Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் சிங்களவன் தான்! ஆனாலும் இடமளிக்கமாட்டேன் - யாழில் தேரர் விடாபிடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இராணுவம் இராணுவத்தின் வேலைகளை செய்ய வேண்டும். மதகுருமார்கள் ஆலயம் தொடர்பான வேலைகளை செய்ய வேண்டும்.

புதிதாக அமைக்கப்படும் விகாரைகள்

 

எனினும் மாறி மாறி வேலைகளை செய்யக்கூடாது. பழமையான கோயில்கள் இருந்தால் பரவாயில்லை.

நான் சிங்களவன் தான்! ஆனாலும் இடமளிக்கமாட்டேன் - யாழில் தேரர் விடாபிடி | New Buddist Temples In Sri Lanka Monk Agist

 

புதிது புதிதாக நிர்மாணிக்கப்படும் வழிபாட்டிடங்களேயே நான் கூறுகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நெடுந்தீவு, மாதகலில் இவ்வாறு விகாரைகளை அமைக்க வந்த போதும் நான் அதற்கு இடமளிக்கவில்லை.

நான் எப்போதும் மக்கள் பக்கத்தையும் சரியான பக்கத்தையுமே எடுப்பேன். நான் சிங்களவன் தான். இருந்தாலும் நேர்மை இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/new-buddist-temples-in-sri-lanka-monk-agist-1683881904?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இராணுவம் இராணுவத்தின் வேலைகளை செய்ய வேண்டும். மதகுருமார்கள் ஆலயம் தொடர்பான வேலைகளை செய்ய வேண்டும்.

புதிதாக அமைக்கப்படும் விகாரைகள்

 

எனினும் மாறி மாறி வேலைகளை செய்யக்கூடாது. பழமையான கோயில்கள் இருந்தால் பரவாயில்லை.

நான் சிங்களவன் தான்! ஆனாலும் இடமளிக்கமாட்டேன் - யாழில் தேரர் விடாபிடி | New Buddist Temples In Sri Lanka Monk Agist

 

புதிது புதிதாக நிர்மாணிக்கப்படும் வழிபாட்டிடங்களேயே நான் கூறுகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நெடுந்தீவு, மாதகலில் இவ்வாறு விகாரைகளை அமைக்க வந்த போதும் நான் அதற்கு இடமளிக்கவில்லை.

நான் எப்போதும் மக்கள் பக்கத்தையும் சரியான பக்கத்தையுமே எடுப்பேன். நான் சிங்களவன் தான். இருந்தாலும் நேர்மை இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/new-buddist-temples-in-sri-lanka-monk-agist-1683881904?itm_source=parsely-detail

இவர், லட்சத்தில் ஒரு பிக்கு.
இதே…. மனப்பான்மை, மற்றப் பிக்குகளிடமும் இருந்தால்…
நாட்டில் பாதிப் பிரச்சினை தீர்ந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த கையோட தான் இந்த பவுத்த விகாரைகள் கலாச்சாரம் மேலோங்கியது, அப்போ; இங்கே இருந்த பவுத்த பிக்கு கூறியது "வடக்கில் தமக்கு பாதுகாப்பில்லை." என பொய் எதற்கு? வடக்கில் பிக்குவுக்கு  அப்படியொரு பாதுகாப்பு தேவை? அவர் கூறியது போல் பிரச்சனை அவர்களுக்கு இல்லை, அப்படியானால் மஹிந்தவும் அரசும் சொன்னது பொய்யல்லவா? வடக்கிற்கும் தெற்கிற்குமிருந்த அச்சுறுத்தலை முறியடித்துவிட்டோம் என கூறுவது.  அப்படியிருந்தும் இராணுவம் சூழ உள்ள இடத்தில அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? அல்லது அப்படி கேட்பது நிஞாயமா? இருந்தாலும் ஒரு பிக்குவுக்கு பாதுகாப்பில்லாத இடத்தில எப்படி இத்தனை விகாரைகள் முளைத்தன?

32 minutes ago, தமிழ் சிறி said:

இதே…. மனப்பான்மை, மற்றப் பிக்குகளிடமும் இருந்தால்…
நாட்டில் பாதிப் பிரச்சினை தீர்ந்திருக்கும்

   அவர்கள் பிக்குகளல்ல நிலம் பறிக்கும் மக்குகள்!                  

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100003326753657/videos/2032058540323126  👈

வடபகுதியில் அதிக விகாரைகள் கட்டுவதை எதிர்த்த.. நயினாதீவு விகாராதிபதி.

👆  அவர் தமிழில்  வழங்கிய பேட்டியை கேட்க, மேலே உள்ள இணைப்பை அழுத்தவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் சொல்வதால் என்ன பிரயோசனம்? எங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு இவர் சொல்கிறார். சிங்கள மக்களுக்கு சொல்லட்டும், அவர்களுக்கு விழிப்பேற்படுத்தட்டும், மாற்றங்களை கொண்டு வரட்டும். தமிழர் மரபு கட்டிடங்களை இவர்கள் உரிமை கோருவதும் பொறுப்பெடுப்பதும் பறிப்பதும் தவறு. இதொன்றும் வீரமில்லை. அரசு சிங்களம், பாதுகாப்புப்படை சிங்களம், அதிகாரம் அவர்கள் கையில், அவர்களை அடித்து, மிரட்டி, விரட்டி, பறிப்பது தர்மமுமில்லை, மதமுமில்லை, வீரமுமில்லை. யாழ்ப்பாணத்தில் சொகுசாக இருந்த ஒரு பிக்குத்தான் தங்களுக்கு வடபகுதியில் பாதுகாப்பில்லை என பிரச்சாரம் செய்தவர். எல்லோருக்கும் தெரியும்; தமிழில் இரண்டு வார்த்தை பேசினால் சிங்களவன் நல்லவன் என்று தமிழன் பிரண்டு விடுவான் என்பது.   

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிக்கு தனக்குப் போட்டி அதிகரிக்குதே என்ற கவலையில் சொல்லுறாரா.. இல்ல தமிழ் மக்கள் மீதான அக்கறையில் சொல்லுறாரா. ஏனெனில்.. இவர் அன்று செய்ததை இவரின் கூட்டுகள் இன்று செய்கின்றன. அடிப்படையில் இவர்களை இயக்குவது.. சிங்கள பெளத்த பேரினவாதம் என்ற பலமான ஒரு கட்டமைப்பு. 

மேலும்.... தமிழர் நிலத்தில்..

இந்த நிலைக்கு காரணம்.. மத்தியஸ்தம் என்றும்.. இணைத்தலைமை என்றும் வந்து.. எம் இனத்தின் இராணுவ சம பலத்தை அழித்து.. சிங்கள பெளத்த பேரினவாதிகளிடமும்.. அதன் இராணுவ இயத்திரத்திடமும் எம்மை ஆக்கிமிப்புக்குள் கொண்டு வந்த அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளும்.. ஹிந்தியாவும் தான். 

அவர்கள் தான் தமிழ் மக்களின் இந்த நிலைக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். இராணுவ ஆக்கிரமிப்பு நீக்கம் குறித்தோ.. இந்த திட்டமிட்ட மத நில ஆக்கிரமிப்புக்கள் குறித்தோ பேசாது மெளனம் காப்பதும் இதே சக்திகள் தான். இதே சக்திகள் தான் சர்வதே அரங்கில்.. எம் இனம் சந்தித்ததை இனப்படுகொலை என்று ஏற்க மறுப்பதோடு.. போர்க்குற்றங்களையும் நீர்த்துப் போகச் செய்து.. இனங்களிடையே நல்லிணக்கம் என்ற பசப்புப் பேசி.. சிங்கள பெளத்த மயமாக்கலை ஊக்குவித்து நிற்கின்றன.

இந்தச் சக்திகளிடமும் தான் தமிழ் மக்கள் நீதி கேட்க வேண்டியுள்ளது. இவ்வளவு நடத்தும் அண்மையில் உள்ள தமிழகத்தில் இருந்து அதன் ஆட்சியாளர்களிடம் இருந்தோ பிற திராவிட சக்திகளிடம் இருந்தோ ஒரு கண்டனக் குரல்கூட இல்லை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2023 at 23:57, பெருமாள் said:

வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை

"வடக்கில் பௌத்தர்கள் இவ்வளவு குறைவாக இருக்கிறார்களே" என்று இந்தப் பிக்கு அங்கலாய்ப்பது போலத்தான் எனக்கு தெரிகிறது. பிக்குகள் தமிழ் பேசினால் கேட்கலாம் ஆனால் அதை அப்படியே  நம்புவது அடி முட்டாள்தனம். ஒரு அரசியல்வாதிக்கு இருக்கும் அதே நரித்தனத்துடன் இந்த பிக்கு தமிழன் எதைக் கேட்க விரும்புவானோ அதைப் பேசி தனது காரியத்தை கொண்டுபோகுது. இந்த வார்த்தைகள் எமக்கு உதவாது.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற தமிழர்களின் பழமொழி சிங்கள பௌத்தர்களுக்கும் பொருந்தாமலா போகும். இப்போதுதானே விகாரைகள் நிறுவப்படுகின்றன குடிகள் பின்னர் வந்து சேருவார்கள் என்பதுதானே சிங்கள இனவாதிகளின் நோக்கம். அது தெரியாமலா இந்த பிக்கு தமிழனுக்கு கதை சொல்கிறார்.

"வடக்கில் பௌத்தர்கள்  குறைவாக இருக்கிறார்கள் "  என்றால் இவர் எந்த காலப்பகுதியை இங்கு ஒப்பிடுகிறார். வடக்கில் இப்போது பௌத்தர்கள் தேவைக்கும் அதிகமாகவே கொண்டுவரப்பட்டு அல்லது நிர்ப்பந்த்தத்தின் பேரில்  குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள். தமிழ் பிரதேசங்கள் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, vanangaamudi said:

"வடக்கில் பௌத்தர்கள்  குறைவாக இருக்கிறார்கள் "  என்றால் இவர் எந்த காலப்பகுதியை இங்கு ஒப்பிடுகிறார்.

இவர் நாகவிகாரைக்கு வந்த காலப்பகுதியில் எத்தனை பவுத்தர் இங்கு இருந்தனர்? ஏன் வந்தார்? எதற்காக இவ்வளவு விசாலமாக்கினார் என்பதை விளக்க முடியுமா இவரால்?                

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.