Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் ஜனாதிபதியாக 3 ஆவது தடவையாக ஸீ ஜின்பிங் தெரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

அவை பொது நோக்குக்காகவா? அல்லது தனி மனித முன்னேற்றதுக்காகவா?

தமிழினம் உய்ய நீங்கள் வெளிநாடு வரவில்லைதானே அண்ணை.

 

தமிழினம் உய்ய வெளிநாடு வந்தவர் யார்?
அப்படி வெளிநாடு வந்தவன் தான் தன் இனத்திற்கு தன் மண்ணிற்கு எதுவுமே செய்யாதிருந்திருந்தால்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

என்றும் எழுதினார்கள் என்று சப்பை கட்டு கட்டாமல் முகாபே பச்சை நிறமாகவே இருக்கட்டும். 30 வருடத்துத்து மேலாக ஆட்சி செய்தவரை பற்றி எழுதாமல் யாரோ மேற்கு ஊடகத்துக்கு அடி பணிந்து எழுதுவது போலுள்ளது.

மன்னர் ஆட்சி என்று என்று  கூட இருக்கும்  ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஆட்சி பற்றி குறிப்பிட ஏன் நாணி  கோணி ஆகுறீர்கள்.

மற்றது நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்காத பட்டத்தையா  உங்களுக்கு அளித்து விட்டார்கள்??🙃

முகாபே பற்றிய திரிகளில் அவரை பற்றி எழுதி உள்ளேன்.

பிரித்தானிய அரச வம்சத்தை யாழில் நாறடித்து எழுதியது மட்டும் இல்லாமல் காலத்துக்கு ஒவ்வாத இந்த முறையை பிரிட்டனும் பொது நலவாயநாடுகளும் தூக்கி எறிய வேண்டும் என்றும் எழுதி உள்ளேன்.

தேடிப்பார்த்தால் புரியும்.

அண்ணா யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம் தவிர வேறு எந்த பட்டம் தந்தாலும் எனக்கு சந்தோசமே. ஆனால் இங்கே குழுநிலை வாத அணுகுமுறையை யார் தொடங்கினார்கள் என்பதை பற்றியே சொல்லியுள்ளேன்.

5 minutes ago, குமாரசாமி said:

தமிழினம் உய்ய வெளிநாடு வந்தவர் யார்?
அப்படி வெளிநாடு வந்தவன் தான் தன் இனத்திற்கு தன் மண்ணிற்கு எதுவுமே செய்யாதிருந்திருந்தால்?

எவரும் இல்லை. ஊரில் போராடப்போகாமல் போரை சகித்தவனும், வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பினவரும் கூட போராட போனவர்கள் முன் தூசிக்கு சமம்.

ஆனால் இங்கே சொன்னது - பொது நன்மைக்காக பொருளாதார இழப்பை சகிப்பது புதிதல்ல என்பதை.

  • கருத்துக்கள உறவுகள்

வாதம் இதை விட பலமானதாக போனதை அவதானித்துள்ளேன். குழு நிலை விவாதம் பற்றி நான் அவதானித்ததை மட்டும் உங்களிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளேன். நேரடி என்பது என் குறியீடு.  நீங்கள் கோவப்பட்டாலும் நீங்கள் நிதானம் அடையும் போது உங்களை நீங்கள் செம்மை படுத்திக்கொள்வீர்கள்.நன்றி.

4 minutes ago, goshan_che said:

அண்ணா யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம் தவிர வேறு எந்த பட்டம் தந்தாலும் எனக்கு சந்தோசமே. ஆனால் இங்கே குழுநிலை வாத அணுகுமுறையை யார் தொடங்கினார்கள் என்பதை பற்றியே சொல்லியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

வாதம் இதை விட பலமானதாக போனதை அவதானித்துள்ளேன். குழு நிலை விவாதம் பற்றி நான் அவதானித்ததை மட்டும் உங்களிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளேன். நேரடி என்பது என் குறியீடு.  நீங்கள் கோவப்பட்டாலும் நீங்கள் நிதானம் அடையும் போது உங்களை நீங்கள் செம்மை படுத்திக்கொள்வீர்கள்.நன்றி.

நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

முகாபே பற்றிய திரிகளில் அவரை பற்றி எழுதி உள்ளேன்.

பிரித்தானிய அரச வம்சத்தை யாழில் நாறடித்து எழுதியது மட்டும் இல்லாமல் காலத்துக்கு ஒவ்வாத இந்த முறையை பிரிட்டனும் பொது நலவாயநாடுகளும் தூக்கி எறிய வேண்டும் என்றும் எழுதி உள்ளேன்.

தேடிப்பார்த்தால் புரியும்.

உங்களை நேரடியாக குறிப்பிட்டு  நான் கருத்து எழுதவில்லை. என்றாலும் நேரமெடுத்து கருத்து எழுதியமைக்கு நன்றி

ஈராக்கில் சதாமை தனது தேவைக்காக சதாமை பாவித்து விட்டு கடைசியில்  அவரை கொன்று தனது கொலைவெறியை காட்டியவர்களை ஜனநாயகவாதிகள் என அழைப்பதில் என்ன பெருமை உள்ளது?

சதாமை தூக்கி எறிவதும் விடுவதும் ஈராக்கிய மக்களின் பிரச்சனை. வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

உங்களை நேரடியாக குறிப்பிட்டு  நான் கருத்து எழுதவில்லை. என்றாலும் நேரமெடுத்து கருத்து எழுதியமைக்கு நன்றி

ஈராக்கில் சதாமை தனது தேவைக்காக சதாமை பாவித்து விட்டு கடைசியில்  அவரை கொன்று தனது கொலைவெறியை காட்டியவர்களை ஜனநாயகவாதிகள் என அழைப்பதில் என்ன பெருமை உள்ளது?

சதாமை தூக்கி எறிவதும் விடுவதும் ஈராக்கிய மக்களின் பிரச்சனை. வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை.

நான் என் அளவில்தான் பதில் சொல்ல முடியும்.

அதே போல் நீங்கள் எவரும் முகாபே பற்றி கதைக்கவில்லை என பொதுபடையாக கூறவும் முடியாது.

1ம் ஈராக் யுத்தம் தேவையானது.

2ம் ஈராக் யுத்தம் தேவையற்றது என முன்பே எழுதி உள்ளேன். அதை எதிர்த்து லண்டனில் ஊர்வலம் போன 1 மில்லியனில் நானும் இணைந்திருந்தேன்.

நான் போர்களில் என் ஆதரவு நிலைப்பட்டை எப்போதும் மேற்கின் பக்கம் கண்மூடிதனமாக வைப்பவன் அல்ல, தரப்புகளின் தார்மீக நியாயம், என் தனி மனித நலன், இன நலன் என பலதை ஆலோசித்தே முடிவு செய்வேன்.

இங்கே கருத்து எழுதும் பலரும் அப்படித்தான் என்றே நினைக்கிறேன்.

மேற்கு எமக்கு செய்ததை மறந்து மேற்குக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கும் அடிமை புத்தி உள்ள ஈனர்கள் என எந்த யாழ் கள உறவையும் நான் குறை மதிப்பிடு செய்யவில்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

ஆனால் இங்கே சொன்னது - பொது நன்மைக்காக பொருளாதார இழப்பை சகிப்பது புதிதல்ல என்பதை.

நங்களும் எங்களுக்கு முந்திய சந்ததியும் இயற்கை வலுவை கொண்டு முன்னேறிவவர்கள்.
உங்கள் சந்ததியை போல் ஜிம்முக்கு போய் உடலமைப்பை கட்டுக்கோப்பாய் வைத்திருந்தவர்கள் அல்லர்.
எமது சந்ததிக்கும் பல சகிப்புத்தன்மைகள் வந்து போயிருக்கின்றது.
நீங்கள்  மட்டும் பிரத்தியேகமானவர்கள் அல்ல.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ஜனாதிபதி ஸீ ஜின்பிங், 3 ஆவது தடவையாகவும்   வரக்கூடாது  என்பதற்கான கையெழுத்து வேட்டை  பிரான்சில்  நடந்ததை  பார்த்தேன்

எனவே  சீனாவுக்குள்ளும்  வெளியிலும்  அவருக்கு  எதிர்ப்புக்கள் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

சீன அதிபரின் முயற்சியால் இந்த போர் முடிவுக்கு வர உள்ளதா? பெரும்பாலோனோர் இந்தியாவின் அனுசரணை மூலம் போர் முடிவுக்கு வரலாம் என எண்ணியிருக்க சீனா முந்திக்கொள்வது போல் உள்ளது.

போரின் முடிவுக்கு வந்த பின் உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி அமெரிக்காவில் குடியேறுவார் என கருதுகிறேன், அண்மையில் உக்கிரேன் அதிபரின் மனைவி மத்திய கிழக்கிற்கு சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

4 hours ago, விசுகு said:

சீனாவின் ஜனாதிபதி ஸீ ஜின்பிங், 3 ஆவது தடவையாகவும்   வரக்கூடாது  என்பதற்கான கையெழுத்து வேட்டை  பிரான்சில்  நடந்ததை  பார்த்தேன்

எனவே  சீனாவுக்குள்ளும்  வெளியிலும்  அவருக்கு  எதிர்ப்புக்கள் உண்டு

சீன அதிபர் இந்த சமாதான முயற்சியில் ஈடுபடுவார் என கருதுகிறீர்களா? உக்கிரேன் போர் முடிவுக்கு வந்த பின் உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்தும் உக்கிரேனில் இருப்பார் என கருதுகிறீர்களா? அவ்வாறில்லாது புலம்பெயருவாராயின் எந்த நாட்டிற்கு புலம் பெயர்ய்வார் என கருதுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

 

38 minutes ago, vasee said:

சீன அதிபரின் முயற்சியால் இந்த போர் முடிவுக்கு வர உள்ளதா? பெரும்பாலோனோர் இந்தியாவின் அனுசரணை மூலம் போர் முடிவுக்கு வரலாம் என எண்ணியிருக்க சீனா முந்திக்கொள்வது போல் உள்ளது.

போரின் முடிவுக்கு வந்த பின் உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி அமெரிக்காவில் குடியேறுவார் என கருதுகிறேன், அண்மையில் உக்கிரேன் அதிபரின் மனைவி மத்திய கிழக்கிற்கு சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

சீன அதிபர் இந்த சமாதான முயற்சியில் ஈடுபடுவார் என கருதுகிறீர்களா? உக்கிரேன் போர் முடிவுக்கு வந்த பின் உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்தும் உக்கிரேனில் இருப்பார் என கருதுகிறீர்களா? அவ்வாறில்லாது புலம்பெயருவாராயின் எந்த நாட்டிற்கு புலம் பெயர்ய்வார் என கருதுகிறீர்கள்?

 

முதலில் போர் முடிவுக்கு வரணும்?

 

அடுத்தது உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி உயிருடன் இருக்கணும்

 

அப்படி இருந்தால் அவர் தான் அந்த நாட்டின் தலைசிறந்த தலைவராக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவார். அப்புறம் எதுக்கு இடம் பெயரணும்??

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

சீனாவின் ஜனாதிபதி ஸீ ஜின்பிங், 3 ஆவது தடவையாகவும்   வரக்கூடாது  என்பதற்கான கையெழுத்து வேட்டை  பிரான்சில்  நடந்ததை  பார்த்தேன்

எனவே  சீனாவுக்குள்ளும்  வெளியிலும்  அவருக்கு  எதிர்ப்புக்கள் உண்டு

சீனாவுக்குள்ளே எதிர்ப்பு காட்டினால் ராங்கிகள் கொண்டு நசுக்கிவிடுவார்கள், அல்லது காணாமல் ஆக்கபடுவார்கள் சிறைகளில் அடைக்கபடுவார்கள்.சீனாவுக்கு வெளியில் தானே அவர்கள் எதிர்ப்புகள் காட்ட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

இன்ப நிதிக்கு அடுத்து துன்ப நிதி வந்தாலும் அது தேர்தல் மூலம்

சரியாகச் சொன்னீர்கள்.  இன்புநிதி வந்தாலும் அது தமிழக மக்கள் தெரிவு செய்து தான் வரமுடியும்.  நான் அறிந்தேன் யேர்மன் அதிபர் Merkel 4 தடவைகள் அதிபராக மக்கள் அவர் கட்சியை தெரிவு செய்து வந்துள்ளார்.இந்த சீன சர்வாதிகாரி ஜின்பிங் வந்த  மாதிரி அல்ல அது. சுதந்திர நாட்டில் சுதந்திரத்தில் மிதக்கும் போது அதன்  மதிப்பு தெரிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

 

 

முதலில் போர் முடிவுக்கு வரணும்?

 

அடுத்தது உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி உயிருடன் இருக்கணும்

 

அப்படி இருந்தால் அவர் தான் அந்த நாட்டின் தலைசிறந்த தலைவராக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவார். அப்புறம் எதுக்கு இடம் பெயரணும்??

போர் கட்டாயம் முடிவுக்கு வரும்

இந்த போர் தொடரவேண்டும் என நினைக்கும் தரப்புகளுக்கு தேவையான விடயங்கள் நடந்தேறிய பின் இந்த போர் தானாகவே நின்றுவிடும்.

ஒரு நாடு தனது சாம்ராஜ்ஜித்தினை பேணுவதற்கு சிறந்த பொருளாதார கட்டமைப்பு (பாதுகாப்பு செலவிற்கு தேவையான காசு), அதனை உறுதிப்படுத்த உறுதியான அரசியல் கட்டமைப்பு (நீதி - ஆட்சி முறைமை) வேண்டும்.

பொருளாதார தளம்பல் ஏற்படும்போது (பொருளாதாரம் = வலு) சாம்ராஜ்ஜியம் தளம்பலடையும்.

ஆசிய, ஐரோப்பிய பொருளாதார எழுச்சி தற்போதய ஏகாதிபத்திய சாம்ராஜ்ஜிய பொருளாதாரத்தினை ஆட்டங்காண வைத்துள்ள நிலையில் ஒரு பதில் நடவடிக்கை தேவையாக உள்ளது.

ஏனென்றால் பொருளாதார ஏகாதிபத்தியமும் ஒரு zero sum game தான்.

ஐரோப்பிய நாடுகளும் அதன் பொருண்மியமும் தற்போதுள்ள பொருண்மியத்திற்கு சவால் விடும் நிலையில் இருந்து சரிய ஆரம்பித்துள்ளது.

அதனால் இந்த போரிற்கான தேவை முடிவுக்கு வரவுள்ளதாக கருதுகிறேன்.

செலன்ஸ்கி நடுத்தர வயதுடைய தேக ஆரோக்கியமான  நபர், அதனால் இயற்கை எய்தமாட்டார்,  இரஸ்சியாவோ, அமெரிக்காவோ அவரை கொல்லமாட்டார்கள் என கருதுகிறேன் ஏனெனில் அவர் ஒரு கருவி மட்டுமே.

போர் ஆரம்பித்த காலத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தால் உக்கிரேன்  நாடு மேலதிகமாக நிலங்களை இழக்காமல் ஒரு உடன்படிக்கைக்கு வந்திருப்பார்கள், தற்போது இவ்வளவு இழப்பிற்கு பின்னர் அதே உடன்படிக்கையினை ஏற்றால் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிவரும்.

அண்மையில் இஸ்ரேலிய முன்னால் அதிபர் கூறியுள்ளார் அமெரிக்கா போரின் ஆரம்பத்தில் ஏற்படுத்த முயன்ற அமைதி முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது என.

இந்த கருத்து வெளிவருவதற்கு முன்னர் இங்கு யாழ்களத்திலேயே அதன் சாத்திய கூறினை கூறப்பட்டுள்ளது, ஒரு நாட்டதிபரினால் இதனை கூடவா உணரமுடியாது?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.