Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இந்திராகாந்தியின் படுகொலையை புகழும் நிகழ்வு - அலி சப்ரி கடும் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

08 JUN, 2023 | 10:46 AM
image
 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையை பொதுவில் புகழும்விதத்தில் கனடாவில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடும் கண்டனம்வெளியிட்டுள்ளார்.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள்  இந்திராகாந்தியின் படுகொலையை புகழும் விதத்தில் பொதுவெளியில் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.

oK7_Gj8xCbOGdNgr.jpg

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ள அலிசப்ரி; கருத்துசுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை போற்றுதல் என்ற போர்வையில் எந்த நாடும் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகளிற்கு புகலிடம் வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை புகழ்வதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால் நீங்கள் இன்னுமொருதலைமுறை இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதற்கு நீங்கள்அனுமதிக்கின்றீர்கள் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157227

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் கருத்து சொல்வது என்று இல்லாமல் போய் விட்டது. தமிழ் மக்களுக்கு ஒரு கருத்து. சீக்கியருக்கு ஒரு கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

யார் யார் கருத்து சொல்வது என்று இல்லாமல் போய் விட்டது. தமிழ் மக்களுக்கு ஒரு கருத்து. சீக்கியருக்கு ஒரு கருத்து.

Al-Qaida-Chef: US-Spezialeinheiten töten Osama bin Laden

சொன்ன ஆள்... தொப்பி போடுற ஆள்.
கருத்து அப்பிடி, இப்பிடித்தான் இருக்கும். 😂
ஒசாமா பின் லாடனை,  அமெரிக்கா கொன்றதற்கும்... இவர் கருத்து சொல்லலாம்.
 ஏன்... பம்மிக் கொண்டு நிற்கிறார் என்று தெரியவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியர்கள் தம்மை  அழித்தவரை  தாம் அழித்த  தினத்தை  கொண்டாடுகிறார்கள்:

இவருக்கேன் குடும்பி ஆடுது???

உண்மையில் இந்திரா  காந்திக்காக  ஈழத்தமிழ்கள்  தான்  அனுதாபப்படணும்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

சீக்கியர்கள் தம்மை  அழித்தவரை  தாம் அழித்த  தினத்தை  கொண்டாடுகிறார்கள்:

இவருக்கேன் குடும்பி ஆடுது???

உண்மையில் இந்திரா  காந்திக்காக  ஈழத்தமிழ்கள்  தான்  அனுதாபப்படணும்?

இந்தியாவைத் தமிழருக்குப் பூச்சாண்டியாகக் காட்டுவதில் இவர் இப்போது மும்முரமாக இருக்கிறார். இன்னொரு ஆயுதப் போராட்டம் புலம்பெயர் தமிழரின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கும் பட்சத்தில் இந்தியா நிச்சயம் அதனை அழிக்கும் என்று சில நாட்களுக்கு முன்னர் அச்சுருத்தியிருந்தார். இது இரு விடயங்களைக் கூறுகிறது. முதலாவது, ஈழத்தமிழரை தொடர்ந்தும் நசுக்கிவரும் சிங்களப் பேரினவாதத்திற்கெதிராக ஈழத்தமிழினம் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தில் இறங்கும் என்று சிங்களவர்களும், அவர்களின் முஸ்லீம் அடிமைகளும் எதிர்பார்க்கிறார்கள் என்பது. இரண்டாவது, 2009 இல் தமிழரின் ஒரே நம்பிக்கையான ஆயுதப் போராட்டத்தை முன்னின்று அழித்தது இந்தியா தான் என்பது.

இந்திரா அம்மையார் பற்றி 1984 வரை தமிழர்கள் வைத்திருந்த கணிப்பு மிகவும் தவறானது. அவர் கூட ஈழத்தமிழரைப் பாவித்து இந்திய நலன்களைத்தான் உறுதிப்படுத்திக்கொண்டாரே ஒழிய, தமிழருக்கான தீர்வொன்று வேண்டுமென்று அவர் முயலவில்லை. அப்படி முயன்றிருந்தால், அவரால் நிச்சயமாக அதனைச் செய்திருக்க முடியும். அவரால் முடிந்திருக்காவிட்டாலும்கூட, அவரது மகனான ரஜீவினால் செய்திருக்க முடியும். ஆனால், அவர்களதோ, இந்தியாவினதோ நோக்கம் தமிழர்களுக்கான விடுதலையல்ல. மாறாக இந்தியாவினதும், காங்கிரஸினதும் நலன்கள் மட்டும்தான்.

பொற்கோயிலுக்குள் தனது ராணுவத்தை அனுப்பி அங்கு தஞ்சமடைந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள், பிள்ளைகள், வயோதிபர்கள் உட்பட சீக்கியர்களைப் பலிகொண்டதற்காகவே அவரை சீக்கிய மெய்ப்பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றார்கள். அவர்களைப்பொறுத்தவரை அது சரியானதுதான், என்னாலும் அதனை புரிந்துகொள்ளமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்னத்தையோ சுத்தி வளைச்சு சொல்ல வாறார்...மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ..கஸ்டப்படுகிறார்....கனடாவிலை பாச்சா பலிக்காது..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இந்தியாவைத் தமிழருக்குப் பூச்சாண்டியாகக் காட்டுவதில் இவர் இப்போது மும்முரமாக இருக்கிறார். இன்னொரு ஆயுதப் போராட்டம் புலம்பெயர் தமிழரின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கும் பட்சத்தில் இந்தியா நிச்சயம் அதனை அழிக்கும் என்று சில நாட்களுக்கு முன்னர் அச்சுருத்தியிருந்தார். இது இரு விடயங்களைக் கூறுகிறது. முதலாவது, ஈழத்தமிழரை தொடர்ந்தும் நசுக்கிவரும் சிங்களப் பேரினவாதத்திற்கெதிராக ஈழத்தமிழினம் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தில் இறங்கும் என்று சிங்களவர்களும், அவர்களின் முஸ்லீம் அடிமைகளும் எதிர்பார்க்கிறார்கள் என்பது. இரண்டாவது, 2009 இல் தமிழரின் ஒரே நம்பிக்கையான ஆயுதப் போராட்டத்தை முன்னின்று அழித்தது இந்தியா தான் என்பது.

இந்திரா அம்மையார் பற்றி 1984 வரை தமிழர்கள் வைத்திருந்த கணிப்பு மிகவும் தவறானது. அவர் கூட ஈழத்தமிழரைப் பாவித்து இந்திய நலன்களைத்தான் உறுதிப்படுத்திக்கொண்டாரே ஒழிய, தமிழருக்கான தீர்வொன்று வேண்டுமென்று அவர் முயலவில்லை. அப்படி முயன்றிருந்தால், அவரால் நிச்சயமாக அதனைச் செய்திருக்க முடியும். அவரால் முடிந்திருக்காவிட்டாலும்கூட, அவரது மகனான ரஜீவினால் செய்திருக்க முடியும். ஆனால், அவர்களதோ, இந்தியாவினதோ நோக்கம் தமிழர்களுக்கான விடுதலையல்ல. மாறாக இந்தியாவினதும், காங்கிரஸினதும் நலன்கள் மட்டும்தான்.

பொற்கோயிலுக்குள் தனது ராணுவத்தை அனுப்பி அங்கு தஞ்சமடைந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள், பிள்ளைகள், வயோதிபர்கள் உட்பட சீக்கியர்களைப் பலிகொண்டதற்காகவே அவரை சீக்கிய மெய்ப்பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றார்கள். அவர்களைப்பொறுத்தவரை அது சரியானதுதான், என்னாலும் அதனை புரிந்துகொள்ளமுடியும்.

நன்றி ரகு

எனக்கு உங்கள் கருத்துடன் முரண்பாடு இல்லை. ஆனால் அவ்வாறு நம்பும் எம்மக்கள் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாப் பாரளுமன்றத்தில் உரையாற்ற சப்பிரிக்கு அழைப்பு..அவர் இலங்கைப் பாராளுமன்ற குண்டர் படையுடன் இந்த சமருக்கு வருவாராம்..கருத்துமிக்க பேச்சாளர்..🙃

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

சீக்கியர்கள் தம்மை  அழித்தவரை  தாம் அழித்த  தினத்தை  கொண்டாடுகிறார்கள்:

இவருக்கேன் குடும்பி ஆடுது???

உண்மையில் இந்திரா  காந்திக்காக  ஈழத்தமிழ்கள்  தான்  அனுதாபப்படணும்?

இந்தியாவின் நண்பன் என்று காட்டிட முயட்சிக்கிறார்.

தனது பதவியை தக்க வைக்கவும், எஜமான் விசுவாசத்தை காட்டிக்கொள்ளவும் கனடாவுக்கு எதிரான கண்டனத்தை வேறு விதமாக காண்பித்திருக்கிறார். சோழியன் குடும்பிசும்மா ஆடாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.