Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுறா தாக்கி உல்லாசப்பயணி  எகிப்தில் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4128.jpg

எகிப்து நாட்டின் ஹூர்கடா நகரத்தில் உள்ள கடற்கரை கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு அற்புதமான இடமாக இருக்கும். பளிங்கு போன்ற தெளிவான கடல் நீர், 37பாகை செல்சியஸ் வெப்பநிலை என்பன அந்தக் கடலில் நீராட, சுழியோடி மகிழ, கடற்கரையில் அமர்ந்து சூரியக் குளியல் செய்ய என பல உல்லாசப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும்.

இன்று  நிலமை மாறி இருக்கிறது. கடற்கரையின் வெள்ளை மணலில் மனிதக் காலடிகளைக் காணவில்லை. அதன் 75 கிலோ மீற்றர் நீள சுற்றளவான கடற்கரை அரசாங்கத்தால் இப்பொழுது பாவனைக்குத் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

08.06.2023 வியாழக்கிழமை Elysees Dream Beach Hotelக் கு முன்னால் உள்ள கடலில் குளித் துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சுறாவினால் கொல்லப்பட்ட பின்னரே இந்த நிலை அங்கு வந்திருக்கிறது.

ரஸ்ய நாட்டைச் சேர்ந்த 23 வயதான வால்டிமியர் பொப்போவ்  தனது தந்தையுடனும் காதலியுடனும் ஒரு இனிய  நாளை அனுபவிக்க அன்று கடற்கரைக்கு  வந்திருந்தான். ஆனால் நடந்ததோ துன்பமாகிப் போனது

மொகமட் ஆறு வருடங்களாக அங்கு உயிர் காப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அன்று அவருடன் சேர்ந்து மேலும் மூன்று பணியாளர்கள் இருந்தார்கள். வானிலை அன்று நன்றாக இருந்ததுகரையில் பலர் சூரியக் குளியலிலும் சிலர் கடலில் நீச்சலிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த தனது காதலியை மகிழ்விக்க  வால்டிமியர் கடலில் இறங்கினான். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மொகமட்டுக்கு திடீரென்று கடலில் நீந்திக் கொண்டிருந்த பலர் நீரில் குதித்துக் கொண்டு ஓடி வருவதைக் கண்டு  ஏதோ விபரீதம் நடக்கிறது என்பது தெரிந்ததுபோதாததற்கு கரையில் நின்று பலர் கடலைப் பார்த்து ஆர்ப்பரித்திருக்கிறார்கள். மொகமட்  கடலுக்குள் நோட்டமிட்ட போது ஜெட்டியிலிருந்து சில மீட்டர் தூரத்தில் தண்ணீரில் ஒரு நபர் மீண்டும் மீண்டும் மூழ்குவதை கவனிக்க முடிந்தது.  

மொகமட் உடனடியாக படகை எடுத்துக் கொண்டு வேகமாக  அந்த மனிதன் மூழ்கும் இடத்துக்கு துடுப்பை வலித்துக் கொண்டு சென்று  பார்த்தால், அந்த இடத்தில் உள்ள நீர் இரத்தத்துடன் கலந்து சிவப்பாகிப் போயிருந்தது. மொகமட்டின் கண்களில் முதலில் பட்டது ஒரு கை இழந்த மனிதன், அந்த மனிதனை தொடர்ந்து  சுறா தாக்கிக் கொண்டிருந்தது. அந்த மனிதன்தான் வால்டிமியர்.

வால்டிமியரை இனிக்   காப்பாற்ற முடியாது என்பதை மொகமட் உடனடியாக உணர்ந்து கொண்டார். சம்பவம் நடந்த இடத்துக்கு சில மீற்றர் தள்ளி  அதிர்ச்சியில் நீரில் அசையாமல் வால்டிமேரின் காதலி இருந்தாள். மொகமட் அவளை உடனடியாக படகில் இழுத்துப் போட்டுக் கொண்டு கரைக்கு விரைந்து கரையில் அவளை விட்டு விட்டு கடலைப்  பார்த்தால் கடல் மேற்பரப்பில் துண்டு துண்டாக மனித உடல் மிதந்து கொண்டிருந்தது.

உடனடியாக மீனவரான ஹம்டி தனது 15 தோழர்களைத் திரட்டி இரண்டு படகுகளில் சென்று அந்தச் சுறாவை வேட்டையாடி, கரைக்கு இழுத்து வந்தார். வயிறு உப்பிப் போய் பெரிதாக இருந்ததால் அந்தச் சுறா கருவுற்றிருக்கலாம் என்று எல்லோரும் கருதினார்கள் ஆனால் சுறாவை வெட்டிப் பார்த்த போது அங்கே வால்டிமேரின் ஒரு கையும் அவனது தலையும் இருந்தது.

“வால்டிமேர் ரஷ்யாவில் இருந்தால் போராட்டத்துக்குப் போக வேண்டும். இங்கிருந்தால் போராட்டத்துக்குப் போக வேண்டியதில்லை. அதற்காகவே அவனுக்காக எகிப்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கி இருந்தேன். இந்தக் கடற்கரையில் இருந்து காரில் எட்டு நிமிடங்கள்  பயணிக்கும் தூரத்தில்தான் அந்தக் குடியிருப்பு இருக்கிறது. ஆனால் ஒரு  இருபது செக்கன்களுக்குள் எல்லாமே  என் கண்முன்னே நடந்து முடிந்துவிட்டதுஎன்று அவனது தந்தை தாளாத துயரத்தோடு சொன்னார்

Quelle: Twitter

 

 

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

சுறாக்கள் மனிதர்களை தாக்குவது அரிதானவை கொலிவூட் படங்கள் மிகைபடுத்தபட்டு காட்சிகள் அமைக்கபட்டு உள்ளன .

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

ரஸ்ய நாட்டைச் சேர்ந்த 23 வயதான வால்டிமியர் பொப்போவ்  தனது தந்தையுடனும் காதலியுடனும் ஒரு இனிய  நாளை அனுபவிக்க அன்று கடற்கரைக்கு  வந்திருந்தான். ஆனால் நடந்ததோ துன்பமாகிப் போனது.

இது உக்கிரேன் சுறா போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சுறாவைப் பொறுத்தமட்டில் இது அதற்கொரு உணவு அவ்வளவே .........துரதிஷ்டம் அவர் இரையாகிப் போனார்.......!   😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாவி சுறா வஞ்சம் கொண்ட மனிதர்களினால் கொல்லப்பட்டு விட்டது. பாவம். அது என்ன குற்றம் செய்தது????

சுறா வாழும் இடத்திற்கு மனிதன் சென்றானா? அல்லது  மனிதன் வாழும் இடத்திற்கு சுறா சென்றதா?

சுறாவிற்கு அஞ்சலிகள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.