Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் 69 வயதுடைய மரணக்கிரியைகள் செய்பவர் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் மரணக் கிரியைகள் மற்றும் அந்தியோட்டிக் கிரியைகள் செய்து வரும் 69 வயதுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் ஐய்யர் கொலை செய்யப்பட்டு, அவரிடம் இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிட்டுள்ளன. 

இந்தச் சம்பவம், இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டில் ஐய்யர், மனைவி மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த உறவினர் என மூவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை, கொள்ளையர்கள், வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, ஐய்யரின் மனைவியையும் வயதான உறவினரையும் கை, கால்களை கட்டி, வாயும் கட்டி வைத்துவிட்டு, ஐய்யர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஐய்யர் விழுந்துள்ளார்.
 
வீட்டுக்குள் நுளைந்த இரு சந்தேகநபர்களும் முகத்துக்கு துண்டுகளை கட்டி, கையில் வாள், பொல்லுகள் கொண்டுவந்ததாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிபர் தெரிவித்தார். 

ஐய்யர் விழுந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த ஐய்யரின் 15 பவுன் நகைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் (அண்ணளவாக) கொள்ளையர்கள் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மனைவி மற்றும் வயதான உறவினர் ஆகியோர் அதிகாலையில் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் அவற்றை அவிழ்த்து, வீட்டின் முற்றத்துக்கு வந்து பார்த்தபோது, ஐய்யர் நிலத்தில் குப்புற விழுந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். 

அச்சமடைந்த இருவரும் என்ன செய்வது என்று தெரியாத நிலையில், வீட்டிற்கு  முன்னால் உள்ள கடைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். கடைக்காரர், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அத்துடன், தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் துப்பறியப்பட்டுள்ளன.

இதன்போது வீட்டிலிருந்த ஐய்யரின் மனைவி மற்றும் மனைவியின் உறவினரான ஒருவரும் பொலிஸாரின் விசாரணைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனார். 

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார்.

ஐய்யரின் உடலை, மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் முல்லைத்தீவு பொலிஸாரை அவர் பணித்துள்ளார்.
 
இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவம், முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. (N)

Tamilmirror Online || முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்பவர் கொலை

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன மரணக் கிரியை செய்பவர்? 

இதைவிட அவரது சாதியை சொல்லி எலுதியிருக்கலாம். 

😏

4 minutes ago, Kapithan said:

அது என்ன மரணக் கிரியை செய்பவர்? 

இதைவிட அவரது சாதியை சொல்லி எலுதியிருக்கலாம். 

😏

செய்தியை முழுமையாக வாசிக்கவில்லை போல...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

செய்தியை முழுமையாக வாசிக்கவில்லை போல...

வாசித்தேன். ஐயர் என்பது கோவிலில் பூசை செய்வோர் எல்லோருக்கும் ஈழத்தில் கூறப்படும் பொதுச் சொல்.  அதனால்தான் அப்படி எழுதினேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வாசித்தேன். ஐயர் என்பது கோவிலில் பூசை செய்வோர் எல்லோருக்கும் ஈழத்தில் கூறப்படும் பொதுச் சொல்.  அதனால்தான் அப்படி எழுதினேன். 

 

கோவிலில் பூசை செய்யும் ஐயர்மார் மரணசடங்குகள் செய்ய வரமாட்டார்கள் ........மரணவீட்டுக்கே வரமாட்டார்கள்....

பூசாரி என்று சொல்வார்கள் மரணசடங்கு செய்பவர்களை....என நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

கோவிலில் பூசை செய்யும் ஐயர்மார் மரணசடங்குகள் செய்ய வரமாட்டார்கள் ........மரணவீட்டுக்கே வரமாட்டார்கள்....

பூசாரி என்று சொல்வார்கள் மரணசடங்கு செய்பவர்களை....என நினைக்கிறேன்..

எல்லாரும் அய்யர்தான்.

ஆனால், மரணசடங்குக்கு என்று தனிய. அவர்கள் கோவிலில் பூசை செய்வதில்லை.

கோவிலில் தச்சணை பக்தர்கள் பார்த்து கொடுப்பது.

இலண்டணில, இந்த மாதிரி மரணசடங்கு அய்யர் கேட்பது கிடைப்பதால், வலு பிசி. பேக்காசு. 🤑

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எல்லாரும் அய்யர்தான்.

ஆனால், மரணசடங்குக்கு என்று தனிய. அவர்கள் கோவிலில் பூசை செய்வதில்லை.

கோவிலில் தச்சணை பக்தர்கள் பார்த்து கொடுப்பது.

இலண்டணில, இந்த மாதிரி மரணசடங்கு அய்யர் கேட்பது கிடைப்பதால், வலு பிசி. பேக்காசு. 🤑

 

இங்கு அவுஸ்ரேலியாவில் வெகு சிலர் தொண்டு மனபான்மையுடன் மரணசடங்குகளை செய்கின்றனர்.......பணம் வாங்குவதில்லை....

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, putthan said:

இங்கு அவுஸ்ரேலியாவில் வெகு சிலர் தொண்டு மனபான்மையுடன் மரணசடங்குகளை செய்கின்றனர்.......பணம் வாங்குவதில்லை....

வெளில சொல்லாதீங்கோ, அய்யர் பிளேன் ஏறிடுவார்.

காசு வாங்கிறதால, அய்யர் ஆல் இன் வன் சேவை. அதால ஆக்கள் போறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

வெளில சொல்லாதீங்கோ, அய்யர் பிளேன் ஏறிடுவார்.

காசு வாங்கிறதால, அய்யர் ஆல் இன் வன் சேவை. அதால ஆக்கள் போறது.

 

பிழைக்க தெரிந்த மனிதன்

1 hour ago, putthan said:

 

பூசாரி என்று சொல்வார்கள் மரணசடங்கு செய்பவர்களை....என நினைக்கிறேன்..

இங்கு (ரொரண்டோ) எல்லாரையும் ஐயர் என்று தான் கூப்பிடுகினம் என நினைக்கின்றேன். நான் இதுவரைக்கும் இப்படி ஒரு பூசையையும் செய்ய எவரையும் கூப்பிடாதமையால் சரியாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, putthan said:

பிழைக்க தெரிந்த மனிதன்

ஒரு நண்பணின் வயதான தாய்க்கு செய்ய, அய்யருக்கு போனைப் போட்டார் நண்பர். அய்யர் கிளீன் பிஸ்னஸ் ரோக். அது ஓடர் பண்ணியாச்சா, இது என்ன மாதிரி எண்டு... இல்லை எண்டு பதில் வர.... பக்கேஜ் டீல்...

அய்யா... அக்கவுண்ட் நம்பரை தந்தால்.... காசை மாத்தி விடலாம்..... நண்பர்.

அதெல்லாம் அவசரம் இல்லை. நேரில பாப்பம் தானே.... என்வலப்பில போட்டு கையில தாருங்கோவன்.... அய்யா

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

இங்கு (ரொரண்டோ) எல்லாரையும் ஐயர் என்று தான் கூப்பிடுகினம் என நினைக்கின்றேன். நான் இதுவரைக்கும் இப்படி ஒரு பூசையையும் செய்ய எவரையும் கூப்பிடாதமையால் சரியாக தெரியவில்லை.

ஞாபகம் வந்திட்டுது....40 வருடங்களுக்கு முன்பு ஊரில் இவர்களை சைவக்குருக்கள் என சொல்வார்கள் ...எங்களது ஊரில் ஒருவர் இருந்தவர் தீட்சை பெற்றவர் ..
சிட்னியில் சிலர் தொண்டாக முன் வந்து செய்கின்றனர்....சிலர் மரணசடங்கின்  காரணங்களை ஆங்கிலத்தில் விளக்கமாக சொல்லி செய்வார்கள்..

கொள்ளி குடத்தில் மூன்று முறை ஒட்டை போடுவதன் காரணம் மண்,பொன் ,பெண்(ஆண்) ஆசைகளை துறந்து இந்த உயிர்(ஆத்மா) மீண்டும் பிறவாத நிலை அடைய வேணும் என்ற செயலை காட்டுவதற்கு என  மரணசடங்கு செய்யும் பெரியவர் கூறினார்...
இப்படி சில விளக்கஙளை கொடுப்பார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

ஞாபகம் வந்திட்டுது....40 வருடங்களுக்கு முன்பு ஊரில் இவர்களை சைவக்குருக்கள் என சொல்வார்கள் ...எங்களது ஊரில் ஒருவர் இருந்தவர் தீட்சை பெற்றவர் ..
சிட்னியில் சிலர் தொண்டாக முன் வந்து செய்கின்றனர்....சிலர் மரணசடங்கின்  காரணங்களை ஆங்கிலத்தில் விளக்கமாக சொல்லி செய்வார்கள்..

கொள்ளி குடத்தில் மூன்று முறை ஒட்டை போடுவதன் காரணம் மண்,பொன் ,பெண்(ஆண்) ஆசைகளை துறந்து இந்த உயிர்(ஆத்மா) மீண்டும் பிறவாத நிலை அடைய வேணும் என்ற செயலை காட்டுவதற்கு என  மரணசடங்கு செய்யும் பெரியவர் கூறினார்...
இப்படி சில விளக்கஙளை கொடுப்பார்கள்...

கரணவாய் குருக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

கரணவாய் குருக்கள்

மானிப்பாய் சந்தைக்கு அருகில் வாழ்ந்தவர் ....

"கரணவாய் " ஊரா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

மானிப்பாய் சந்தைக்கு அருகில் வாழ்ந்தவர் ....

"கரணவாய் " ஊரா?

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில்...1999...டிசம்பர்...என்னுடைய நெருங்கிய உறவு.. 16 வயதில் விபத்தில் இறந்துவிட்டான்..பெற்றவருக்கு ஒரு ஆண்பிள்ளை..தலை நிர முடியாத சோகத்தில் ...செத்தவீடு பொறுப்பை செலவு பார்த்தபொழுது..சுடலைக்கு வந்த குருக்களின் வேதனத்தை அவரிடம் கேட்டபோது 350 டொலர் என்றார்..எனக்கோ இந்தவிடையத்தில் முன் பின் அனுபவம் இல்லாதபடியால் கேட்டதை கொடுத்துவிட்டேன்...அப்பொழுது அய்யர் ஊதியம் 75 டொலர் மட்டுமே...வீட்டில் எனக்கு செம பேச்சு..8ம் நாள் சடங்கிற்கு அவர் மீளவும் வந்தபோது ..அவரிடம் கேட்க..தலையை சொறிந்தபடி சிரிச்சுச் சமாளித்துவிட்டார்...இந்தமுறை நான் உசாராகி...ஏமாறவில்லை..எனினும் அந்தநாள் வேதனம் 75 டொலர் கொடுத்தேன்...செத்தவீட்டிலும் தவிச்சமுயல் அடிப்பினம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.