Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட தொகையில் இந்தியக் கடன் செலுத்தப்பட்டது - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட தொகையில் இந்தியக் கடன் செலுத்தப்பட்டது - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

Published By: T. SARANYA

25 MAR, 2023 | 12:45 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதற்கட்டமாகப் பெற்றுக் கொண்ட 330 மில்லியன் டொலரில் , 121 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தின் முதற் தவணையை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

இவ்வாறு கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளமையானது , கடன் ஸ்திரத்தன்மையை பேணுவதற் உதவுவதோடு , எமக்கு உதவிய நாடுகளின் நம்பிக்கையை காப்பாற்றுவதில் சாதகமான தாக்கத்தை செலுத்தும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஏனைய சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி பெற்றுக் கொள்ளப்பட்டால் அது மத்திய வங்கியின் கையிருப்பில் காணப்படும்.

எவ்வாறிருப்பினும் இம்முறை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகையை விசேட தேவைகளுக்காக பயன்படுத்த முடியும். கடந்த வியாழனன்று முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றது.

இதனை செலவிடும் போது மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்ட வேண்டியுள்ளது.

கடன் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக இக்கடன் தொகையைப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம். கடந்த காலங்களில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாம் பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொண்டோம்.

அதற்கமைய இந்தியாவிற்கு செலுத்த வேண்டியுள்ள கடன் தொகையில் முதற்கட்டமாக 121 மில்லியன் மீள செலுத்தப்பட்டுள்ளது.

இனிவரும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் , எமக்கு உதவிய நாடுகளின் நம்பிக்கையை காப்பாற்றுதல் என்வற்றில் இது தாக்கம் செலுத்துகிறது.

நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை விருப்பத்தினைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

இதன் போது சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவும் , வாக்கெடுப்பில் பங்குபற்றவும் முடியும்.

தற்போதைய சூழலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஏற்றுக்கொண்ட ஒரு விடயத்தை , தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பார்களானால் மிக இலகுவாக எதிர்க்கட்சிகளால் வரலாற்றில் இடம்பிடிக்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/151367

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இடத்தில் கடன் வாங்கி பழைய கடன்காரனுக்கு கடணை  வட்டியுடன் கட்டுவதுக்கா  வெடி போட்டு கொண்டாடினவங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

121 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தின் முதற் தவணையை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

நிதி ராஜாங்க அமைச்சர் மானஸ்தன்! எவ்வளவு பெருமை அவருக்கு, ஒருவரிடம் கடன் வாங்கி  இன்னொருவரின் கடன் அடைப்பது, இது என்ன சாதாரண விடயமா? ஆனால் வட்டி குட்டி போடும் என்பது இவருக்கு தெரியலையே.

3 hours ago, ஏராளன் said:

எவ்வாறிருப்பினும் இம்முறை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகையை விசேட தேவைகளுக்காக பயன்படுத்த முடியும்.

அப்படி என்ன விசேட தேவை நாட்டில் இப்போ? தமிழர் பிரதேசங்களில் விகாரை கட்டுவது? இராணுவ முகாம்களை பலப்படுத்துவது? தமிழரின் நிலங்களை அபகரிப்பது? தமிழரை இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிவதற்கு எந்தப்பேயோடும் கூட்டுச்சேர்வார்கள். சொன்னார்கள் செய்தும் காட்டுகிறார்கள்.      

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, satan said:

நிதி ராஜாங்க அமைச்சர் மானஸ்தன்! எவ்வளவு பெருமை அவருக்கு, ஒருவரிடம் கடன் வாங்கி  இன்னொருவரின் கடன் அடைப்பது, இது என்ன சாதாரண விடயமா? ஆனால் வட்டி குட்டி போடும் என்பது இவருக்கு தெரியலையே.

அப்படி என்ன விசேட தேவை நாட்டில் இப்போ? தமிழர் பிரதேசங்களில் விகாரை கட்டுவது? இராணுவ முகாம்களை பலப்படுத்துவது? தமிழரின் நிலங்களை அபகரிப்பது? தமிழரை இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிவதற்கு எந்தப்பேயோடும் கூட்டுச்சேர்வார்கள். சொன்னார்கள் செய்தும் காட்டுகிறார்கள்.      

நீங்கள் வேற இவங்கள் கடன் வாங்கின கையோட ஒரு கப்பல் முழுக்க முட்டையை இந்தியாவில இருந்து இறக்கினவையள் போன கிழமை. இந்தக் கூழ் முட்டைகள் பொறுத்ததுதான் பொறுத்தம் முட்டையை ஒரு இரண்டு மூன்று மாதம் சாப்பிடாமல் விட்டுட்டு கோழித்தீவனத்தை இறக்கியிருந்தால் உள்ளூரிலையே முட்டையை உற்பத்தி பண்ணியிருக்கலாம்.

கடன் கிடைத்ததும் மருதானையில வெடி கொளுத்திக் கொண்டாடுவதும் தமிழரை அழித்தது கிரிபத்  கொடுத்துக் கொண்டாடுவதும் இவர்களுக்கு வழக்கமாகிப்போயிட்டுது.

கொரோணா காலத்தில ஐரோப்பிய ஒன்றியத்திடம் நான் வாழும் நாடு இரண்டு பில்லியன் யூரோக்களைக் கடனாகப் பெற்றது அதிப் பெற்றுக்கொள்ளமுதல் நாடாளுமன்றத்தில ஒரு பிரேரணை கொண்டுவந்து வாங்களா இல்லையா பின்பு எப்படிக் கொடுப்பது இவைகளை விவாதித்து கடைசியில ஒவ்வொறு இந்த நாட்டுப் பிரஜையிடமுமிருந்தும் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு வருடாவருடம் நூத்திநாற்பத்து ஏழு யூரோக்களை வரி அறவிடும்போது சேர்த்தெ அறவுவம்படி சட்டம் இயற்றி இப்போ வருடாவருடம் அந்தக் காசை நானும் சேர்த்துக் அழுதுகொண்டு இருக்கிறோம்.

அதாலதான் பின்லாந்து நாடு உலகில் மகிழ்ச்சியான நாடாக இருக்கு காரணம் இந்த நாட்டின் உயர்விலும் தாழ்விலும் நானும் பங்குகொள்கிறேன் எனும் மனப்பாங்கு ஒவ்வொரு பின்லாந்துப் பிரஜையிடமும் இருப்பது மகிழ்சியாக இருப்பதற்கான பல காரணங்களில் ஒரு காரணமாகும்.

ஆனால் எனது ஒண்ணுவிட்ட சகோதரம் ஊரில திண்ணைக்கு மண் எடுத்துக்கொண்டு இருக்கு ஒருக்கால் மல்லாகப்பக்கம் போய் காணி வீடு வளவைப் பார் அங்க என்ன நடக்குது என ஒருக்கால் சொல்லு எண்டால் எனக்கு நேரமில்லை தவிர என்னால கனதூரத்துக்குப் போகமுடியாது என யாழ் நகர்ப்பகுதியிலிருந்து சொல்லுது. அடுத மாதத்தில இருந்து காசை நிப்பாட்டவேண்டும்.

நான் பத்துச் சென்ரிக்கு இனிப்பு வாங்கினாலும் ஒன்று தசம் நாஙு சென்ரி வரியை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டுத்தான் இனிப்பை வாயில போடவேண்டும் ஆனால் அரச அலுவலகங்களில் வேலை செய்வோர் வரு உயர்வுக்கு வழக்குப்போடுகிறார்கள்.

இந்த விறுத்தத்தில் கிழக்காசியாவிலேயே இறுகமான ஊழல் மோசடிக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவாரன் என ரணில் கூறுகிறார் சட்டம் கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது அதே ஊழலில் ஊறிய அதிகாரிகள்தான் என்பதை வர் மறந்திட்டார்.

இந்தக் கெடுதியில தமிழர்களுக்கான உரிமைபற்றிப் பேச நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கூட்டமைப்பினர் இப்போ உள்ளூராட்சி தேர்தலை நடாத்துஙோ என ஊளையிடுகினம் இவர்களது யோக்கியதை தெரிந்துதான் ரணில் உள்ளூராட்சி தேர்தல் எனும் எலும்புத்துண்டை விட்டெறிய அதை நக்குவதற்கு கூட்டமைப்பு குரத்து ஒண்டுக்குமேல ஒண்டு கடித்து இரத்தம் வடிய புறுஞ்சுபோய் கிடக்குதுகள் ஆக ரணில் இவர்களைப் பிறிக்கவேணும் என நினைத்து எலும்புத்துண்டை எறிந்தவுடன் தமிழர் உரிமை எனும் துடை இறைச்சியை இவர்கள் மறந்துபோய் இப்போ அடிபட்டு பின்னங்காலைத் துக்கிக்கொண்டு அலையினம்.

தமிழர் அரசியல்வாதிகளுக்கு ரணிலைப்பார்த்து சுதந்திர தினத்துக்குள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு எனச் சொன்னியள் என்னாச்சு எனக் கூற திராணியில்லாமல் எலும்புக்கு அடிபடுதுகள். சொறி...........ள்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Elugnajiru said:

எனது ஒண்ணுவிட்ட சகோதரம் ஊரில திண்ணைக்கு மண் எடுத்துக்கொண்டு இருக்கு ஒருக்கால் மல்லாகப்பக்கம் போய் காணி வீடு வளவைப் பார் அங்க என்ன நடக்குது என ஒருக்கால் சொல்லு எண்டால் எனக்கு நேரமில்லை தவிர என்னால கனதூரத்துக்குப் போகமுடியாது என யாழ் நகர்ப்பகுதியிலிருந்து சொல்லுது. அடுத மாதத்தில இருந்து காசை நிப்பாட்டவேண்டும்.

கடன் கொடுக்கும், தாபனங்கள் நாடுகள் இந்த நிபந்தனையை இலங்கைக்கு போடவேண்டும். வருந்தி உழைத்தாற்தான் அதன் அருமை தெரியும். சும்மா இருந்து அனுபவித்தால்; எல்லாம் சும்மா வந்ததுதானே என்கிற நினைவு வரும். இரு பகுதிக்கும் கஸ்ரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தற்காலிக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.