Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதியை ரிஐடி விசாரணை பிரிவுக்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

05 JUN, 2023 | 02:24 PM
image
 

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரி.ஐ.டி) திங்கட்கிழமை (05) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

PHOTO-2023-06-05-11-30-37.jpg

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே புதன்கிழமை 07 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பிரிவு 01 இன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை தருவதற்கு, 2023 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/156964

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரி.ஐ.டி) திங்கட்கிழமை (05) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மழை விட்டும் தூவானம் விடுகுதில்லை.

இதனாலேயே போராளிகளை அணுக இன்னமும் தமிழ் மக்கள் பயப்படுகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

அண்மை காலங்களில் இவரின் முக புத்தக பதிவுகளில் மனம் நொந்தவராக காணப்பட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

மழை விட்டும் தூவானம் விடுகுதில்லை.

இதனாலேயே போராளிகளை அணுக இன்னமும் தமிழ் மக்கள் பயப்படுகிறார்களோ?

இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமே முன்னாள் போராளிகளுக்கு அணையாக இருக்க முடியும்.
முன்னாள் போராளிகளுக்கு புலம்பெயர் மக்கள் உதவினால் பயங்கரவாதிகளுக்கு ஊக்குவிப்பு பணம் வருகின்றதென சிங்கள இனவாதிகள் சட்டங்களை போடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரி.ஐ.டி) திங்கட்கிழமை (05) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

அதென்ன ரி ஐ டி? புதுசு புதுசாய் பயங்கரவாத விசாரணைப்பிரிவை உருவாக்கி  தமிழரை, முன்னாள் போராளிகளை விசாரிக்கிறார்களோ?. பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டோம் என்று முழங்குகிறார்கள், சமாதானம், நல்லிணக்கம் என்கிறார்கள், சட்டங்களை உருவாக்குகிறார்கள், விசாரிக்கிறார்கள், கைது செய்கிறார்கள், ஒன்றுமே புரியவில்லை. ஒன்று சொல்வார்கள்; குற்றமுள்ள நெஞ்சு எப்போதுமே குறுகுறுத்துக்கொண்டே இருக்குமாம். விசாரணை தம்மை செய்யாமலிருப்பதற்காக, நம்மை குற்றவாளியாக்குவது, தாம் செய்யும் அடாவடிகளை நிஞாயப்படுத்துவது. அரசியல் அதிகாரத்தை மறுப்பதற்க்கு எடுக்கும் தந்திரம். ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் அவர்கள் வராமல் இருப்பதற்கான செயற்பாடுகளை உருவாக்கி, தமிழருக்கு பேச்சுவாத்தையில் ஆர்வமில்லை குழப்புகிறார்கள் என்று நொண்டிச்சாட்டு வைப்பது. தமிழரை அடிமையாக வைத்து வதைப்பது என்பது அவர்களின் முடிவு. நம் முன்னைய, இன்றைய தலைவர்கள் நம்மை முழுவதுமாக அவர்களுக்கு கையளித்து தாம்  விலகிவிட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.