Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலஸ்தீன சிறுவன் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன சிறுவன் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொலை

 
 
coltkn-03-04-fr-13153843349_11183512_030

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினரால் 15 வயது பலஸ்தீன சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (02) பின்னேரம் அஸ்ஸும் நகருக்குள் இஸ்ரேலிய இராணுவ வாகனம் ஒன்று நுழைந்தபோது இளைஞர்கள் அதன்மீது கல் எறிந்ததற்கு பதிலடியாக இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று அந்த மேற்குக் கரை நகர மேயர் அஹமது எனாயா தெரிவித்துள்ளார்.

“ஆக்கிரமிப்பு (இஸ்ரேல்) படையினரால் அந்த சிறுவனின் பின்புறம் சூடு நடத்தப்பட்ட நிலையில் அவன் கொல்லப்பட்டான்” என்று பலஸ்தீன சுகாதார அமைச்சர் முஹமது நிதால் சலிம் தெரிவித்துள்ளார்.

 

இதன்போது குழந்தை உட்பட இருவர் காயமடைந்திருப்பதோடு குழந்தையின் நிலை மோசமாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்ஸுமுக்கு அருகால் கடந்து செல்லும் இஸ்ரேலிய வாகனங்கள் மீது பட்டாசுகளை வீசுவது பற்றி தேடுதலை நடத்தி வந்த இஸ்ரேலிய படையினர் மீது வெடிபொருட்களை வீசிய சந்தேக நபர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படையினர் நாளாந்தம் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் பலஸ்தீனர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ள சூழலில் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

https://www.thinakaran.lk/2023/03/04/வெளிநாடு/96333/பலஸ்தீன-சிறுவன்-இஸ்ரேல்-படையினரால்-சுட்டுக்கொலை

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் உதவியுடன் எத்தனை பேரை சுட்டு கொன்றார்கள் இந்த பாவிகள், இதை கண்டிப்பார்கள் உண்டா இந்த உக்ரைனுக்கு கண்ணீர் வடிப்பவர்கள், கபட தாரிகள் நிறைந்த உலகமிது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அமெரிக்காவின் உதவியுடன் எத்தனை பேரை சுட்டு கொன்றார்கள் இந்த பாவிகள், இதை கண்டிப்பார்கள் உண்டா இந்த உக்ரைனுக்கு கண்ணீர் வடிப்பவர்கள், கபட தாரிகள் நிறைந்த உலகமிது

உண்மை. அமெரிக்கா இதுபற்றி வாய்திறக்காது. சிலவேளை ரஸ்ஸியாவும் இஸ்ரேலியர்களும் ஒன்றிணைந்தால் அமெரிக்காவே பாலஸ்த்தீனர்களுக்கு ஆயுதமும் அங்கீகாரமும் வழங்கும். ஆனால், இதில் எதுவுமே சாத்தியமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, உடையார் said:

அமெரிக்காவின் உதவியுடன் எத்தனை பேரை சுட்டு கொன்றார்கள் இந்த பாவிகள், இதை கண்டிப்பார்கள் உண்டா இந்த உக்ரைனுக்கு கண்ணீர் வடிப்பவர்கள், கபட தாரிகள் நிறைந்த உலகமிது

ஒரு வேளை உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தைக்கு இணங்கினாலும் எம் இன மேற்குலகத்தவர் சம்மதிக்க மாட்டார்கள். :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2023 at 12:33, உடையார் said:

அமெரிக்காவின் உதவியுடன் எத்தனை பேரை சுட்டு கொன்றார்கள் இந்த பாவிகள், இதை கண்டிப்பார்கள் உண்டா இந்த உக்ரைனுக்கு கண்ணீர் வடிப்பவர்கள், கபட தாரிகள் நிறைந்த உலகமிது

உக்ரேனுக்காக யாரும் கண்ணீர் வடிப்பதாக  இங்கே நான் காணவில்லை

ரசியாவின் ஆக்கிரமிப்பை

நாமும் ஆக்கிரமிப்புக்கு ஆளான  ஒரு  இனம் என்ற ரீதியில்  கண்டிக்கிறார்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

உக்ரேனுக்காக யாரும் கண்ணீர் வடிப்பதாக  இங்கே நான் காணவில்லை

ரசியாவின் ஆக்கிரமிப்பை

நாமும் ஆக்கிரமிப்புக்கு ஆளான  ஒரு  இனம் என்ற ரீதியில்  கண்டிக்கிறார்கள்

நாமும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றோம். ஆக்கிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். எதுவுமே மறுப்பதற்கில்லை. உயிர் உடமைகள் அழிவுகளும் ஏற்புடையதல்ல. அது எமக்கும் உக்ரேனுக்கும் பொருந்தும்.
இருப்பினும்...
நாடுகளுக்கிடையிலான அத்துமீறல்களும் ஆக்கிரமிப்புகளுக்கும் உக்ரேன் முன்னுதாரணம் அல்லவே. உக்ரேனை விட இன்னும் எத்தனையோ நாடுகளும் நிலங்களும் இனங்களும் வல்லாதிக்கங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனவே? அவை பற்றி எப்போவாவது கவலைப்பட்டுள்ளீர்களா? அல்லது ஆதரவு கருத்துக்களையாவது எழுதியிருக்கின்றீர்களா?
நிற்க...
உக்ரேன் மீதான யுத்தம்  ஒருவகை ஆதிக்க யுத்தம். இதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

நாமும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றோம். ஆக்கிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். எதுவுமே மறுப்பதற்கில்லை. உயிர் உடமைகள் அழிவுகளும் ஏற்புடையதல்ல. அது எமக்கும் உக்ரேனுக்கும் பொருந்தும்.
இருப்பினும்...
நாடுகளுக்கிடையிலான அத்துமீறல்களும் ஆக்கிரமிப்புகளுக்கும் உக்ரேன் முன்னுதாரணம் அல்லவே. உக்ரேனை விட இன்னும் எத்தனையோ நாடுகளும் நிலங்களும் இனங்களும் வல்லாதிக்கங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனவே?

1-அவை பற்றி எப்போவாவது கவலைப்பட்டுள்ளீர்களா? அல்லது ஆதரவு கருத்துக்களையாவது எழுதியிருக்கின்றீர்களா?
நிற்க...
2 - உக்ரேன் மீதான யுத்தம்  ஒருவகை ஆதிக்க யுத்தம். இதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றீர்கள்?

1 - அனைத்து விதமான ஆக்கிரமிப்பு யுத்தங்களையும் வெறுக்கிறேன் கண்டித்திருக்கிறேன் ஆக்கிரமப்புக்குள்ளான மக்களுடன் அவர்களுக்கு சார்பாக அவர்களது ஊர்வலங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். 

2- ஆம் அது ஆதிக்க யுத்தம் தான். அதனால் தான் இப்போரை ஆரம்பத்திலிருந்து கண்டிக்கிறேன். ரசியா தன் நிலைக்கு பின் வாங்க வேண்டும் என்பதே எல்லோரையும் போல எனது வேண்டுகோளும். 

ஒரு போதும் ஆதிக்கவாதிகளை பூசிக்கமாட்டேன் நான். 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

1 - அனைத்து விதமான ஆக்கிரமிப்பு யுத்தங்களையும் வெறுக்கிறேன் கண்டித்திருக்கிறேன் ஆக்கிரமப்புக்குள்ளான மக்களுடன் அவர்களுக்கு சார்பாக அவர்களது ஊர்வலங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். 

2- ஆம் அது ஆதிக்க யுத்தம் தான். அதனால் தான் இப்போரை ஆரம்பத்திலிருந்து கண்டிக்கிறேன். ரசியா தன் நிலைக்கு பின் வாங்க வேண்டும் என்பதே எல்லோரையும் போல எனது வேண்டுகோளும். 

ஒரு போதும் ஆதிக்கவாதிகளை பூசிக்கமாட்டேன் நான். 

மேற்குலகும் தேன் கலந்த கசப்பான ஆதிக்கவாதிகள் தான். சுதந்திரம் ஜனநாயகம் எனும் பெயரில்  ஒரு வகையான ஆதிக்கவாதிகள்.

சர்வாதிகாரத்தை அழிக்கின்றோம் என கூறி ஈராக்கிலும் லிபியாவிலும் எதை சாதித்தார்கள்? எதை நிலை நாட்டினார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலியப் படையினரால் பலஸ்தீனியர்கள் மூவர் சுட்டுக்கொலை 

Published By: SETHU

09 MAR, 2023 | 12:08 PM
image

இஸ்ரேலிய படையினரால் பாலஸ்தீனர்கள் மூவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பிராந்தியத்தின் ஜெப்பா நகரில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இட்டமார் பென் க்விர் இது தொடர்பாக கூறுகையில், 'பயங்கரவாதிகள் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்' எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/150060

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.