Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் – ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி

புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் – ஜனாதிபதி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக்  பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு  இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

இந்த நாள் கௌதம புத்தரின் பிறப்பு, புத்தத்துவம் மற்றும் சம்புத்த பரிநிர்வாணத்தின் புனித நிகழ்வை நினைவுபடுத்துவதோடு  மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய அறப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் கௌதம புத்தரின் போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாடு  சந்தித்து வரும் இந்த சவாலான நேரத்தில்,   காலத்தால் அழியாத  கௌதம புத்தரின் தத்துவம் ஆறுதலுக்கான வழியாக அமைந்துள்ளது.

எனவே, இக்கட்டான காலகட்டத்தைக் கடந்து இயல்பு வாழ்க்கையை உருவாக்குவதற்கான சவாலை முறியடிக்க, புத்தர் கூறியது போல் ஒற்றுமையுடனும் நம்பிக்கையுடனும் ஒன்றிணைவது அவசியம்.

பௌத்த தத்துவத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கருணை, இரக்கம், சாந்தம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய நான்கு நற்பண்புகளைப் பின்பற்றி நாம் அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும்.

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணிதிரளுமாறு இந்த புனித நாளில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வெசாக் அனுஸ்டானங்கள், அறியாமை இருளை அகற்றி இலங்கையை மறுமலர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் வரமாக அமையட்டும். அனைத்து உயிர்களுக்கும் இன்பமான வெசாக் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1331418

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பௌத்த தத்துவத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கருணை, இரக்கம், சாந்தம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய நான்கு நற்பண்புகளைப் பின்பற்றி நாம் அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும்

சொல்வது ஒன்று செய்வது வேறொன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி

புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் – ஜனாதிபதி!

புத்தரின் போதனையின் கீழ் அணி திரண்டால் நாட்டில் பிரச்சனையே இருக்கக்கூடாதெல்லோ மிஸ்டர் ரணில்??????

  • கருத்துக்கள உறவுகள்

1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.

3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.

4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிவரணமாகும்.

இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :

1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.

2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.

3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.

4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.

5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.

6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.

7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.

8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.

https://tamil.webdunia.com/article/on-other-religions/கௌதம-புத்தரின்-வாழ்வும்-போதனைகளும்-107052100014_1.htm

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம்

இலங்கையை கட்டியெழுப்ப ஒருதடவை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழரை விழுத்தி நிலங்களை எடுத்துள்ளார்கள், மிஞ்சியதை பறிக்க மீண்டும் அறைகூவல் விடுக்கிறார், பிடுங்கி எடுத்த நிலங்களில்  விகாரைகளை கட்டியெழுப்ப? இல்லை..... முன்பு; எங்கே எப்படி இலங்கை கட்டியெழுப்பப்பட்டது என்பதையும் விவரித்து அழைப்பதுதான் முறை. அதை விடுத்து பொத்தாம்பொதுவாய் அழைப்பதன் பொருள் என்ன? அடுத்த பக்கம் புலிகளை (தமிழரை) ஒழித்து நாட்டை கட்டியெழுப்பினோம் என்று கூறுகிறார்கள், அதனால் எழும் சந்தேகம்! இல்லை.... பெற்ற சுதந்திரத்தை சொல்வதானாலும், அதற்காக கடுமையாக உழைத்த இனம், தம் சுதந்திரத்தை இழந்து அடிமையாக தவிக்கிறது. எதை எவர் குறிப்பிட்டாலும் தமிழரை சூழ்ச்சியாக அழித்த வரலாறே இலங்கை கட்டியெழுப்பப்பட்டதன் பின்னலுள்ளது.  எதை என்று விவரித்தால் விளங்கிக்கொள்ள இலகுவாக இருக்கும்.           

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

 

பெளத்த விகாரை உங்கள் சொந்த காணிகளில் அத்துமீறி கட்டினால் நீங்கள் கீழ் கூறிய பௌத்தபோதனைகளை பின் பற்றுங்கள்
கருணை, 
இரக்கம்
சாந்தம்
சகிப்புத்தன்மை 

விகாரை கட்டியவர்கள் மீது கருணை, இரக்கம், சாந்தம் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற்வற்றை காட்டி நிம்மதியாக வாழுங்கள்😃

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

பெளத்த விகாரை உங்கள் சொந்த காணிகளில் அத்துமீறி கட்டினால் நீங்கள் கீழ் கூறிய பௌத்தபோதனைகளை பின் பற்றுங்கள்
கருணை, 
இரக்கம்
சாந்தம்
சகிப்புத்தன்மை 

விகாரை கட்டியவர்கள் மீது கருணை, இரக்கம், சாந்தம் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற்வற்றை காட்டி நிம்மதியாக வாழுங்கள்😃

எங்கே? தெருவில் நின்றா நிம்மதி? முடியுமா? நாளைக்கு எனது அயல்வீட்டாரையும் தெருவுக்கு கொண்டுவந்து விடும் நான் காட்டும் பண்புகள். இல்லாதவருக்கு காட்டலாம், பேராசை பிடித்தவருக்கு காட்டினால் அது வெறியாக மாறி எல்லோரையும் அழித்து விடும். அதுவே இங்கு நடைபெறுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தீர்வு விடயத்தில் தான் அக்கறையாகவுள்ளதாக லண்டனில் ஜனாதிபதி தெரிவிப்பு! அவரால் பின்கதவால் ஓடித்தப்ப முடியாது, எதிர்ப்புகளை தவிற்பதற்காக தெரிவித்திருப்பார். ஆனால் எழும் விகாரைகளை தடுக்க, கண்டிக்க தவறிவிட்டதோடு அதை நிஞாயப்படுத்தியிருக்கிறார். இப்போ மஹிந்தா, கோத்தா கோவிக்கப்போகிறார்கள். தங்கள் வரவை எதிர்த்த லண்டன்காரர், தங்களை ஓட  ஓட விரட்டிய லண்டன் தமிழர் எப்படி ரணிலை தப்ப விட்டனர் என்று? நமது இந்த ஏதிலி நிலைக்கு காரணமான அரச வம்சத்தை சேர்ந்த முடிக்குரிய வம்சத்தின் முடிசூட்டு விழாவில், கொண்டாட வரும் அவர், எங்களின் அடிமைத்தனத்துக்கு காரணமான இருவரும் சந்திக்கும் இடத்தில் எங்களுக்கு பதில் தர வேண்டி வற்புறுத்த வேண்டும்                    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.