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ க‌ருத்து தாத்தா.............14ஆண்டு ஆக‌ போகுது இதுவ‌ரை ஒற்றுமையா நின்று ஒன்றையும் சாதிக்க‌ வில்லை..............எல்லாம் வாய் சொல் வீர‌ர்க‌ள்.................த‌லைவ‌ர் ம‌ட்டும் தான் செய‌லில் செய்யுது விட்டு சொல்லுற‌வ‌ர்....................

அப்பன்! சர்வதேசத்திடமிருந்து  இன்றுவரை எவ்வித மனிதாபிமான சமிக்கைகளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இனம் என்றால் அது ஈழத்தமிழினம் மட்டும் தான். அந்த ஈழத்தமிழினம் உக்ரேனுக்காக இரத்தக்கண்ணீர் வடிக்கணுமாம். :hurra:

உக்ரேனுக்கு என்ன பிரச்சனை எண்டு உக்ரேனுக்கே தெரியாது......இதுக்குள்ளை மரியாப்போல் முள்ளிவாய்க்கால் சித்திர விசித்திரங்கள்.:face_savoring_food:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இதையே தலைவர் பிரபாகரனும் அன்றைய இன்றைய தமிழ் தலைவர்களும் 2009ற்கு முன் எடுத்திருந்தால் ஈழத்தமிழ் மக்கள் இவ்வளவு அல்லோலப்பட்டிருக்க மாட்டார்கள்.

பிராந்திய அரசியலுக்கும் இந்திய இறையாண்மைக்கும் பாதிப்பு வரக்கூடாது என நினைத்ததில் தவறு உண்டா?

 

14 hours ago, குமாரசாமி said:

இதையே தலைவர் பிரபாகரனும் அன்றைய இன்றைய தமிழ் தலைவர்களும் 2009ற்கு முன் எடுத்திருந்தால் ஈழத்தமிழ் மக்கள் இவ்வளவு அல்லோலப்பட்டிருக்க மாட்டார்கள்.

பிராந்திய அரசியலுக்கும் இந்திய இறையாண்மைக்கும் பாதிப்பு வரக்கூடாது என நினைத்ததில் தவறு உண்டா?

 

அண்ணா

எமது  போராட்டம் வேறு  தளம்

உக்ரேன் வேறு தளம்

இரண்டையும்  நான் கலப்பதில்லை நீங்களம்  கலக்காதீர்கள்  என நீங்கள் சொன்னதிலிருந்து

நான்  அதை கலப்பதை  நிறுத்திவிட்டேன்

இன்று ராமா நீயுமா என கேட்கத்தோன்றுகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, விசுகு said:

அண்ணா

எமது  போராட்டம் வேறு  தளம்

உக்ரேன் வேறு தளம்

இரண்டையும்  நான் கலப்பதில்லை நீங்களம்  கலக்காதீர்கள்  என நீங்கள் சொன்னதிலிருந்து

நான்  அதை கலப்பதை  நிறுத்திவிட்டேன்

இன்று ராமா நீயுமா என கேட்கத்தோன்றுகிறது?

நான் அதையும் இதையும் கலக்கவில்லை. உலகில் பிராந்திய அரசியல் ஒன்று உள்ளது என்பதை ஏற்கின்றீர்களா இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.