Jump to content

டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Image

Image

ஐந்து பேருடன் சென்ற  "டைட்டன்" நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது, 
இது 1 ஆம் நாளிலிருந்து கீழே செல்லும் வழியில் வெடித்தது! 
 
பிற் குறிப்பு: இந்தப் படத்தின் உண்மைத் தன்மை பற்றி, உறுதிப் படுத்த முடியவில்லை.
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Titanic Missing Sub Titan: விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது? அடுத்து என்ன நடக்கும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டைட்டானிக் அருகே கின்னஸ் சாதனை படைக்க விரும்பிய 19 வயது சுலேமான் தாவூத்

தாவூத் குடும்பம்

பட மூலாதாரம்,DAWOOD FAMILY

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நோமியா இக்பால் & செல்சி பெய்லி
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த 19 வயதேயான சுலேமான் தாவூத், உலக சாதனையை முறியடிக்க விரும்பியதால், தனது ரூபிக்ஸ் கியூப்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாய் கிறிஸ்டின் தாவூத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக நீர்மூழ்கியின் சென்ற சுலேமானும் அவரது தந்தையும் ஷாஜதாவும் நீர்மூழ்கி நசுங்கி நொறுங்கிய விபத்தில் இறந்தனர்.

ரூபிக் கியூப்பை கொண்டு உலக சாதனையை பதிவு செய்வதற்காக தந்தை ஷாஜதா தனது கேமராவைக் கொண்டு சென்றிருக்கிறார். கின்னஸ் உலக சாதனைக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார்.

டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளான நேரத்தில் கிறிஸ்டின் தாவூதும் கடலின் மேற்பரப்பில் நீர்மூழ்கிக்கு உதவுவதற்காக நின்று கொண்டிருந்த போலார் பிரின்ஸ் கப்பலில் இருந்தனர். அப்போதுதான் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.

"அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு அந்த நேரத்தில் புரியவில்லை. பின்னர் நீர்மூழ்கி அங்கிருந்து கீழ்நோக்கிச் சென்றது," என்று கிறிஸ்டின் கூறினார்.

 

டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குப் பிறகு தாவூத் குடும்பத்தினர் அளித்த முதல் பேட்டி இதுவாகும்.

டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்க்க தனது கணவருடன் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

"நான் பின்வாங்கிவிட்டு, [சுலேமானை] அழைத்துச் செல்ல இடம் கொடுத்தேன். ஏனென்றால் அவன் உண்மையில் செல்ல விரும்பினான்” என்றார் கிறிஸ்டின்.

சுலேமான், அவரது தந்தை ஷாஜதா தாவூத், மேலும் மூன்று பேர் நீர்மூழ்கியில் இறந்தனர். டைட்டனுக்குச் சொந்தமான ஓஷன்கேட்டின் 61 வயதான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு கடற்படையின் முன்னாள் ஆழ்கடல் வீரர் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் அந்த மூவர்.

தனது மகன் சுலேமான் ரூபிக்ஸ் கியூப்பை மிகவும் நேசித்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின் தாவூத்.

போகுமிடமெல்லாம் ரூபிக்ஸ் கியூபை எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்ட சுலேமான். 12 வினாடிகளில் கியூபை சரி செய்து பார்வையாளர்களை திகைக்க வைத்ததாகவும் கூறினார்.

கிறிஸ்டின் தாவூத்
 
படக்குறிப்பு,

கிறிஸ்டின் தாவூத்

டைட்டானிக் கப்பலில் 3,700 மீட்டர் கடலுக்கு அடியில் ரூபிக்ஸ் கியூபை நான் தீர்க்கப் போவதாக சுலேமான் கூறிச் சென்றதாகவும் கிறிஸ்டின் தெரிவித்தார்.

சுலேமான் பிரிட்டனின் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தின் மாணவர். பிரிட்டனில் வசித்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத், பாகிஸ்தானின் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தந்தையர் தினத்தன்று 17 வயதான மகள் அலினா, உட்பட குடும்பத்தினர் டைட்டானை நோக்கிய பயணத்துக்காக போலார் பிரின்ஸ் கப்பலில் ஏறினர்.

கணவரும் மகனும் டைட்டன் நீர்மூழ்கியில் ஏறுவதற்கு முன் சில நிமிடங்களில் அவர்கள் கட்டிப்பிடித்து கேலி செய்து கொண்டிருந்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின்.

"நான் அவர்களை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தேன். ஏனென்றால் அவர்கள் இருவரும் மிக நீண்ட காலமாக டைட்டானிக்கை பார்க்க விரும்பினர்" என்று அவர் கூறினார்.

தாவூத் குடும்பம்

பட மூலாதாரம்,ENGRO CORPORATION/DH GROUP

 
படக்குறிப்பு,

ஷாஜதா மற்றும் சுலேமான் தாவூத்

தனது கணவர் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள அதீத ஆர்வம் கொண்டிருந்தார் என்று கூறுகிறார் கிறிஸ்டின். இரவு உணவிற்குப் பிறகு தங்களை இது தொடர்பான ஆவணப்படங்களைப் பார்க்க வைத்ததாகவும் அவர் கூறுகிறார்.

"குழந்தை போன்ற உற்சாகம் அவருக்குள் இருந்தது," என்று அவர் கூறினார்.

கணவரும் மகனும் திரும்பி வருவதற்காக கிறிஸ்டின் தாவூத்தும், மகள் அலினாவும் போலார் பிரின்ஸ் கப்பலில் காத்திருந்தார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல தேடல் மற்றும் மீட்பு பணியில் இருந்த நம்பிக்கை குறைந்து போனது.

"96 மணிநேரத்தை கடந்தபோது நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்," என்றார் கிறிஸ்டின்.

அப்போதுதான் தன் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பியதாக கூறினார். "நான் மோசமான நிலைக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்”

ஆனால் மகள் அலினாவுக்கு கூடுதலாகச் சற்று நேரம் நம்பிக்கை இருந்தது. "அமெரிக்காவின் கடலோரப் படையின் அழைப்பு வரும் வரை அவள் நம்பிக்கை இழக்கவில்லை. சிதைவுகளைக் கண்டுபிடித்ததாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தபோது அதுவும் முடிந்துவிட்டது."

தாவூத் குடும்பம் சனிக்கிழமை செயின்ட் ஜான்ஸுக்குத் திரும்பியது. ஞாயிற்றுக்கிழமை ஷாஜதா மற்றும் சுலேமானுக்கு இறுதிச் சடங்கு நடத்தியது.

டைட்டானிக்

பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY

தானும் மகளும் சுலேமானின் நினைவாக ரூபிக்ஸ் கியூப்பை முடிக்க கற்றுக் கொள்ள முயற்சிப்போம் என்றும், தனது கணவரின் பணியைத் தொடர விரும்புவதாகவும் கூறினார் கிறிஸ்டின்.

"அவர் பல செயல்களில் ஈடுபட்டார். பலருக்கு உதவினார். அந்த மரபைத் தொடரவும் விரும்புகிறேன்.. இது என் மகளுக்கும் மிகவும் முக்கியமானது."

விபத்து தொடர்பான விசாரணைகள் குறித்து பேச கிறிஸ்டின் மறுத்துவிட்டார்.

"அவர்களது பிரிவால் துன்புறுகிறேன்," அவர் ஆழமாக மூச்சு விட்டார்.

"நான் உண்மையில் அவர்கள் இல்லாததை உணர்கிறேன்"

https://www.bbc.com/tamil/articles/cqvqpe3xe1xo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2023 at 15:16, Justin said:

ஒரு குறுகிய 20 அடிகள் நீள உருளைக்குள், ஆழ் சமுத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒக்சிசனும் வெப்பநிலையும் குறைந்து, இறப்பதென்பது கொடுமையான விடயம். இது போன்ற தண்டனையைப் பெறுவதற்கு இந்த ஐந்து பேரும் செய்த குற்றங்கள் செல்வந்தர்களாக இருப்பதும், தங்கள் செல்வத்தைப் பாவித்து ஒரு தனித்துவமான அனுபவத்தைப் பெற முயன்றமையும் மட்டும் தான் என நினைக்கிறேன்.

 

என்ன நடக்குது என்பதை உனரும்முன்பே  உள்ளிருந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்று சொல்கிறார்கள் உடல் கூட சில செக்கன்களில் காணாமல் போய் விடும் பாரிய அழுத்த வெடிப்பு காரணமாக என்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டைட்டன் நீர்மூழ்கி மீட்பு: உள்ளே என்னென்ன கிடைத்திருக்கின்றன?

டைட்டன் நீர்மூழ்கி மீட்பு

பட மூலாதாரம்,SHUTTERSTOCK

28 ஜூன் 2023, 23:17 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்த நீர்மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர். டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்கள் கனடாவின் செயின்ட் ஜான்ஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டன.

டைட்டனின் தரையிறங்கும் சட்டமும் பின்புற உறையும் இந்தப் பாகங்களில் அடங்கும் என கடலோரப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் இந்தச் சிதைவுகளை முறையான பகுப்பாய்வு செய்வார்கள் என்று கடலோரப் படை தெரிவித்துள்ளது.

 

வடக்கு அட்லாண்டிக்கில் 3,800 மீ (12,500 அடி) ஆழத்தில் மூழ்க்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக ஜூன் 18-ஆம் தேதி சென்ற 5 பேரும் இறந்தனர்.

இந்த விபத்துக்குப் பிறகு முதல் முறையாக டைட்டனின் பாகங்கள் வெளி உலகுக்குக் காட்டப்படுகின்றன.

புதன்கிழமை கனடாவின் செயின்ட் ஜான்ஸில் உள்ள ஹொரைசன் ஆர்க்டிக் கப்பலில் இருந்து டைட்டன் நீர்மூழ்கியின் உலோகச் சிதைவுகள் இறக்கப்பட்டன.

டைட்டன் நீர்மூழ்கி மீட்பு

பட மூலாதாரம்,REUTERS

என்னென்ன கிடைத்திருக்கின்றன?

உடல்கள் எதுவும் மீட்பதற்கான வாய்ப்பு குறித்து அதிகாரிகள் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தனர்.

"இது கடற்பரப்பில் நம்பமுடியாத அளவுக்கு கடினமான முடியாத சூழல்" என்று கடலோரப் படையின் ஜான் மாகர் கூறினார்.

இதுவரை டைட்டானிக் கப்பலுக்கு அருகில் உள்ள ஒரு பெரிய குப்பைக் களத்தில் நீர்மூழ்கியின் 5 பெரிய துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் ஒரு டைட்டானியம் எண்ட் கேப், டைட்டானியம் வளையம், தரையிறங்கும் சட்டகம், கருவிகள் வைக்கும் பெட்டி ஆகியவை அடங்கும் என்று பிபிசி அறிவியல் செய்தியாளர் ஜொனாதன் அமோஸ் தெரிவித்தார்.

டைட்டனின் மீட்பு பணிக்கு கனடா கப்பலான ஹொரைசன் ஆர்க்டிக் தலைமை ஏற்றது. தற்போது மீட்புப் பணிகளை முடித்துவிட்டு தளத்துக்குத் திரும்புவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டைட்டனை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக விமர்சிக்கப்பட்டது. இதன் பாதுகாப்பு பற்றி முன்னாள் ஊழியர்கள் பலரும் குறை கூறியுள்ளனர்.

 

என்ன நடந்தது?

ஜூன், 111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி நசுங்கி நொறுங்கியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்தது

டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து நிகழ்ந்த வெடிப்பு(implosion) இந்த இழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க கடலோர காவல் படை கூறுகிறது.

இதற்கிடையே டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்பே வெளிப்படுத்தி கடல் தொழில்நுட்ப சமூகம் என்ற அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஜேம்ஸ் கேமரூனும் இதுகுறித்து முன்பே கணித்ததாகக் கூறுகிறார்.

இந்த விஷயத்தில் அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன.

டைட்டன் நீர்மூழ்கி மீட்பு

பட மூலாதாரம்,SHUTTERSTOCK

நீர்மூழ்கியில் இருந்தவர்கள் யார்யார்?

காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.

ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.

ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.

சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்

பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.

ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

டைட்டன் நீர்மூழ்கி மீட்பு

பட மூலாதாரம்,SHUTTERSTOCK

பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.

ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

நீர்மூழ்கி

பட மூலாதாரம்,OCEANGATE

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த 19 வயதேயான சுலேமான் தாவூத், உலக சாதனையை முறியடிக்க விரும்பியதால், தனது ரூபிக்ஸ் கியூப்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாய் கிறிஸ்டின் தாவூத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ரூபிக் கியூப்பை கொண்டு உலக சாதனையை பதிவு செய்வதற்காக தந்தை ஷாஜதா தனது கேமராவைக் கொண்டு சென்றிருக்கிறார். கின்னஸ் உலக சாதனைக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார்.

டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளான நேரத்தில் கிறிஸ்டின் தாவூதும் கடலின் மேற்பரப்பில் நீர்மூழ்கிக்கு உதவுவதற்காக நின்று கொண்டிருந்த போலார் பிரின்ஸ் கப்பலில் இருந்தனர். அப்போதுதான் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.

"அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு அந்த நேரத்தில் புரியவில்லை. பின்னர் நீர்மூழ்கி அங்கிருந்து கீழ்நோக்கிச் சென்றது," என்று கிறிஸ்டின் கூறினார்.

தாவூத்

பட மூலாதாரம்,DAWOOD FAMILY

டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குப் பிறகு தாவூத் குடும்பத்தினர் அளித்த முதல் பேட்டி இதுவாகும்.

டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்க்க தனது கணவருடன் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

"நான் பின்வாங்கிவிட்டு, [சுலேமானை] அழைத்துச் செல்ல இடம் கொடுத்தேன். ஏனென்றால் அவன் உண்மையில் செல்ல விரும்பினான்” என்றார் கிறிஸ்டின்.

சுலேமான், அவரது தந்தை ஷாஜதா தாவூத், மேலும் மூன்று பேர் நீர்மூழ்கியில் இறந்தனர். டைட்டனுக்குச் சொந்தமான ஓஷன்கேட்டின் 61 வயதான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு கடற்படையின் முன்னாள் ஆழ்கடல் வீரர் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் அந்த மூவர்.

தனது மகன் சுலேமான் ரூபிக்ஸ் கியூப்பை மிகவும் நேசித்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின் தாவூத்.

போகுமிடமெல்லாம் ரூபிக்ஸ் கியூபை எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்ட சுலேமான். 12 வினாடிகளில் கியூபை சரி செய்து பார்வையாளர்களை திகைக்க வைத்ததாகவும் கூறினார்.

டைட்டானிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டைட்டன் நீர்மூழ்கி எப்படிப்பட்டது?

கடல் மட்டத்திற்குக் கீழே 4000 மீட்டர் ஆழத்தை அடையும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் ‘டைட்டன் நீர்மூழ்கியும்’ ஒன்று. இத்தகைய திறன்கொண்ட நீர்மூழ்கியை, ஓஷன்கேட் என்ற தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது.

‘டைட்டன் நீர்மூழ்கியை’ போலவே ‘சைக்ளாப்ஸ்’ என்ற நீர்மூழ்கியையும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஓஷன்கேட் நிறுவனம் இயக்கி வருகிறது. ஆனால் ’டைட்டானிக் சேதத்தை’ பயணிகள் பார்வையிடுவதற்காகவே அந்த நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ‘டைட்டன் நீர்மூழ்கி’.

’டைட்டன் நீர்மூழ்கி சுமார் 10,432 கிலோ எடையளவைக் கொண்டது. மேலும் இரண்டு குவிமாடம் கொண்ட கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானிய மூடிகளோடு,13 செ.மீ அளவிற்கு ஏரோஸ்பேஸையும் இது கொண்டுள்ளது.

இதனால் கடலுக்கு அடியில் சுமார் 4000 மீட்டர் (13,123 அடி) ஆழத்திற்கு டைட்டன் நீர்மூழ்கியால் செல்ல முடியும்.

'டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள்' கடலின் மேற்பரப்பில் இருந்து 3,800 மீட்டர் ஆழத்தில் கிடக்கின்றன. டைட்டன் நீர்மூழ்கியால் அதைச் சென்றடைய முடியும்.

டைட்டன் நீர்மூழ்கி

பட மூலாதாரம்,OCEANGATE

டைட்டன் நீர்மூழ்கி எப்படி இயங்கும்?

’மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போல் அல்லாமல், டைட்டன் நீர்மூழ்கி குறைந்த அளவு சக்தியைக் கொண்டே இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதேநேரம், அது தன்னுடைய இயக்கத்தைத் தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் மற்றொரு தனி கப்பலின் துணையும், ஆதரவும் அதற்குத் தேவைப்படும்’ என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, டைட்டன் நீர்மூழ்கி முதன்முதலாக அதன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது. அதன் பின் 2021ஆம் ஆண்டு முதல் அதன் அதிகாரப்பூர்வ பயணம் தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும் டைட்டன் நீர்மூழ்கி 10 ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் பயணங்கள் அனைத்துமே டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குச் சென்றவை அல்ல.

கப்பல் ஏவுதளத்திலிருந்து புறப்படுவது முதல் மீண்டும் மேற்பரப்புக்குத் திரும்புவது வரை மணிக்கு சுமார் 4 கிமீ வேகத்தில் ‘டைட்டன் நீர்மூழ்கி’ பயணிக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cd1z5ewlp2po

Link to comment
Share on other sites

மனித உடல் பாகங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“டைட்டான்” என்ற பெயரில் ஒரு வீடியோ விளையாட்டும் விற்பனைக்கு வந்து விட்டதாம். 🤗
”ஆத்தை… படுகிற  பாட்டுக்குள்ளை, குத்தியன்…….” 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2023 at 01:07, பெருமாள் said:

என்ன நடக்குது என்பதை உனரும்முன்பே  உள்ளிருந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்று சொல்கிறார்கள் உடல் கூட சில செக்கன்களில் காணாமல் போய் விடும் பாரிய அழுத்த வெடிப்பு காரணமாக என்கிறார்கள் .

ஓம், இப்படித் தான் நடந்திருக்கிறது. அது நான், எங்காவது உடையாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகங்கள் இருந்த போது எழுதியது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

ஓம், இப்படித் தான் நடந்திருக்கிறது. அது நான், எங்காவது உடையாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகங்கள் இருந்த போது எழுதியது.

நன்றி வழகமான பாணியில் எழுதாமல் விட்டதுக்கு .

15 hours ago, தமிழ் சிறி said:

“டைட்டான்” என்ற பெயரில் ஒரு வீடியோ விளையாட்டும் விற்பனைக்கு வந்து விட்டதாம். 🤗
”ஆத்தை… படுகிற  பாட்டுக்குள்ளை, குத்தியன்…….” 😂

இன்னும் அவர்களின் விளம்பரம் தொடர்ந்து வருகிறதாம் .

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கியில் கிடைத்த கடைசி தகவல் என்ன? விபத்து எப்படி நடந்தது?

டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளானது எப்படி? அதில் கிடைத்த கடைசி தகவல் என்ன?

பட மூலாதாரம்,OCEAN GATE

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாம் கப்ரால்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 19 செப்டெம்பர் 2024, 04:25 GMT
    புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்

டைட்டன் நீர்மூழ்கியில் இருந்த குழுவினர் கடைசியாக வெளியிட்ட தகவல் என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது.

டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு, விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக வெளியிட்ட இறுதிச் செய்திகளில் ஒன்று, "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்பதுதான். இது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க கடலோரக் காவல் படையின் ஆய்வாளர்கள், டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலுக்கும் (mother ship) இடையிலான இறுதி தகவல் தொடர்புகளில் ஒன்றாக இந்த செய்தி இருந்ததாகக் கூறினர்.

டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து வெடிப்பு (implosion) நிகழ்ந்ததைத் தொடர்ந்து டைட்டனின் பின்புற வால் கூம்புப் பகுதி கடல் அடி மட்டத்தில் தங்கியது. இந்தப் படங்கள் முதல்முறையாக ஆய்விற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன.

ஆய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணை

டைட்டானிக் கப்பல் 111 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலைப் பற்றி ஆய்வு செய்வதற்காக டைட்டன் நீர்மூழ்கி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டது. டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை நெருங்குவதற்கு இரண்டு மணிநேரம் இருந்த நிலையில் கடலின் உள்ளேயே அது விபத்துக்குள்ளானது.

கடலோர காவல்படை அதிகாரிகள் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 16) இதற்காக இரண்டு வார கால ஆய்வைத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், எதிர்காலத்தில் இதேபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பரிந்துரைகளை வழங்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வுக்காக இதேபோன்ற நீர்மூழ்கியின் பயணத்தை ஆய்வாளர்கள் மறுபடியும் மேற்கொண்டனர். டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலான போலார் பிரின்ஸ்க்கும் இடையில் பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளையும் வெளியிட்டனர்.

டைட்டன் நீர்மூழ்கி உள்ளூர் நேரப்படி 09:17க்கு ஆழ்கடல் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. மூலக்கப்பலில் இருந்த உதவிப் பணியாளர்கள் நீர்மூழ்கியின் ஆழம், எடை, மூலக் கப்பலைப் பார்க்க முடிகிறதா போன்றவற்றைக் கண்காணித்து வந்தனர்.

முதலில் தகவல் தொடர்புகள் மோசமாக இருந்தன. ஆனால் சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, டைட்டன் "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்று செய்தி அனுப்பியது.

அதன் கடைசி செய்தி, உள்ளூர் நேரப்படி 10:47க்கு, 3,346மீ ஆழத்தில் இருக்கும்போது வந்தது. அதன்பின், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 

டைட்டன் நீர்மூழ்கி பற்றிய கண்டுபிடிப்புகள்

டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளானது எப்படி? அதில் கிடைத்த கடைசி தகவல் என்ன?

பட மூலாதாரம்,US COAST GUARD

படக்குறிப்பு, டைட்டனின் பின்புறப் பகுதி கடல் அடிமட்டத்தில் இருக்கும் காட்சி

டைட்டனை பற்றிய அவர்களின் கண்டுபிடிப்புகளை முன்வைத்தனர். அது பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், திறந்த வானிலை மற்றும் பிற கூறுகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருந்தது என்றும், அதன் பாகங்கள் மூன்றாம் தரப்பினரின் சோதனைக்கு உள்ளாகவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த விபத்துக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பயணங்களில், இதுபோன்ற நீர்மூழ்கிகள் எதிர்கொண்ட கடுமையான சிக்கல்களையும் அவர்கள் குறிப்பிட்டனர். 2021, 2022 ஆகிய ஆண்டுகளில், டைட்டானிக் இடிபாடுகளை நோக்கி நீர்மூழ்கி 13 முறை பயணித்தது. அப்போது 118 முறை உபகரணங்களில் சிக்கல்கள் ஏற்பட்டது.

ஒரு பயணத்தின்போது, கடலில் இருந்து வெளியே கொண்டு வருகையில் நீர்மூழ்கியின் முன் பகுதி கடல் அடிமட்டத்தில் விழுந்தது. 3,500 மீட்டர் ஆழத்தில் அதன் த்ரஸ்டர்கள் (thrusters) செயலிழந்தன. மற்றொரு பயணத்தின்போது அதன் பேட்டரிகள் செயலிழந்து 27 மணிநேரம் அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதை உற்பத்தி செய்த ஓஷன் கேட் (OceanGate) நிறுவனம், ஒரு நீர்மூழ்கியைத் தயாரிக்க மேற்கொள்ளும் வடிவமைப்புத் தேர்வுகள், பாதுகாப்புத் திறன் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவது குறித்து முன்பு சிக்கல்களைச் சந்தித்திருக்கிறது.

 

ஓஷன் கேட் நிறுவனம்தான் இதற்கு காரணமா?

டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளானது எப்படி? அதில் கிடைத்த கடைசி தகவல் என்ன?

பட மூலாதாரம்,SUPPLIED VIA REUTERS / AFP

படக்குறிப்பு, ஸ்டாக்டன் ரஷ், ஹமிஷ் ஹார்டிங், ஷாஜதா தாவூத், அவரது மகன் சுலேமான் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் டைட்டனில் இருந்தனர்.

நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர் டோனி நிசென், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் "தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தன்னைக் கஷ்டப்படுத்தியதாக" கூறினார்.

டைட்டனில் பயணித்த ஓஷன் கேட் நிறுவனத்தின் மறைந்த தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பெரும்பாலான பொறியியல் முடிவுகளை எடுத்ததாக நிசென் கூறினார். அவருடன் பணிபுரிவது கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"ஸ்டாக்டன் தான் விரும்பியதை நிறைவேற்றப் போராடுவார், என்ன நடந்தாலும் அதில் இருந்து பின்வாங்கமாட்டார்” என்று அவர் கூறினார்.

"பெரும்பான்மையான ஊழியர்கள் எப்போதும் ஸ்டாக்டன் சொல்வதை ஒப்புக்கொள்வார்கள்; அது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்."

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஓஷன் கேட் நிறுவனம், தான் நடத்திய அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியது. நிறுவனத்தில் தற்போது முழுநேர ஊழியர்கள் இல்லை, ஆனால் விசாரணைக்கு ஒரு வழக்கறிஞர் ஒத்துழைப்பார் என்று அது கூறியது.

ஏற்கெனவே நடந்த 15 மாத விசாரணையின் முதல் பொது விசாரணை திங்கட்கிழமையன்று தொடங்கியது.

தனியார் நிறுவனங்கள் ஆழ்கடலில் மேற்கொள்ளும் ஆய்வுகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய நீடித்த விவாதத்தை டைட்டனின் விபத்து குறித்த பதிலளிக்கப்படாத கேள்விகள் எழுப்பியுள்ளன.

டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளானது எப்படி? அதில் கிடைத்த கடைசி தகவல் என்ன?

பட மூலாதாரம்,OCEAN GATE

பத்து முன்னாள் ஓஷன்கேட் ஊழியர்கள், அதன் இணை நிறுவனர் கில்லர்மோ சோன்லீன், கடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடல் ஆய்வு நிபுணர்கள் ஆகியோரிடம் கடலோர காவல்படையின் மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் (எம்பிஐ) விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் என்பது அமெரிக்க கடல்சார் விபத்துகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மிகவும் முக்கிய அமைப்பு. இது வருடத்திற்கு ஒரு விசாரணையை மட்டுமே நடத்துகிறது என்று அதன் தலைவர் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.

"இதுவரை நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான விசாரணைகளில், ஒரு வழக்கு மட்டுமே இந்த நிலையை எட்டுகிறது" என்று ஜேசன் நியூபாவர் கூறினார்.

"இந்த விசாரணையின் மூலம் இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, இது போல எதுவும் நடக்காமல் தடுக்கவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்."

உயர்மட்ட கடலோர காவல்படை மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (NTSB) அதிகாரிகளின் குழுவிற்கு, சிவில் தண்டனைகளைப் பரிந்துரைக்க அதிகாரம் உள்ளது. மேலும் கிரிமினல் வழக்குக்கான தண்டனையை அமெரிக்க நீதித்துறையிடம் பரிந்துரை செய்யவும் அதிகாரம் உள்ளது.

டைட்டன் நீர்மூழ்கி ஜூன் 18, 2023 அன்று அதன் மூலக் கப்பலான போலார் பிரின்ஸ் உடனான தொடர்பை இழந்தது. அதன் பிறகு நான்கு அரசாங்கங்கள் இதைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டன.

ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளரான ஹமிஷ் ஹார்டிங், மூத்த பிரெஞ்சு டைவர் பால் ஹென்றி நர்கோலெட், பிரிட்டிஷ்-பாகிஸ்தாதான் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது 19 வயது மகன் சுலேமான் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம்   ராமேசுவரம்: இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மீனவர்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் வட மாகாண கடற்பகுதிகிளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தி விட்டுச் செல்கிறார்கள், மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிவிட்டுச் செல்கிறார்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும் கடலின் சூழலியலையும் அழிக்கிறார்கள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர்ப் போராட்டங்களை நடத்தினர்.   இலங்கை மீனவர்களுக்கும் அபராதம், சிறை தண்டனை: இந்தத் தொடர் போராட்டங்களின் விளைவாக, இலங்கை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகள் மற்றும் மீனவர்களுக்கும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் கடந்த ஜனவரி 24, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், எல்லை மீறும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை ரூ.50 லட்சம், 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.2 கோடி, 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.10 கோடி, 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.15 கோடி, 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு இலங்கை ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம் விதிக்க முடியும். இதன் அடிப்படையில் இலங்கை எல்லைக்குள் சிறைப்பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பபடுகிறது. இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்தாமல், முதல் முறையாக சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்கள். படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடினால் படகுகளும் விடுவிக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனையும் படகின் ஓட்டுநர்களுக்கு முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலே சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலும் மீனவர்களுக்கு அபராதம் விதித்தல், அபராதத்தை கட்டத் தவறினால் சிறை தண்டனை விதிப்பது, அல்லது அபராதத்தையும் சிறை தண்டனையும் ஒரு சேர விதிப்பது என தற்போது முழுமையாக வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டங்களை இலங்கை நீதிமன்றங்கள் அமல்படுத்த துவங்கி உள்ளன.   இது குறித்து தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியது: “கடந்த 2010-ல் துவங்கி பல கட்டங்களாக சென்னை, டெல்லி, கொழும்பு ஆகிய நகரங்களில் இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளைக் கொண்டு பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் இன்று வரையிலும் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே போகிறது.   இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தினை இலங்கை அரசு படிப்படியாக அமல்படுத்தி தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்க துவங்கி உள்ளது. தினக்கூலிகளாக கடலுக்குச் செல்லும் மீனவர்களால் எவ்வாறு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அபராதங்களை செலுத்த முடியும்? எனவே, இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச்சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதுடன், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார்.   தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? | Sri Lanka will impose crores of fines on TN fishermen: What is the central govt going to do? - hindutamil.in
    • எனக்கே புரியாத அளவுக்கு சிறியர்?? வாழ்த்துக்கள் 🤣
    • பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன. இவை எந்தெந்த நாடுகள்? 
    • வரலாற்று ரீதியாக யாழ் பல்கலைக்கழக சமூகம் மிகச்சிறந்த பணிகளை ஆற்றி வருகிறது. அதன் போதும் இவ்வாறான ஓரிரு குழுவினர் அறிக்கைகளை மட்டுமே விட்டு குழப்பங்களை உருவாக்குவது வழமை. அது சார்ந்த பதிவு என்பதால் இங்கே பதித்தேன். நன்றி. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.