Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் விகாரைகளை பாதுகாக்குமாறு ஆணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் விகாரைகளை பாதுகாக்குமாறு ஆணை!

May 21, 2023

Maha-sangam.jpg?resize=600%2C400

நாட்டில் இனவாத மற்றும் மதவாத நெருக்கடி நிலை உருவாகி வருவதை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழும் சம்பவங்கள் மூலம் தெரியவருவதால், இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி பார்ஷவ மகா நாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரினால் இந்த விசேட மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களை சனிக்கிழமை (20.05.23) சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போதே அஸ்கிரி மஹாநாயக்க தேரர் இந்த விசேட செய்தியை கையளித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் உள்ள தனித்துவமான வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரைகளை புனரமைப்பதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு அந்த பணிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மூன்று விடயங்கள் அடங்கிய குறிப்பாணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது தீவின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொல்பொருள் இடங்கள் தொடர்பான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், வெளி தரப்பினர் வழங்கும் உதவிகளை அதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

https://globaltamilnews.net/2023/190832/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்  பகுதியில் உள்ள விகாரைகளுக்குள்...
போதைப் பொருள் பாவனை, ஓரின சேர்க்கை, பாலியல் சில்மிஷம்  செய்யும் 
பிக்குகளிடமிருந்து...  விகாரைகளை யார் பாதுகாப்பது.

சிங்கள  ஊரில் உள்ள விகாரைகளில், மாஃபியா வேலை செய்து கொண்டு,
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் மூக்கை நுழைக்குதுகள்... மர மண்டைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆணை Vs வேண்டுகோள்? 

தலையங்கம் அருமை 🤨

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு விகாரைக்கு பக்கத்திலும் ஒவ்வொரு இராணுவ முகாம் அமைக்க வேண்டும் என ஆணையிடுகின்றேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நாட்டில் இனவாத மற்றும் மதவாத நெருக்கடி நிலை உருவாகி வருவதை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழும் சம்பவங்கள் மூலம் தெரியவருவதால்,

உருவாக்குபவர்கள் யாரோ? தாங்களே உருவாக்குவது, உடைப்பது. பிறகு மற்றவர் தலையில் கட்டுவது நல்ல புத்த தர்மம்.

5 hours ago, கிருபன் said:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் உள்ள தனித்துவமான வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரைகளை புனரமைப்பதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு அந்த பணிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

வடக்கு கிழக்கு வரலாற்றுச் சிறப்பை பாதுகாக்கவேண்டியது அந்தப் பிரதேசத்தின் பொறுப்பு. அந்த பிரதேசம், வரலாறு தெரிந்தவர்கள் யாரும் சேர்க்கப்படாமல், அதோடு தொடர்பு படாதவர்கள் தொல்லியல் ஆராய்ச்சி செய்யினமாம், பாதுகாக்கினமாம். நல்ல வேடிக்கை! எல்லாம் சுத்த முட்டாளுகள். ஒன்று சொன்னால் அத்தனையும் தலையாட்டும். வீடு எரிக்கிற ராசாவுக்கு கொள்ளி கொடுக்கிற மந்திரிமார். இவர்களின் தான்தோன்றித்தனமான அடடூழியம் அழிவில் முடியப்போகுது. இலங்கையை விட்டு இந்த சாபக்கேடு துடைத்தெறியப்படபோகுது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4070.jpg

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

ஆணை Vs வேண்டுகோள்? 

அவர்களது வேண்டுகோள் கோரிக்கை எல்லாம் ஆணை வடிவாகத்தான் வரும். 

சிங்களம் தமிழரை அடக்கியாண்டதும் விழுத்தியதும் அவர்களை சூறையாடுவதற்கே என்பது தெளிவாகிறது. மக்களை மீட்க போரிட்டோம் என்பதெல்லாம் உலகை ஏமாற்ற பாவித்த சொல்.  மக்கள் விடுதலையடைந்தனரா? அவர்களது நிலம் ஆக்கிரமிப்பு, பேச்சு சுதந்திரம் மறுப்பு, தேவையற்ற திணிப்பு. எங்கே மக்கள் விடுதலையடைந்தனர்? இன்னும் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறார்கள். மக்களை மீட்டவர்கள் வேலை முடிந்ததும் திரும்பாமல் இருப்பது ஏன்? அவர்கள் போரிட்டது நம்மை அடிமைகளாக கொள்வதற்கே. சர்வதேசம் அதற்கு ஒத்துழைத்தது என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

மொடடயடித்து , காவி உடுத்துவதினால் மாத்திரம் இவர்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றும் சீஷர்கள் ஆகிவிட மாடடார்கள். இவர்களின் மனம் சுத்தமாகும் வரைக்கும் இவர்களும் சிங்கள பவுத்த இனவாதிகளே.

இவர்களின் கோரிக்கைகள் நல்ல மனதுடன் , புத்தரின் போதனைகளுடன் இணைந்ததாக இருக்குமா இருந்தால் அதில் பிரச்சினை இல்லை.

இவர்கள் எண்ணமெல்லாம் இந்த நாட்டிடை சிங்கள பவுத்தமாகி மற்றைய இனங்களை அடிமையாக வைத்திருப்பதென்பதே. அந்த நிலைமை மாறும் வரைக்கும் இங்கு உள்ள பிரச்சினைகளுக்கு முடிவு என்பது கானல் நீரே.

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதத்தை இப்போ மாற்றுவழியில் செயற்படுத்துகிறார்கள். புலிகளை பயங்கரவாதிகள் என்று அழித்தார்கள். இனி ஆயுதத்தால் பகிரங்கமாக அழிக்க முடியாது, அடுத்த ஆயுதம் மதம். இதோடு நாடே இல்லாமல் அழியலாம், எப்படி சிர்த்தாத்தன் உலக துன்பங்களை கண்டு மனம்மாறி துறவியானாரோ அவ்வாறே பிக்குகளின் அடாவடிகளை கண்டு மக்கள் மனம் வெறுத்து இந்த மதத்தை விட்டு வெளியேறுவர். அதற்கு நமது ஆக்கள், அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் வரலாற்றை. இந்த பிக்குகளும் இனவாதிகளும் தங்கள் பிழைப்புக்காக வரலாற்றை திரித்து மக்களை ஏமாற்றி சிங்களமும் புத்தமுமே இந்த நாட்டுக்கு உரியன தமிழர் அதை திருடி வைத்து தங்களை தடுப்பதாக அவர்களுக்கு தெரிவிக்கிறார்கள். இனவாதிகள், திரும்பத் திரும்ப இது சிங்களபவுத்த நாடு, தமிழர்க்கு இங்கு எந்தவித உரிமையும் இல்லை என்று சொல்லி, சிங்கள  மக்களின் ஆழ் மனதில் இருத்துகிறார்கள். விடையம் தெரிந்தவர்களை பேசவிடாமல் அடக்கியும் கைது செய்தும் அச்சுறுத்துகிறார்கள். இதற்கு மனச்சாட்ச்சி உள்ள சிங்களமக்களும் சிங்களம் தெரிந்த தமிழ் மக்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.             

  • கருத்துக்கள உறவுகள்

அதனாலேயே நம் தலைவர்கள் வரலாறு கதைத்தால், இங்கு நடக்கும் அடாவடிகளை சொன்னால் இனவாதி என்றும் புலி என்றும் நல்லிணக்கத்தை கெடுக்கிறார்கள் என்றும் கூச்சல் போட்டு, பழி சொல்லி அடக்குகிறார்கள்.  தம்மை காப்பாற்றுகிறார்கள். உண்மையை சொன்னால் அவ்வளவு பயம் அவர்களுக்கு, அதை தாங்கிக்கொள்ளும் பெலன் அவர்களுக்கு இல்லை.  அதை சிங்கள மக்கள் அறிந்தால், தாம் ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது நன்றாகவே தெரியும் அவர்களுக்கு. அதையே எங்கள் எதிர்காலச்சந்ததியினரின் பாட நூல்களிலும் திணிக்கிறார்கள்.      

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.