Jump to content

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட தொகையில் இந்தியக் கடன் செலுத்தப்பட்டது - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட தொகையில் இந்தியக் கடன் செலுத்தப்பட்டது - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

Published By: T. SARANYA

25 MAR, 2023 | 12:45 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதற்கட்டமாகப் பெற்றுக் கொண்ட 330 மில்லியன் டொலரில் , 121 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தின் முதற் தவணையை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

இவ்வாறு கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளமையானது , கடன் ஸ்திரத்தன்மையை பேணுவதற் உதவுவதோடு , எமக்கு உதவிய நாடுகளின் நம்பிக்கையை காப்பாற்றுவதில் சாதகமான தாக்கத்தை செலுத்தும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஏனைய சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி பெற்றுக் கொள்ளப்பட்டால் அது மத்திய வங்கியின் கையிருப்பில் காணப்படும்.

எவ்வாறிருப்பினும் இம்முறை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகையை விசேட தேவைகளுக்காக பயன்படுத்த முடியும். கடந்த வியாழனன்று முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றது.

இதனை செலவிடும் போது மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்ட வேண்டியுள்ளது.

கடன் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக இக்கடன் தொகையைப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம். கடந்த காலங்களில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாம் பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொண்டோம்.

அதற்கமைய இந்தியாவிற்கு செலுத்த வேண்டியுள்ள கடன் தொகையில் முதற்கட்டமாக 121 மில்லியன் மீள செலுத்தப்பட்டுள்ளது.

இனிவரும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் , எமக்கு உதவிய நாடுகளின் நம்பிக்கையை காப்பாற்றுதல் என்வற்றில் இது தாக்கம் செலுத்துகிறது.

நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை விருப்பத்தினைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

இதன் போது சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவும் , வாக்கெடுப்பில் பங்குபற்றவும் முடியும்.

தற்போதைய சூழலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஏற்றுக்கொண்ட ஒரு விடயத்தை , தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பார்களானால் மிக இலகுவாக எதிர்க்கட்சிகளால் வரலாற்றில் இடம்பிடிக்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/151367

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இடத்தில் கடன் வாங்கி பழைய கடன்காரனுக்கு கடணை  வட்டியுடன் கட்டுவதுக்கா  வெடி போட்டு கொண்டாடினவங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

121 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தின் முதற் தவணையை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

நிதி ராஜாங்க அமைச்சர் மானஸ்தன்! எவ்வளவு பெருமை அவருக்கு, ஒருவரிடம் கடன் வாங்கி  இன்னொருவரின் கடன் அடைப்பது, இது என்ன சாதாரண விடயமா? ஆனால் வட்டி குட்டி போடும் என்பது இவருக்கு தெரியலையே.

3 hours ago, ஏராளன் said:

எவ்வாறிருப்பினும் இம்முறை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகையை விசேட தேவைகளுக்காக பயன்படுத்த முடியும்.

அப்படி என்ன விசேட தேவை நாட்டில் இப்போ? தமிழர் பிரதேசங்களில் விகாரை கட்டுவது? இராணுவ முகாம்களை பலப்படுத்துவது? தமிழரின் நிலங்களை அபகரிப்பது? தமிழரை இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிவதற்கு எந்தப்பேயோடும் கூட்டுச்சேர்வார்கள். சொன்னார்கள் செய்தும் காட்டுகிறார்கள்.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, satan said:

நிதி ராஜாங்க அமைச்சர் மானஸ்தன்! எவ்வளவு பெருமை அவருக்கு, ஒருவரிடம் கடன் வாங்கி  இன்னொருவரின் கடன் அடைப்பது, இது என்ன சாதாரண விடயமா? ஆனால் வட்டி குட்டி போடும் என்பது இவருக்கு தெரியலையே.

அப்படி என்ன விசேட தேவை நாட்டில் இப்போ? தமிழர் பிரதேசங்களில் விகாரை கட்டுவது? இராணுவ முகாம்களை பலப்படுத்துவது? தமிழரின் நிலங்களை அபகரிப்பது? தமிழரை இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிவதற்கு எந்தப்பேயோடும் கூட்டுச்சேர்வார்கள். சொன்னார்கள் செய்தும் காட்டுகிறார்கள்.      

நீங்கள் வேற இவங்கள் கடன் வாங்கின கையோட ஒரு கப்பல் முழுக்க முட்டையை இந்தியாவில இருந்து இறக்கினவையள் போன கிழமை. இந்தக் கூழ் முட்டைகள் பொறுத்ததுதான் பொறுத்தம் முட்டையை ஒரு இரண்டு மூன்று மாதம் சாப்பிடாமல் விட்டுட்டு கோழித்தீவனத்தை இறக்கியிருந்தால் உள்ளூரிலையே முட்டையை உற்பத்தி பண்ணியிருக்கலாம்.

கடன் கிடைத்ததும் மருதானையில வெடி கொளுத்திக் கொண்டாடுவதும் தமிழரை அழித்தது கிரிபத்  கொடுத்துக் கொண்டாடுவதும் இவர்களுக்கு வழக்கமாகிப்போயிட்டுது.

கொரோணா காலத்தில ஐரோப்பிய ஒன்றியத்திடம் நான் வாழும் நாடு இரண்டு பில்லியன் யூரோக்களைக் கடனாகப் பெற்றது அதிப் பெற்றுக்கொள்ளமுதல் நாடாளுமன்றத்தில ஒரு பிரேரணை கொண்டுவந்து வாங்களா இல்லையா பின்பு எப்படிக் கொடுப்பது இவைகளை விவாதித்து கடைசியில ஒவ்வொறு இந்த நாட்டுப் பிரஜையிடமுமிருந்தும் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு வருடாவருடம் நூத்திநாற்பத்து ஏழு யூரோக்களை வரி அறவிடும்போது சேர்த்தெ அறவுவம்படி சட்டம் இயற்றி இப்போ வருடாவருடம் அந்தக் காசை நானும் சேர்த்துக் அழுதுகொண்டு இருக்கிறோம்.

அதாலதான் பின்லாந்து நாடு உலகில் மகிழ்ச்சியான நாடாக இருக்கு காரணம் இந்த நாட்டின் உயர்விலும் தாழ்விலும் நானும் பங்குகொள்கிறேன் எனும் மனப்பாங்கு ஒவ்வொரு பின்லாந்துப் பிரஜையிடமும் இருப்பது மகிழ்சியாக இருப்பதற்கான பல காரணங்களில் ஒரு காரணமாகும்.

ஆனால் எனது ஒண்ணுவிட்ட சகோதரம் ஊரில திண்ணைக்கு மண் எடுத்துக்கொண்டு இருக்கு ஒருக்கால் மல்லாகப்பக்கம் போய் காணி வீடு வளவைப் பார் அங்க என்ன நடக்குது என ஒருக்கால் சொல்லு எண்டால் எனக்கு நேரமில்லை தவிர என்னால கனதூரத்துக்குப் போகமுடியாது என யாழ் நகர்ப்பகுதியிலிருந்து சொல்லுது. அடுத மாதத்தில இருந்து காசை நிப்பாட்டவேண்டும்.

நான் பத்துச் சென்ரிக்கு இனிப்பு வாங்கினாலும் ஒன்று தசம் நாஙு சென்ரி வரியை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டுத்தான் இனிப்பை வாயில போடவேண்டும் ஆனால் அரச அலுவலகங்களில் வேலை செய்வோர் வரு உயர்வுக்கு வழக்குப்போடுகிறார்கள்.

இந்த விறுத்தத்தில் கிழக்காசியாவிலேயே இறுகமான ஊழல் மோசடிக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவாரன் என ரணில் கூறுகிறார் சட்டம் கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது அதே ஊழலில் ஊறிய அதிகாரிகள்தான் என்பதை வர் மறந்திட்டார்.

இந்தக் கெடுதியில தமிழர்களுக்கான உரிமைபற்றிப் பேச நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கூட்டமைப்பினர் இப்போ உள்ளூராட்சி தேர்தலை நடாத்துஙோ என ஊளையிடுகினம் இவர்களது யோக்கியதை தெரிந்துதான் ரணில் உள்ளூராட்சி தேர்தல் எனும் எலும்புத்துண்டை விட்டெறிய அதை நக்குவதற்கு கூட்டமைப்பு குரத்து ஒண்டுக்குமேல ஒண்டு கடித்து இரத்தம் வடிய புறுஞ்சுபோய் கிடக்குதுகள் ஆக ரணில் இவர்களைப் பிறிக்கவேணும் என நினைத்து எலும்புத்துண்டை எறிந்தவுடன் தமிழர் உரிமை எனும் துடை இறைச்சியை இவர்கள் மறந்துபோய் இப்போ அடிபட்டு பின்னங்காலைத் துக்கிக்கொண்டு அலையினம்.

தமிழர் அரசியல்வாதிகளுக்கு ரணிலைப்பார்த்து சுதந்திர தினத்துக்குள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு எனச் சொன்னியள் என்னாச்சு எனக் கூற திராணியில்லாமல் எலும்புக்கு அடிபடுதுகள். சொறி...........ள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Elugnajiru said:

எனது ஒண்ணுவிட்ட சகோதரம் ஊரில திண்ணைக்கு மண் எடுத்துக்கொண்டு இருக்கு ஒருக்கால் மல்லாகப்பக்கம் போய் காணி வீடு வளவைப் பார் அங்க என்ன நடக்குது என ஒருக்கால் சொல்லு எண்டால் எனக்கு நேரமில்லை தவிர என்னால கனதூரத்துக்குப் போகமுடியாது என யாழ் நகர்ப்பகுதியிலிருந்து சொல்லுது. அடுத மாதத்தில இருந்து காசை நிப்பாட்டவேண்டும்.

கடன் கொடுக்கும், தாபனங்கள் நாடுகள் இந்த நிபந்தனையை இலங்கைக்கு போடவேண்டும். வருந்தி உழைத்தாற்தான் அதன் அருமை தெரியும். சும்மா இருந்து அனுபவித்தால்; எல்லாம் சும்மா வந்ததுதானே என்கிற நினைவு வரும். இரு பகுதிக்கும் கஸ்ரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தற்காலிக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாய்லாந்தில், விசேஷ உணவாக பாம்பு சாப்பிடுவதை வலைத்தளங்களில் பாத்திருக்கிறேன். பாம்பிறைச்சிப்பிரியர்கள் துடிக்கிறார்களோ என்னவோ?
    • ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க  தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்). இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது என கூறி தமிழிற்கு சேவை செய்தார், மதத்திற்கு சேவை செய்தார் என நுண்ணிய அரசியல் செய்ததைப்போலவே (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்) தமிழ் நாட்டில் பிராமனர் ஈடுபட்டனர், இந்தியாவில் இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பொருளாதார ரீதியாக தர முயர்த்த பல சலுகைகள் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளது ஆனால் எமது சமூகம் அவ்வாறான நிலையின் உருவாக்க விரும்பாத நிலையே இன்னமும் அடிப்படை கல்வியினை பெறமுடியாத வறுமை சூழ்நிலையிலேயே வறுமைக்கோட்டிற்க்கு கீழே பல தலைமுறைகளாக வாழும் நிலை காணப்படுகிறது. ஊரில் ஒருவரது மாடு காணாமல் போய்விட்டது அவர் தமிழீழ காவல்துறையில் சென்று முறயிட்டார், அவரிடம் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா என கேட்டார்கள் அதற்கு அவர் சாதிய வார்த்தையில் விழித்து அவர்கள் மேல்தான சந்தேகம் உள்ளது என்றார், அவருக்கு 5000 ரூபா அபராதம் விதிதார்கள், அமெரிக்காவில் ஆபிரிக்க வம்சாவளியினரை குற்றப்பரம்பரையாக பார்ப்பது போல பார்க்கும் நிலை எம்மிடமும் உள்ளது. என்னை பொறுத்தவரை தமக்கான உரிமைகளை இழந்து பல தலைமுறைகளாக சைவர், தமிழர் என தமது சுயத்தினை இழந்து  தமிழ் சமூகம் எனும் போர்வையில் அடிமைகளாக  இருப்பதனை விட வேறு மதம், இனம் என்பதன் மூலம் சாதாரண மனிதர்கள் போல சகல உரிமைகளோடு வாழ வேண்டும். நீங்கள் கூறுவது போல திருமண பந்தத்திற்கு மட்டும் சாதி பார்ப்பதாக எடுத்து கொன்டாலும், இந்த வேற்றுமையினை எதிர்பார்க்கின்ற சமூகமாக இருந்த வண்ணம் எவ்வாறு தமிழர், மதம் எனும் ஒருமைப்பாட்டுற்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாமாக இருக்குமா? உண்மையாக உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தல்ல, அத்துடன் தனிப்பட்ட  ரீதியில் சமய, மொழி எனும் அடிப்படையில் பெயர் பெற்ற காலமானவர்கள் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால் இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்! ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.   வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார். https://athavannews.com/2024/1400351   ##################  ##################    ###################     மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!   இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.aகொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1400359 #################  ##################    ################### மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்! மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இன்னிலையில் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400362
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.