Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரில் சிறுவர்களை இலக்கு வைத்து வாகனங்களின் நடமாட்டம் ; மன்னார் அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

08 MAY, 2023 | 03:23 PM
image

மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (8) துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு பொலிஸாரின் கவனத்திற்கு  கொண்டுவந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி குறித்த மாணவரை பலவந்தமாக ஏற்றிச் செல்ல முயற்சி செய்யப்பட்டதாக குறித்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் குறித்த சம்பவம்  தெரிய வந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் இன்று (8) காலை குறித்த பாடசாலைக்குச் சென்று மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்டேன்.

இதன் போது மேலும் ஒரு மாணவனை இன்று திங்கட்கிழமை (8) காலை பாடசாலைக்குச் செல்லும் போது இனிப்பு பண்டங்களை வழங்கி வாகனத்தில் ஏற்ற முற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடையம் குறித்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு, பாடசாலை பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

மாணவர்கள் கவனம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

குறித்த சம்பவங்கள் குறித்து மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி துரித நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/154803

  • கருத்துக்கள உறவுகள்

உடல் உறுப்புகளை திருட, மதம் மாற்ற, பாலியல் தேவைக்கு என்று.... 
அலைகிறார்கள் போலுள்ளது.
பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனைப்பிராந்தியத்தில் சிறுவன் ஒருவன்  கடத்தப்பட்டிருப்பதாகச் செய்தி ஒன்று  வெளியாகியுள்ளது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

கல்முனைப்பிராந்தியத்தில் சிறுவன் ஒருவன்  கடத்தப்பட்டிருப்பதாகச் செய்தி ஒன்று  வெளியாகியுள்ளது.

பையன் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார் 
காரணம் கடத்தலில்லை உண்மைக்காரணம்   இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உறுதிப்படுத்தப்பட்டதும் இணைக்கிறேன்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் தீவு பகுதியில் கத்தோலிக்கரும் முஸ்லிம்களுமே கூடுதலாக இருக்கிறார்கள். அங்கிருந்து பெரு நிலப்பரப்பிட்கு இலகுவாக கொண்டு செல்ல முடியாது. இராணுவ தடையில் பரிசோதித்தே அனுப்புவார்கள். இருந்தாலும் கடல் வழியாக கொண்டு செல்லலாம். அது இலகுவாக இருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

மன்னர் தீவு பகுதியில் கத்தோலிக்கரும் முஸ்லிம்களுமே கூடுதலாக இருக்கிறார்கள். அங்கிருந்து பெரு நிலப்பரப்பிட்கு இலகுவாக கொண்டு செல்ல முடியாது. இராணுவ தடையில் பரிசோதித்தே அனுப்புவார்கள். இருந்தாலும் கடல் வழியாக கொண்டு செல்லலாம். அது இலகுவாக இருக்காது. 

இராணுவத்துக்கு தெரிந்தே நடக்கிறது என் கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

இராணுவத்துக்கு தெரிந்தே நடக்கிறது என் கிறீர்களா?

சரியாக கூற முடியாது. கடத்தப்படடவரை விசாரித்த பின்னேர சரியான முடிவுக்கு வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.