Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

550 பிள்ளைகளுக்கு அப்பா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விந்து வங்கியூடாக தனது விந்தணுக்களை வழங்கி 550 பிள்ளைகளுக்கும் அதிகமான பிள்ளைகள் உருவாக்கக் காரணமாக இருந்த 41 வயதான நெதர்லாந்து ஆண் ஒருவர் எனியும் விந்து வங்கிக்கு விந்தணுக்கள் தரக்கூடாது.. அதனை பாவிக்க அனுமதிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளார். மீறின் 88,000 பவுன்கள் அபராதம் விதிக்கப்படுமாம்.

A person manipulating a Frozen Storage At Sperm Bank with nitrogen smoke

இந்த வினோதச் செய்தியை பிரசுரித்திருப்பது பிரித்தானிய ஊடகம் ஒன்று. 

  • கருத்துக்கள உறவுகள்

550 குழந்தைகளுக்கு ஒரே நபர் தந்தையானது எப்படி? அதனால் அரசுக்கு தலைவலி ஏன்?

விந்தணு தானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

விந்தணு வங்கியில் உறைந்த நிலையில் சேமிக்கப்பட்டிருக்கும் விந்தணுக்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எமிலி மெக்கார்வி
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

விந்தணு தானம் மூலம் 550க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியதாக சந்தேகிக்கப்படும் நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மேலும் விந்தணு தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

41 வயதான ஜோனத்தான், தடையை மீறி மீண்டும் விந்தணுவை தானம் செய்ய முயன்றால் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

அவர் ஏற்கனவே விந்தணு தானம் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையானது தெரியவந்ததையடுத்து, கடந்த 2017ல் நெதர்லாந்தில் உள்ள கருவுறுதல் கிளினிக்குகளுக்கு அவர் விந்தணுக்களை தானம் வழங்க தடை விதிக்கப்பட்டது.

எனினும், விந்தணுக்களை தானம் செய்வதை நிறுத்துவதற்கு பதிலாக, வெளிநாட்டிலும், ஆன்லைன் மூலமாகவும் அவர் தனது விந்தணுக்களை தானம் செய்து வந்துள்ளார்.

 

ஹேக்கில் உள்ள நீதிமன்றம், அவர் எந்தெந்த கிளினிக்குகளுக்கு விந்தணுக்களை தானமாக வழங்கினார் என்ற பட்டியலை வழங்கும்படியும், அவர் தானமாக வழங்கிய விந்தணுக்களை அழிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பெண்களை ஜோனத்தான் தவறாக வழிநடத்தியதாகவும் கூறப்படுகிறது.

விந்தணுக்களை தானமாக வழங்கும் நபர், 12 குடும்பங்களில் 25 குழந்தைகளுக்கு மேல் தந்தையாகக் கூடாது என்று டச்சு மருத்துவ வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

ஆனால், 2007ல் விந்தணு தானத்தை தொடங்கிய ஜோனத்தான், இதுவரை 550 முதல் 600 குழந்தைகள் பிறப்பதற்கு உதவி செய்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

விந்தணு, கருமுட்டை தானம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு அறக்கட்டளை மற்றும் ஜோனத்தான் தானமாக வழங்கிய விந்தணு மூலம் பிறந்த ஒரு குழந்தையின் தாய் ஆகியோர் அவர் மீது புகார் அளித்ததன் அடிப்படையில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

விந்தணு தானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நூற்றுக்கணக்கான ஒன்றுவிட்ட சகோதரர்கள் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரிகள் கொண்ட இந்த உறவின் நெட்வொர்க் மிகவும் பெரியது" என்று நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் கெர்ட்-மார்க் செமல்ட் கூறினார்.

அவர் தானமாக வழங்கிய விந்தணு மூலம் நெதர்லாந்து நாட்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. இதேபோல், அந்நாட்டில் உள்ள ஒருசில கிளினிக்குகள் அவரின் விந்தணுக்களை வெளிநாடுகளுக்கும் அனுப்பியுள்ளன.

ஜோனத்தான் புதிதாக யாருக்கும் தனது விந்தணுக்களை தானம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதிப்பதாக நீதிபதி தேரா ஹெஸ்லிங்க் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

இதேபோல், விந்தணுக்களை தானம் செய்வதாக கூறி குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் யாரையும் அவர் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் விளம்பரம் செய்யக் கூடாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

அவர் ஏற்கனவே எத்தனை குழந்தைகளுக்கு தந்தையானார் என்பது குறித்து விந்தணு தானம் பெற்ற நபர்களிடம் தவறான கணக்குகளை கூறி ஜோனத்தான் ஏமாற்றியுள்ளார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"இந்தப் பெற்றோர்கள் அனைவரும் இப்போது தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் அவர்கள் தேர்ந்தெடுக்காமலேயே நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகளை கொண்ட ஒரு பெரிய உறவினர் வலையமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர், " என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இது குழந்தைகளுக்கு எதிர்மறையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்துகிறது அல்லது எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு போதுமான நம்பகத்தன்மை உள்ளதாகவும் நீதிமன்றம் கூறியது.

விந்தணு தானம் மூலம் பிறக்கும் குழந்தைகள், வளர்ந்து எதிர்காலத்தில் ஒருவரை ஒருவர் (உடன்பிறப்புகளுக்குள்) திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை குறைக்கும் விதமாக, விந்தணு தானம் செய்பவர்கள் குறைந்த அளவிலேயே தானம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

நெதர்லாந்து கடந்த காலங்களில் கருவுறுதல் மோசடிகளை பலமுறை எதிர்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு, ஒரு மருத்துவர் பெற்றோரின் அனுமதியை பெறாமலேயே தனது விந்தணுவைப் பயன்படுத்தினார் என்பதும் இதன் மூலம் அவர் 49 குழந்தைகளுக்கு தந்தையானார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c2lpg031kqlo

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு அதிகமாக….  “விந்து விட்டவன், நொந்து கெட்டான்” 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

அளவுக்கு அதிகமாக….  “விந்து விட்டவன், நொந்து கெட்டான்” 😂

 

அந்தாள் திட்டம் போட்டு செய்திருக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்

“தனக்கு மிஞ்சித்தான்… தானமும், தருமமும்”

“ஆற்றிலை போட்டாலும், அளந்து போட வேணும்”

இவர்களுக்காகவே தமிழில் நிறைய பழமொழிகள் உள்ளது.

இவர்  “இறைக்கிற கிணறுதான் ஊறும்”, என்ற கொள்கையுடன் கண் மண் தெரியாமல் 
விந்து தானம் பண்ணிக் கொண்டு இருக்கிறார். பிற்காலத்துக்கு கஸ்ரப் படப் போகிறார். 😂

2 minutes ago, ஏராளன் said:

அந்தாள் திட்டம் போட்டு செய்திருக்கு!!

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

தனக்கு மிஞ்சித்தான்… தானமும், தருமமும்”

“ஆற்றிலை போட்டாலும், அளந்து போட வேணும்”

இவர்களுக்காகவே தமிழில் நிறைய பழமொழிகள் உள்ளது.

இவர்  “இறைக்கிற கிணறுதான் ஊறும்”, என்ற கொள்கையுடன் கண் மண் தெரியாமல் 
விந்து தானம் பண்ணிக் கொண்டு இருக்கிறார். பிற்காலத்துக்கு கஸ்ரப் படப் போகிறார். 😂

 

அவருக்கு கஸ்ரமில்லை அண்ணை!(சொத்துப் பிரச்சனைகள் வராது என நினைக்கிறேன்) அவற்றை வாரிசுகள் தான் பாதிக்கப்படப் போகினம். ஆகக் கூட 25 பிள்ளைகளோட நிறுத்தச் சொல்லி நெதர்லாந்துச் சட்டம் சொல்லுதாம். உள்நாட்டில் தடைபோட வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்திருக்கு ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

விந்து தானம் பண்ணிக் கொண்டு இருக்கிறார். பிற்காலத்துக்கு கஸ்ரப் படப் போகிறார். 😂

இப்பவே கையுளைவில் கஷ்டப்படலாம்!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இப்பவே கையுளைவில் கஷ்டப்படலாம்!

spacer.png

AXE thailam 5ml

கையுளைவிற்கு...  "கோடாலி தைலம்" பாவிக்க, உளைவு... பறந்து போகும்.  😂

  • கருத்துக்கள உறவுகள்

எனது தகப்பனார் ஒரு ஊரையே உருவாக்கினார் என்று இதுவரை சாதனையாக நினைத்திருந்தேன்

இந்நாள் ஒரு மாவட்டத்தையே உருவாக்கி இருக்கிறார் 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பிற்காலத்துக்கு கஸ்ரப் படப் போகிறார். 😂

41 வயதாகி விட்டதாம் இனி என்னத்த கஸ்ரப்பட்டு 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

41 வயதாகி விட்டதாம் இனி என்னத்த கஸ்ரப்பட்டு 

41 வயசு, இளந்தாரி வயசு. இன்னும் அவரிடம் நிறைய எதிர்பார்க்கலாம். 😂
சினை மாடு மாதிரி… அள்ள அள்ள  குறையாத நிலாவரை கிணறு. 🤣

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.